வியாழன், 8 ஜனவரி, 2015

மஹிந்தவிடம் தொலைபேசியில் கதைத்தார் ஜோன் கெரி

நீதியான முறையில் தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு, அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தொலைபேசி மூலம் அறிவுறுத்தியுள்ளார்.



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தொலைபேசியில் கலந்துரையாடி ஜோன் கெரி,
சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள். நம்பகமானதும், அமைதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், அவ்வாறான தேர்தல்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அடக்குமுறைகளோ அல்லது வன்முறைகளோ ஜனாதிபதித் தேர்தலில் இடம்பெறுவதனை தடுக்க வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு. வாக்கு எண்ணும் பணிகள் நம்பகமானதும், வெளிப்படைத்தன்மையுடையதுமாக அமைய வேண்டும்.

இலங்கையின் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படும். தேர்தல் அதிகாரிகள், பொலிஸார், கண்காணிப்பாளர்கள் சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

இதேவேளை வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பதிவாகியுள்ளதாகவும் அது குறித்து அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல