புதன், 12 பிப்ரவரி, 2014

பிணத்துடன் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த சுவிஸ் நர்ஸ்..

சுவிஸ் நாட்டை சேர்ந்த நர்ஸ் ஒருவர் பிணத்துடன் புகைபடம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு நண்பர்களுக்கு பகிர்ந்த குற்றத்திற்காக 800 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.



சுவிட்சர்லாந்தை சேர்ந்த நர்ஸ் Blaze Binder. 37 வயதான இவர் முதியோர்கள் இல்லம் ஒன்றில் நர்ஸாக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் அந்த முதியோர் இல்லத்தில் ஒருவர் இறந்து விட்டார். அவருடைய பிணத்திற்கு அருகில் உட்கார்ந்து கொண்டு புகைப்படம் எடுத்து அதை Blaze Binder, தனது ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அதோடு ஆன்மா திருடன் என்று தனக்கு தானே பெயர் வைத்துக்கொண்டு தன்னை அனைத்து ஃபேஸ் புக பயனாளிகளும் நண்பர்களாக்கி கொள்ள வேண்டுகோளும் விடுத்துள்ளார். மேலும் அதில் அவர் சாத்தான் வாழ்க என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய இந்த செய்கையால் அதிர்ச்சி அடைந்த முதியோர் இல்ல நிர்வாகிகள் அவர் மீது காவல்துறையினரிடம் புகார் கொடுத்தனர். அவர் மீது குற்றச்சாட்டும் பதிவு செய்யபட்டது.

அவருக்கு சுவிஸ் நீதிமன்றம் 800 பவுண்டுகள் அபராதம் விதித்து எச்சரிக்கயும் விடுத்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல