சனி, 10 மே, 2014

அனந்தியை முதலமைச்சர் ஆக்கும் நடவடிக்கை மும்முரம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் எழிலனின் மனைவியை அனந்தி சசிதரனை வட மாகாண முதலமைச்சர் ஆக்குகின்றமைக்கு பகீரத முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிகின்றது.



முதலமைச்சர் பதவியை சி. வி. விக்னேஸ்வரன் இராஜினாமா செய்ய வேண்டும் என்று புலம்பெயர் தமிழர்களில் ஒரு சாரார் வலியுறுத்தி வருகின்றனர். விக்னேஸ்வரனின் நிர்வாகத்தை அரசு நடத்துகின்ற விதத்தை பார்க்கின்றபோது இவர் இப்பதவியை தொடர்கின்றமையில் அர்த்தம் கிடையாது என்று இப்புலம்பெயர் தமிழர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

ஆனால் விக்னேஸ்வரனின் இராஜினாமா அரசுக்கு மிகவும் சங்கடமான நிலையை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். ஏனென்றால் இவரது இடத்துக்கு அனந்தி சசிதரனை கொண்டு வருகின்ற முன்னெடுப்புக்கள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

தாய்நாடு
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல