களமுனைகளில் இராணுவ ரீதியான பல்வேறு வெற்றிகளையும் ஈட்டிய போராளிகள தளபதிகள் திருமண பந்தத்திற்குள் வந்தவுடன் களமுனைகளை மறந்து குடும்பம் உறவினர் உறவு என்ற வட்டகைக்குள் சிந்திக்கத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக போராட்டம் என்ற கொள்கையை விட குடும்பத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தனர். இத்தகைய போராளிகள் தளபதிகள் மத்தியில் பாப்பாவும் இருந்த போதும் பாப்பா சற்று வித்தியாசமானவர். பாப்பா எப்பொழுதும் ஜொலியான மனிதராக விளங்கினார். பாப்பாவின் மன உணர்வுகளையும் பாப்பாவின் திருமணம் தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களையும் சற்று மேலோட்டமாக பார்த்து விட்டு செல்வது பொருத்தமாக இருக்கும்.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 26 ஜூலை, 2013
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்-47
புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பாப்பாவை வன்னியில் சந்தித்ததும் பாப்பாவிடம் உமக்கு தலைவரிடம் சொல்லி இன்னொரு பெண் பார்க்கச் சொல்கிறேன். ஏனென்றால் இப்பொழுதும் மாப்பிள்ளை போன்று இருக்கின்றீர் என்று கூற அயலில் இருந்த தளபதிகள் பாப்பா எப்பொழுதும் மாப்பிள்ளை தான் என்று கூறி கிண்டலடித்தனர். இதற்கு அன்ரன் பாலசிங்கம் பாப்பா எல்லோருக்கும் விளையாட்டுக் காட்டி இப்பொழுது விளையாட்டுத்துறை பொறுப்பாளராக பதவியை எடுத்துக் கொண்டு இனி தலைவருக்கும் விளையாட்டுக் காட்டி விடுவார். பாவம் தலைவர். தமிழ்ச் செல்வன் பாப்பாவின் விளையாட்டு தெரியாமல் பொறுப்பாளராக நியமித்து விட்டாரோ தெரியாது.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்-46
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தளபதிகள் புடை சூழ வீற்றிருந்து சுவாரஸ்யமாக பல்Nறு விடயங்கள் தொடர்பாக பம்பலடிக்கத் தொடங்கினார். தளபதிகளின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். ஏனென்றால் இயக்கத்தில் ஏனைய தளபதிகள் கதைக்கத் தயங்குகின்ற விடயங்களைக் கூட அன்ரன் பாலசிங்கம் வெளிப்படையாக பம்பலாக கூறி முடித்த விடுவார். இவ்வாறு எல்லாத் தளபதிகளையும் போராளிகளையும் கிண்டலடித்து பம்பலடிப்பதில் அன்ரன் பாலசிங்கத்திற்கு நிகராக இயக்கத்தில் எவருமே இருந்ததில்லை. அன்ரன் பாலசிங்கம் போன்று ஏனைய தளபதிகள் அல்லது பொறுப்பாளர்கள் யாராவது பம்பலடித்து விட்டால் அது இயக்கத்தில் பெரும் விசாரணைகள் வரை போய் முடிவதுண்டு.
வியாழன், 18 ஏப்ரல், 2013
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 34
அன்ரன் பாலசிங்கம் சம்பந்தனிடம் நக்கலாகக் கேட்ட பெண் வேறுயாருமல்ல இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கதான் அவர். உங்கட ஆள் என்ன செய்கிறா இப்ப? என்று சம்பந்தனிடம் பாலசிங்கம் நக்கலாகக் கேட்டது சந்திரிகாவையே. அரசியல் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் உரையாடுகின்ற விடுதலைப் புலிகளின் உயர்மட்ட அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி அல்லது மத்தியகுழு உறுப்பினர்களாக இருந்தாலும் சரி மிகுந்த அவதானத்துடனேயே தங்களது உரையாடல்களை மேற்கொள்வார்கள். பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனோ அல்லது வெளிநாட்டு பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் போன்றோருடன் உரையாடுகின்ற பொழுது தங்களது கருத்தாடல்களில் ஏதாவது பிழைகள் இருந்துவிட்டால் பிறகு அதனால் ஏற்படும் விளைவுகள் பாதிப்புகள் என்பனவற்றிற்கான முழுப் பழியையும் தங்கள் மீதே போட்டுவிடுவார்கள் என்ற அச்சம் அவர்களிடையே இருந்தது. தண்டனை எப்படியிருக்கும் என்பதும் அவர்கள் அறிந்ததே. ஆனால், அன்ரன் பாலசிங்கத்தைப் பொறுத்தவரையில், எவருடனும் நக்கல் நையாண்டியுடனேயே தனது இராஜ தந்திர உரையாடல்களையும் நடத்துவார். ஆட்களுக்குத் தக்கபடி கொச்சைத்தன்மையின் அளவும் கூடிக் குறையும்.
திங்கள், 15 ஏப்ரல், 2013
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் (பகுதி 33)
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவப் பலத்தின் மதிப்பீட்டினை மேற்கொண்டு வந்த பல வெளிநாட்டு ஊடகங்களும், உள்நாட்டு ஊடகங்களும், தங்களால் மதிப்பீடு செய்ய முடியாது எனவும் அந்தளவு தூரத்திற்கு புலிகளின் இராணுவ ரீதியிலான பலம் என்பது மதிப்பிட முடியாத அளவிற்கு மர்மமான முறையில் இருப்பதாகவும் பல ஆய்வாளர்களும் பத்தி எழுத்தாளர்களும் ஊடகங்களும் எழுதிக் கொண்டிருந்த போதிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்ததைத் தொடர்ந்து ஏற்படத் தொடங்கிய இராணுவரீதியிலான பலவீனம் பால்ராஜின் இழப்பினைத் தொடர்ந்து பெரியளவிலான பலவீனமாக மாற்றம் கண்டிருந்தது.
புதன், 10 ஏப்ரல், 2013
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 32
தொடர்ந்து வவுனியாவைத் தளமாகக் கொண்டு இயங்கிய மகிழ்ச்சியின் மறுபெயர் கொண்ட அந்தப் பாராளுமன்ற உறுப்பினரை கிளிநொச்சிக்கு உடனடியாக வருமாறு பொட்டம்மானிடமிருந்து தகவல் அனுப்பப்படுகிறது. இருந்த போதிலும் தான் வன்னிக்குச் சென்றால் நிலைமை பாதகமாக அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தான் அவசரமாக இந்தியாவிற்கு செல்லவேண்டி உள்ளதால் இந்தியாவிற்கு சென்றுவிட்டு வந்து உடனடியாக சந்திப்பதாக தகவல் அனுப்பி வைக்கிறார்.
சனி, 16 பிப்ரவரி, 2013
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 21
புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடனான ஐந்தாவது சந்திப்பில் என்ன நடக்குமோ? முன்னர் நடந்த சந்திப்புப் போல் கசப்பானதாக இருக்குமோ என்ற ஏக்கத்துடன் இறைவன் எனப்படும் தவபாலன் காத்திருந்த வேளை இந்த ஐந்தாவது சந்திப்பு ஒரு வாரத்திற்கு பின்போடப்பட்டு ஒரு வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் அவசர அழைப்பு தமிழன்பன் எனப்படும் ஜவானிடம் விடுக்கப்பட்டது. உடனடியாக விடயத்தை இறைவனிடம் தெரியப்படுத்திய தமிழன்பன் இருவரும் சந்திப்பிற்கு செல்வதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
வெள்ளி, 15 பிப்ரவரி, 2013
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 20
தவபாலன் தன்னை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முழுமையாக இணைத்ததைத் தொடர்ந்து அவர் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக ஆரம்பத்தில் புலிகளின் ஏனைய துறைசார்ந்தவர்களுக்கு ஓரளவுக்கு மரியாதை கொடுத்து வந்த தவபாலன், இறைவன் என்ற நாமத்தைப் பெற்று தன்னை முழுமையாக இயக்கத்தில் இணைத்துக் கொண்டதைத் தொடர்ந்து ஏனைய துறைசார்ந்த போராளிகளை மதிக்கத் தவறியிருந்தார். இதனால் பல துறைசார்ந்த போராளிகளும் கடுப்புடனேயே இருந்தனர்.
சனி, 26 ஜனவரி, 2013
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 19
இந்தியாவின் தமிழ்நாடு வரையும் விடுதலைப் புலிகளின் புலிகளின் குரல் வானொலிச் சேவை விஸ்தரிப்புப் பெற்றிருந்த போதிலும் இந்த விஸ்தரிப்பானது நீண்டநாட்களுக்கு நிலைத்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளால் நோர்வே அனுசரணையுடன் கொள்வனவு செய்யப்பட்டிருந்த நவீன வானொலிக் கருவியானது மீண்டும் விடுதலைப் புலிகளுக்கும் அரசபடைகளுக்கும் இடையில் போர் மூண்டதைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தங்கள் வானொலிச் சேவையை விடுதலைப் புலிகள் மட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 18
விடுதலைப் புலிகளிடம் அளிக்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக விடுதலைப் புலிகளின் தேவைப்பட்டியல் உள்ளடங்கிய பட்டியலுடன் நோர்வேக் குழுவினர் உடனடியாகவே தென்பகுதிக்கு விசேட உலங்குவானூர்தியில் விரைந்து சென்றனர். இவ்வாறு சென்ற நோர்வேக் குழுவினர் அரசமட்டத்தில் பேச்சுவார்த்தைக் குழுவின் முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டனர்.
ஞாயிறு, 13 ஜனவரி, 2013
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 17
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் நோர்வே அரசாங்கத்திற்கும் இடையே இரகசியத் தொடர்புகள் பல இருந்ததாக ஹெல உறுமய, ஜே.வி.பி உள்ளிட்ட பல்வேறு தென்னிலங்கையில் உள்ள கடும்போக்குவாத கட்சிகள் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்த போதிலும் இந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நோர்வே அரசாங்கம் மறுத்துவந்திருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கமும், அரசாங்கமும் கூட, தென்னிலங்கை கடும்போக்குவாத கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்து வந்திருந்தனர்.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 16
ஏற்கனவே விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் தொடர்பில் பார்த்து வருகின்ற நாம் யாழ்ப்பாணத்தின் ஊடகங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் மேலோட்டமாக பார்த்துள்ள போதிலும் அந்த ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரிவாக பார்ப்பதற்கு முன்னர் வன்னிப் பகுதியில் இயங்கிய புலிகளின் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றியும் பார்த்துவிட்டு பின்னர் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் விரிவான பார்வையை செலுத்துவதே பொருத்தமானதாக இருக்கும்.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள்! பகுதி 15
விடுதலைப் புலிகளின் அரசியல் துறைசார்ந்த செயற்பாடுகள் முன்னணியில் உள்ளதா அல்லது கடற்புலிகளின் அரசியல் துறைசார்ந்த செயற்பாடுகள் முன்னணியில் உள்ளதா? என்ற ஒரு போட்டி யாழ் மாவட்டத்தில் மட்டுமல்லாது விடுதலைப் புலிகளின் ஆளுகையின் கீழ் இருந்த அனைத்துப் பகுதிகளிலும் இருந்தது. யாழ் மாவட்டத்தில் இந்தப் போட்டி கூடுதலாக நிலவிவந்தது.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 14
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில் தங்களது தேவைக்காக எவரையும் கையாள தயாராகவே இருந்தனர். தங்களது தேவை முடிந்தவுடன் தாங்கள் பயன்படுத்தியவர்களை உதறித்தள்ளிவிட்டு செல்வதிலும் அவர்கள் கைதேர்ந்தவர்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அரசியல்துறை, புலனாய்வுத் துறை, கடற்புலிகள் அணி, சர்வதேச பிரிவு, ஆகிய நான்கு பிரிவுகளுமே கடும் போட்டியில் இயங்கிய பிரிவுகளாகும்.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 13
யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் அனுமதியுடன் படைத்துறையினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி செய்தி சேகரிக்கும் அனுமதி யாழ்ப்பாணத்தில் இயங்கிய உதயன், வலம்புரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளுக்கும் சுயாதீனமாக இயங்கிய ஊடகவியலாளர்களில் தயாபரன், நவம், நிமலராஜன், தவச்செல்வன் ஆகியோருக்கே இந்த அனுமதி புலிகளால் மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ வழங்கப்பட்டிருந்தது.
சனி, 15 டிசம்பர், 2012
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 9
யாழ் மாநகரசபையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பில் பல்வேறு ஊகங்களும் விசாரணைகளும் இடம்பெற்ற போதிலும் அதன் சூத்திரதாரிகள் யார் என்பதில் தொடர்ச்சியான குழப்பமே நிலவி வந்தது. அல்லது தற்போதும் நிலவி வருகிறது. இந்தக் குண்டுவெடிப்பில் படை அதிகாரிகள் உட்பட பல அரச ஊழியர்களும் கொல்லப்பட்டனர். தங்களது மாநகர சபையிலேயே ஒரு ஊழியராக பணியாற்றியவாறு புலிகளுக்கு தகவல் வழங்கியபடி ஒருவர் இருக்கிறார் என்பதை யாரும் அப்போது அறிந்திருக்கவில்லை. தங்களிடையேதான் இருக்கிறார் அவர் என எவருமே எண்ணியிருக்க மாட்டார்கள்.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 11
தனது முதலாவது முயற்சி வெற்றி பெறாத தாக்கத்துடன் கிளிநொச்சியிலுள்ள தனது அரசியல்துறை நடுவகப்பணியகத்திற்கு திரும்பிய தமிழ்ச்செல்வன் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு தகுதியான ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். மிகவும் இரகசியம் பேணப்படவேண்டிய இந்த விடயம் தொடர்பில் ஒரு பொருத்தமான ஆளை கண்டுபிடிப்பது தமிழ்ச்செல்வனுக்கு கஸ்டமாகவே இருந்தது. ஏனெனில் இவ்விடயத்தில் இரண்டு விடயங்கள் முக்கியமானவையாக காணப்பட்டன. ஒன்று இவ்விடயம் புலனாய்வுத் துறைக்கு தெரியாமல் இருக்கவேண்டும். காரணம் புலனாய்வுத் துறைக்குரிய முழுமையான பொறுப்பும் யாழ்மாவட்டம் உட்பட அனைத்துப் பிரதேசங்களையும் கையாளும் பணி பொட்டம்மானுக்குரிய பணியாகும். பொட்டம்மான் பார்க்கவேண்டிய வேலையை வேறொரு பிரிவினர் பார்ப்பது இயக்க நடவடிக்கைகளுக்கு உகந்த செயற்பாடு அல்ல.
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி 12
பரணியைத் தமிழ்ச்செல்வன் இப்பணிக்கென நியமித்ததைத் தொடர்ந்து பரணி இப்பணியில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினார். இதே வேளை மறுபுறத்தில் பொட்டம்மான் நசீர் என்பவரை இலங்கையிலுள்ள ஊடகங்கள் அனைத்தையும் கையாளுவதற்கான பொறுப்பாளராக நியமித்திருந்தார். குறித்த யாழ்ப்பாணப் பத்திரிகை தொடர்பான பல்வேறு இரகசியத்தகவல்கள் மேலதிகமாக நசீருக்கு கிடைத்திருந்தது. குறித்த தகவல்களை உறுதிப்படுத்துவதற்காக கொழும்பிலிருந்த சிவராமை நசீர் அவசரமாக வன்னிக்கு அழைத்திருந்தார். சமாதான சூழ்நிலை நிலவிய காலத்திலேயே இச் சம்பவம் இடம்பெற்றது.
புதன், 5 டிசம்பர், 2012
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் – பகுதி 10
அன்ரன் பாலசிங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதும் அன்ரன் பாலசிங்கம் உடனடியாகவே விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பு கொண்டு நிலமையை விளங்கப்படுத்தியதுடன் குறித்த வித்தியாசமான பத்திரிகையாளருடைய தேவைப்பாடு அவரை தொடர்ந்து எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விடயங்களை பிரபாகரனிற்கு விளங்கப்படுத்தினார். அன்ரன் பாலசிங்கத்தின் நீண்ட விளக்கங்களை கேட்ட பிரபாகரன் இந்த விளக்கங்களை ஒரு கருத்தாகவே பொருட்படுத்தாமல் இது தவறுதலாக நடந்திருக்கலாம் இது தொடர்பில் நான் விசாரித்து சொல்கிறேன் எனக் கூறிவிட்டு பாலசிங்கத்தினுடனான தொடர்புகளை துண்டித்து விட்டு உடனடியாக பொட்டம்மானுடன் தொடர்புகொண்டு நிலமையை கேட்க முற்பட்டார்.
ஞாயிறு, 25 நவம்பர், 2012
விடுதலைப் புலிகளை அழித்த ஊடகங்கள் ! பகுதி-8
விடுதலைப் புலிகள் விருந்தோம்பலில் கைதேர்ந்தவர்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. விடுதலைப் புலிகளின் விருந்தோம்பல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேரடியாக அனுபவித்தும் அறிந்தும் இருக்கின்றனர். அத்தோடு குறிப்பாக சமாதான ஏற்பாட்டாளர்களாக இருந்த நோர்வே குழுவினர் மற்றும் ஜப்பானிய தூதுவர் யசூசி அகாசி போன்றவர்களிடம் கேட்டால் விடுதலைப் புலிகளின் விருந்தோம்பல் தொடர்பில் அவர்கள் இன்றில்லாத சூழ்நிலையிலும் மனமார பாராட்டியே புகழ்வார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



