தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 1 கப்
பச்சரிசி - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் பருப்புக்களை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு, அத்துடன், மிளகு, சீரகம், தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி, பின் அரைத்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, அதன் மேல் சிறிது தேங்காய் துண்டுகளை தூவி, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், மிளகு அடை ரெடி!!!

இட்லி அரிசி - 1 கப்
பச்சரிசி - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் பருப்புக்களை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு, அத்துடன், மிளகு, சீரகம், தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தடவி, பின் அரைத்து வைத்துள்ள மாவை தோசைகளாக ஊற்றி, அதன் மேல் சிறிது தேங்காய் துண்டுகளை தூவி, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், மிளகு அடை ரெடி!!!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக