வியாழன், 17 ஏப்ரல், 2014

யாழ் நகரில் இளம் பெண்ணின் மரணத்திற்கு காரணமான கத்தோலிக்க குருமார்

யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்து திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட குருநகரைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா என்ற இளம்பெண்ணின் பூதவுடலை யாழ்.ஆயர் இல்லத்திற்கு முன்பாக வைத்து உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளம்பெண்ணின் மரணத்திற்கு ஆயர் இல்லத்திலுள்ள குருமார்களில் இருவரே காரணம் எனக்கூறி உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

ஜெரோமியின் மரணத்திற்கு காரணமாக இருந்த இரு குருமார்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்திருந்த போதும், இரு தினங்களாகியும், இரு குருமார்களுக்கு எதிராக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல