வியாழன், 8 ஜனவரி, 2015

குருதிப் புற்றுநோயால் துன்புறும் மகளுக்கு சிகிச்சையளிக்க மகனை விற்கும் பெற்றோர்

தமது சுக­வீ­ன­முற்ற மக­ளுக்கு சிகிச்­சை­ய­ளிக்க பண வச­தி­யில்­லா­ததால் தமது மகனை வீதியில் விற்க பெற்றோர் முயற்­சித்து வரும் சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.



சீனாவின் கிழக்கு ஷான்டோங் மாகா­ணத்தில் கிங்­டவோ நகரிலுள்ள வெயிஹாய் வீதியில் மெங் ஸியாங்யான் (29 வயது) என்ற மேற்­படி தாயார், தனது இரட்டைக் குழந்­தை­களில் ஆண் குழந்­தையை விற்கும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.

அந்த இரட்டைக் குழந்­தை­களில் ஒருவரான பெண் குழந்­தைக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குரு­திப்­ புற்­றுநோய் ஏற்­பட்­டி­ருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து தமது மகளை குண­மாக்க தமது சேமிப்பு முழு­வ­தையும் செல­விட்ட மெங் ­ஸி­யாங்­யானும் அவ­ரது கண­வரும் உற­வி­னர்­க­ளி­டமும் நண்­பர்­க­ளி­டமும் பணத்தை கட­னாக பெற்று சிகிச்­சையை தொடர நேர்ந்­தது.

அவர்­க­ளது மக­ளுக்கு சிகிச்சை அளித்து வரும் றிஸவோ அர­சாங்க மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த மருத்­து­வர்கள், அந்த சிறு­மிக்கு ஒவ்­வொரு 10 நாட்­க­ளுக்கும் ஒரு தடவை இரசாயன சிகிச்சை அளிக்­கப்­பட வேண்டும் என தெரி­வித்­தி­ருந்­தனர்.

இந்­நி­லையில் தற்­போது சிகிச்சையை தொடர பண வசதியில்லாத மேற்படி தம்பதி, தமது மகனை விற்க தீர்மானித்துள்ளனர்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல