புதன், 3 செப்டம்பர், 2014

மூக்கின் மேல் சொரசொரவென்று உள்ளதா? அதைப் போக்க இதோ சில வழிகள்!!!

எண்ணெய் பசை சருமத்தினர் தான் அதிக அளவில் வெள்ளைப்புள்ளிகளின் பிரச்சனைகளுக்கு பாதிக்கப்படுவார்கள். அதிலும் இந்த வெள்ளைப்புள்ளிகளானது மூக்கின் மேலேயும், அதனைச் சுற்றியும், தாடை மற்றும் கன்னங்களில் வரக்கூடியவை. இவையும் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்று, அழகை பாழாக்கக்கூடியவை.


குறிப்பாக இவை சருமத்தின் மென்மைத்தன்மையை பாதிக்கும். இதற்கு முக்கிய காரணம் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதால், அவ்விடத்தில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் அப்படியே தங்கி, சருமத் துளைகளை அடைத்து, நாளடைவில் அவ்விடத்தில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் புள்ளிகளாக மாறும். இவற்றை எளிதில் ஒருசில இயற்கை வைத்தியங்களின் மூலம் போக்கலாம்.

சரி, இப்போது மூக்கின் மீது சொரசொரவென்று வெள்ளையாக இருக்கும் அந்த வெள்ளைப்புள்ளிகளை எப்படி போக்குவது என்று பார்ப்போம்.

வீட்டிலேயே சூப்பரான ஸ்கரப் தயாரித்தும் பயன்படுத்தலாம். அதற்கு அரிசி அல்லது ஓட்ஸை பொடி செய்து, அதனை ஈரமான முகத்தில் சிறிது நேரம் தேய்க்க வேண்டும். இப்படி செய்து வந்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் வெளியேறி, வெள்ளைப்புள்ளிகளும் போய்விடும்.

மற்றொரு அட்டகாசமான ஒரு வழி தான் கிளின்சர். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் பாலில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள சொரசொரப்பான வெள்ளைப்புள்ளிகள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் நீங்கிவிடுதோடு, சருமம் அழகாகவும், பொலிவோடும் இருக்கும்.

டூத் பேஸ்ட்டை சொரசொப்பாக இருக்கும் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவினால், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் அனைத்தும் போய்விடும்.

உருளைக்கழிங்கை அரைத்து, அதனை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

முட்டையை ஒரு பௌலில் ஊற்றி, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து நன்கு அடித்து, பின் அதனை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தாலும், வெள்ளைப்புள்ளிகள் நீங்கிவிடும்.

வெந்தய இலையை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது முகத்தில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பிம்பிள், வெள்ளைப்புள்ளிகள், கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடு பளிச்சென்று இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல