செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

உடலுறவு' கொள்ள ஆசை? ஆனா கருத்தரிக்க வேண்டாமா!

உங்களுக்கு உடலுறவு கொள்ள ஆசை, ஆனால் கருத்தரிக்கக் கூடாதா? இக்காலத்தில் கருத்தரிப்பதே கஷ்டமாக இருக்கும் நிலையில், திருமணத்திற்கு பின் பலர் ஒருசில காரணங்களால் விரைவில் கருத்தரிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருப்பார்கள். இதனால் கருத்தடை சாதனங்களை பயன்படுத்தி, சந்தோஷத்தை அனுபவிக்க நினைத்திருப்பார்கள். இருப்பினும் சில நேரங்களில் தம்மை அறியாமல் கருத்தரிக்க நேரிடுகிறது.



இப்படி கருத்தரித்த பின்னர், கருவை கலைக்க மனமில்லாமலும், குழந்தையை பெற்றுக் கொள்ள மனமில்லாமலும், பலர் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக் கொள்கின்றனர். எனவே கருத்தரிக்க விருப்பமில்லை ஆனால் உடலுறவு கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தால், உடலுறவு கொள்ளும் போதும், அதில் ஈடுபடும் முன்னரும் ஒருசில ட்ரிக்ஸ்களை பின்பற்றினால், கருத்தரிப்பதில் இருந்து தப்பிக்கலாம்.

எப்போது உடலுறவு கொள்ளும் போதும், காண்டம் பயன்படுத்தாமல் ஈடுபடாதீர்கள். இதில் நீங்கள் உறுதியாக இருந்தால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவும்.

கருத்தடை மாத்திரைகளை பெண்கள் உறவில் ஈடுபடும் முன் எடுத்து வந்தால், கருத்தரிப்பதை தவிர்க்கலாம்.

எவ்வளவு தான் கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தினாலும் கருத்தரித்துவிடுவோமோ என்ற அச்சம் இருக்கும் சிலருக்கு இருக்கும். அத்தகையவர்கள், மாதவிடாய் காலத்தின் போது உடலுறவில் பயமின்றி ஈடுபடலாம். மேலும் நிபுணர்களும் இது பாதுகாப்பான காலம் என்று கூறுகிறார்கள்.

தினமும் கருத்தடை மாத்திரைகளை பெண்கள் எடுத்து வருவது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், இப்படி செய்தால் நிச்சயம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

உடலுறவில் ஈடுபடும் போது சில நேரங்களில் ஆணுறை அணியாமல், ஆண்கள் உறவில் ஈடுபட்டு, சந்தோஷத்தின் உச்சக்கட்டத்தை அடைந்து விந்தணு வெளியேறும் தருணம் எடுப்பார்கள். இப்படி செய்வதால் கருத்தரிக்க வாய்ப்பில்லை என்று நினைக்க வேண்டாம். சில நேங்களில் இவற்றாலும் கருத்தரிக்கக்கூடும்.

சிலர் உறவில் ஈடுபடும் முன், தம்பதியர்கள் கை விளையாட்டில் ஈடுபடுவார்கள். இப்படி விளையாடுவதால், உறவில் ஈடுபடும் போது நம்மை அறியாமல் திடீரென்று விந்தணு உள்ளே செல்லும் வாய்ப்புள்ளது. எனவே கை விளையாட்டில் அதிகம் ஈடுபட வேண்டாம்.

காண்டம் அணிந்து உறவு கொள்ளும் போது, விந்தணு வெளியேறிய பின் நீண்ட நேரம் ஆணுறுப்பை பெண்ணுறுப்பின் உள்ளே வைத்திருக்க வேண்டாம். ஏனெனில் சில நேரங்களில் அதில் ஓட்டை ஏற்பட்டு, கருத்தரிக்க செய்துவிடும். எனவே விந்தணு வெளியேறிய பின்னர், உடனே வெளியே எடுக்க வேண்டியது அவசியம்.

உங்களுக்கு கருத்தரிக்க விருப்பமில்லை, ஆனால் உறவில் ஈடுபட வேண்டுமானால், பெண்கள் புரோஜெஸ்டின் என்னும் ஹார்மோன் ஊசியை போட்டுக் கொள்ள வேண்டும். இந்த வகையான ஊசியானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தவறாமல் போட்டு வந்தால், கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம்.

உங்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் சுழற்சி சீராக நடந்தால், அதனை கணக்கிட்டு உறவில் ஈடுபட்டாலும், கருத்தரிக்க வாய்ப்பில்லை. அதாவது மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் ஏழு நாட்களுக்கு முன்னும், அது முடிந்து ஏழு நாட்களுக்கு பிறகும் உறவில் ஈடுபட்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு இல்லை. ஆகவே சரியாக கணக்கிட்டு உறவில் ஈடுபடுங்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல