ஞாயிறு, 25 மே, 2014

புலி முக்கியஸ்தர் மூவர் மலேசியாவில் கைது!

புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்கிற சந்தேகத்தில் மூன்று ஆண்கள் மலேசியாவில் சிலாங்கூர் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

பயங்கரவாத ஒழிப்பு விசேட பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி மேற்கொண்ட விசேட தேடுதலில் வெவ்வேறு இடங்களில் வைத்து இவர்கள் பிடிக்கப்ப்ட்டனர்.

இவர்கள் யூ. என். எச். சி. ஆர் அமைப்பால் வழங்கப்பட்ட அகதிகள் அடையாள அட்டைகள் உள்ளன. புலிகள் அமைப்புக்கு புத்துயிர் கொடுக்கின்ற முயற்சியில் சர்வதேச அளவில் இவர்கள் ஈடுபட்டு வந்து உள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இவர்கள் 2004 இல் மலேசியா வந்து உள்ளனர். பிரசார வேலைகள், நிதி சேகரிப்புக்கள் ஆகியவற்றுக்கான தளமாக மலேசியாவை பாவித்து உள்ளனர்.

புலி ஆதரவு பிரசார பிரசுரங்கள், வெளிநாட்டு ரொக்கப் பணம் ஆகியன இவர்களின் உடைமையில் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல