இரு ஆடம்பர குடியிருப்பு மாடிக் கட்டடங்களிடையே தலையிலிருந்து 115 அடி உயரத்தில் கண்ணாடியாலான அடித்தளத்தைக் கொண்ட நீச்சல் தடாகமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கை பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் தேம்ஸ் நதிக்கரையோரமாகவுள்ள பற்றர்ஸீ பிரதேசத்தில் 2,000 வீடுகளை உள்ளடக்கி 602,000 ஸ்ரேலிங் பவுண் ஆரம்ப கட்ட செலவில் நிர்மாணிக்கப்படும் குடியிருப்புத் திட்டத்திலேயே இந்த அந்தரத்தில் காட்சியளிக்கும் நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
25 மீற்றர் நீளமும் 3 மீற்றர் ஆழமும் கொண்ட இந்த நீச்சல் தடாகத்தில் நீந்தும் ஒருவர் பாரிய பாதாளமொன்றுக்கு மேலாக மிதப்பது போன்ற திகிலுணர்வை அனுபவிக்க முடியும் என அந்த நீச்சல் தடாகத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் பங்கேற்றுள்ள பால்லிமோர் குழுமத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி சீன் மல்ரையன் தெரிவித்தார்.
இந்த மாடிக்குடியிருப்பிலுள்ள வீடுகளை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு விற்பனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
லண்டனில் தேம்ஸ் நதிக்கரையோரமாகவுள்ள பற்றர்ஸீ பிரதேசத்தில் 2,000 வீடுகளை உள்ளடக்கி 602,000 ஸ்ரேலிங் பவுண் ஆரம்ப கட்ட செலவில் நிர்மாணிக்கப்படும் குடியிருப்புத் திட்டத்திலேயே இந்த அந்தரத்தில் காட்சியளிக்கும் நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
25 மீற்றர் நீளமும் 3 மீற்றர் ஆழமும் கொண்ட இந்த நீச்சல் தடாகத்தில் நீந்தும் ஒருவர் பாரிய பாதாளமொன்றுக்கு மேலாக மிதப்பது போன்ற திகிலுணர்வை அனுபவிக்க முடியும் என அந்த நீச்சல் தடாகத்தை நிர்மாணிக்கும் நடவடிக்கையில் பங்கேற்றுள்ள பால்லிமோர் குழுமத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி சீன் மல்ரையன் தெரிவித்தார்.
இந்த மாடிக்குடியிருப்பிலுள்ள வீடுகளை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு விற்பனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக