புதன், 14 அக்டோபர், 2015

வாள்வெட்டு கலாசாரத்தின் உச்சக்கட்டம்- திருமணத்தின் போதும் வாளுடன் சென்ற மாப்பிள்ளை

ஐரோப்பாவில் வன்முறைகளும் வாள்வெட்டு குழுக்களின் அட்டகாசங்களும் அதிகரித்து வருவதற்கு அண்மையில் ஜேர்மனி முன்சனில் நடந்த திருமணம் உதாரணமாக அமைந்தது.



வாள் வெட்டு அடிதடி வன்முறைகளில் ஈடுபடுவதை ஒரு உயர்ந்த தகமையாக கருதும் போக்கும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்களிடையே வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது.
திருமணத்தின் போதும் மாப்பிள்ளையை அழைத்து செல்லும் போதும் மாப்பிள்ளை கையில் வாழுடன் சென்றதை பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

வாளுடன் சென்ற மாப்பிள்ளை வாள் வெட்டுக்குழுவை சேர்ந்தவராக என்பது தெரியவில்லை. தன் மங்களகரமான திருமண வைபவத்திற்கு சென்ற போது கொலை வெறிகொண்ட வாளை ஏன் எடுத்து சென்றார் என்பது திருமணத்திற்கு சென்ற பலரின் கேள்வியாக இருந்தது.

வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர்களை திருமணம் முடிப்பதற்கும் சில பெண்கள் காத்திருக்கிறார்கள் என அத்திருமணத்திற்கு சென்றவர்கள் பேசிக்கொண்டனர்.

இலங்கையின் வடபகுதியில் வாள்வெட்டு சம்பங்களும் வன்முறைக்குழுக்களின் அட்டகாசம் அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கும் நிலையில் பொது வைபவம் ஒன்றிலேயே அதுவும் திருமண வைபவத்தில் வாளுடன் சென்று பெண்ணுக்கு தாலிகட்டிய சம்பவம் இதுவே முதல் தடவையாகும்.

பெண்ணுக்கு தாலி கட்டும் போது மட்டும் வாளை கீழை வைத்திருந்த இந்நபர் பின்னர் தாலி கட்டி பெண்ணை அழைத்து சென்ற போதும் வாளுடனேயே சென்றார். இந்நபர் இரவில் படுக்கும் போது வாள்களை வைத்துக்கொண்டுதான் உறங்குவார் என கூறப்படுகிறது.

தமிழர் திருமண பாரம்பரியம் என்பது மங்களகரமாக வேட்டி சால்வை அணிந்து ஊர்வலமாக அழைத்து சென்று பெண்ணுக்கு தாலி கட்டுவதாகும். கத்தியுடனோ வாளுடனோ துப்பாக்கியுடனோ சென்று பெண்ணுக்கு தாலி கட்டுவதில்லை.

ஜேர்மனியில் தமிழர் ஒருவர் முதல் தடவையாக வாளுடன் சென்று தாலி கட்டியிருக்கிறார். எதிர்காலத்தில் கத்தியுடன் துப்பாக்கியுடன் சென்று தாலி கட்டும் முறைகளும் அறிமுகப்படுத்தப்படலாம். ஏனெனில் ஐரோப்பாவில் தமிழர்கள் மத்தியில் வன்முறைகலாசாரம் எல்லை மீறி செல்கிறது.

தினக்கதிர்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல