புதன், 28 அக்டோபர், 2015

சுயமரியாதை

நம் கலாச்சாரப்படி, ‘வணக்கம்’ என்று இரு கைகளையும் இணைத்து நெஞ்சத்துக்கு நேராக வைத்து அனைவரையும் வரவேற்போம்.
அதை மரியாதை செலுத்தும் ஒரு குறியாக காலம் காலமாக நாம் பின்பற்றி வருகிறோம்.


இறைவனை தொழும் பொழுது கைகளை இணைத்து நெற்றிவரை வைத்து வணங்குவோம். இவற்றின் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

இரு கைகளை இணைக்கும் பொழுது, எல்லா விரல்களின் நுனியும் இணைக்கப்படுகிறது.

இது நம் கண்கள், காதுகள் மற்றும் மூளையின் நினைவு நரம்புகளைத் தூண்டுகின்றன.

விரல் நுனிகளை அழுத்தி நெஞ்சத்துக்கு நேராக வைப்பதன் மூலம், நாம் சந்திக்கும் நபரின் முகமும், குரலும் நம் நினைவில் பதியும்.

அதுபோல, கைகளை இணைத்து நெற்றிக்கு நேராக வைத்து வணங்குவது நம் எண்ணங்களை ஒருநிலைப் படுத்தி, முழுமையாக கவனம் செலுத்த உதவும்.

மேலும், பிறரைச் சந்தித்தால் கை குலுக்குவது பெரும்பாலும் தீய உயிரிகளைப் (germs) பரப்பும்.

ஆனால், நம் கலாச்சாரப்படி கை கும்பிட்டு வணங்குவது தீய உயிரிகளைப் பரப்பாது.

facebook
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல