வதோதரா: கணவனின் கள்ளக் காதலியை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வந்து மனைவி நையப்புடைத்த சம்பவம் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடுகிறது.
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த நைனா என்ற பெண்ணின் கணவருக்கும், மது என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 குழந்தைகள் இருந்தும்கூட நைனாவை விட்டு பிரிந்து வந்து மதுவோடு ஒரு வீட்டில் வாழ்ந்துள்ளார் நைனாவின் கணவன்.
பொறுத்து பொறுத்து பார்த்த நைனா தனது அண்ணன் உள்ளிட்ட உறவினர்களுடன் வந்து வீடு புகுந்து கணவனையும், கள்ளக்காதலியையும் நையப்புடைக்கிறார். பாத்ரூமுக்குள் ஒளிந்த கணவனை இழுத்து போட்டு ரத்தம் ஒழுகும் வரை அடிக்கின்றனர் உறவினர்கள். அதை தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று வீடியோ பிடித்துள்ளது.
அந்த டிவி சேனல் வழக்கமாக இவ்வாறு பிறரது அந்தரங்க விவகாரங்களை வெளியிடுவது வழக்கம் என்றாலும், இந்த வீடியோ சற்று பாப்புலராகியுள்ளது.
விவாகரத்து செய்யாமல் பிற பெண்ணுடன் வாழ்ந்த அந்த நபரை பார்த்து, உங்களது மனைவியை ஏன் விவாகரத்து செய்யவில்லை என்று டிவி சேனல் கேட்கிறது. அதற்கு, நான் எனது மனைவியோடு வாழ தயாராக உள்ளேன் என்கிறார் கணவர். இதைப்பார்த்தால் நமக்கும் நாலு சாத்து சாத்தனும் என்று தோன்றும்தானே.
Thatstamil
குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த நைனா என்ற பெண்ணின் கணவருக்கும், மது என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 குழந்தைகள் இருந்தும்கூட நைனாவை விட்டு பிரிந்து வந்து மதுவோடு ஒரு வீட்டில் வாழ்ந்துள்ளார் நைனாவின் கணவன்.
அந்த டிவி சேனல் வழக்கமாக இவ்வாறு பிறரது அந்தரங்க விவகாரங்களை வெளியிடுவது வழக்கம் என்றாலும், இந்த வீடியோ சற்று பாப்புலராகியுள்ளது.
விவாகரத்து செய்யாமல் பிற பெண்ணுடன் வாழ்ந்த அந்த நபரை பார்த்து, உங்களது மனைவியை ஏன் விவாகரத்து செய்யவில்லை என்று டிவி சேனல் கேட்கிறது. அதற்கு, நான் எனது மனைவியோடு வாழ தயாராக உள்ளேன் என்கிறார் கணவர். இதைப்பார்த்தால் நமக்கும் நாலு சாத்து சாத்தனும் என்று தோன்றும்தானே.
Thatstamil


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக