ஞாயிறு, 28 ஜூன், 2015

4 வயது மகளின் சதையை அறுத்துத் தின்ற தாய் (படங்கள் காணொளி இணைப்பு)

மேற்கு வங்­கத்தில் பெண்­ணொ­ருவர் தனது 4 வயது மகளின் சதையை அறுத்து தின்ற சம்­பவம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.



மேற்கு வங்கம், கோபால்பூர் என்ற கிரா­மத்தைச் சேர்ந்த பிர­மிளா மோண்டல் (வயது 42) என்ற பெண் 4 வயது பாரதி என்ற மக­ளுடன் வசித்து வந்­துள்ளார்.

இந்­நி­லையில், கடந்த வியா­ழக்­கி­ழமை பார­தியின் அலறல் சத்தம் கேட்டு பக்­கத்து வீட்டில் வசிக்கும் பிர­மி­ளாவின் மைத்­துனர் அங்கு சென்­றுள்ளார். அப்­போது பிர­மிளா தனது மகளின் தலைப் பகு­தியில் தோலை அறுத்து சாப்­பிட்டுக் கொண்­டி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.

இதை­ய­டுத்து, மைத்­து­னரும் அவ­ரது மனை­வியும், தலையில் இரத்தம் வழிந்த பார­தியை மீட்டு மருத்­து­வ­ம­னையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

அந்த தகவல் அறிந்து அங்கு திரண்ட கிராம மக்கள் பிர­மி­ளாவை கட்டி வைத்து அடித்­துள்­ளனர். நடந்த சம்­ப­வத்தை ஒப்­புக்­கொண்ட பிர­மிளா அதற்­கான கார­ணத்தை சொல்­ல­வில்லை. 5 குழந்­தை­க­ளுக்கு தாயாரான பிர­மிளா போதைப் பொரு­ளுக்கு அடி­மை­யா­னவர் என்று கிரா­ம­ வா­சிகள் சிலர் குற்றம் சாட்­டி­யுள்­ளனர்.

இத­னி­டையே, கிராம மக்­களால் கட்டி வைக்­கப்­பட்ட பிர­மி­ளாவை மீட்­டுள்­ளனர். பிர­மி­ளாவின் கணவர் ஹபு மோண்டல் கூலி­வேலை செய்­வ­தற்­காக ஓராண்­டுக்கு முன் டில்லி சென்றதாகவும் அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல