சனி, 31 அக்டோபர், 2015

கைதி­களின் விடு­தலை கானல் நீராகுமா?

அர­சியல் ரீதி­யான குற்­றங்­களைப் புரிந்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களே சிறைச்­சா­லை­களில் நீண்­ட­கா­ல­மாகத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­ட­மும்­சரி, அவ­ச­ர­காலச் சட்­ட­மும்­சரி, அர­சியல் ரீதி­யான குற்றம் புரிந்­த­வர்­களைக் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டிப்­ப­தற்­கா­கவே கொண்டு வரப்­பட்­டுள்­ளன. எனவே அத்­த­கைய சட்­டங்­களின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை அர­சியல் கைதிகள் அல்ல என்று கூறு­ப­வர்­களை எவ்­வாறு வகைப்­ப­டுத்­து­வது என்று தெரி­ய­வில்லை.

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக, அர­சாங்கத் தரப்பில் இருப்­ப­வர்கள் ஆளா­ளுக்கு கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றார்கள். இந்தக் கருத்­துக்கள் ஒவ்­வொன்றும் ஒவ்­வொரு வித­மா­கவும், சில வேளை­களில் முரண்­பட்­ட­தா­கவும் காணப்­ப­டு­கின்­றன. இதனால், நவம்பர் மாதம் 7 ஆம் திக­திக்­கி­டையில் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என்று நாட்டின் அதி­யுயர் தலை­வ­ரா­கிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அளித்­தி­ருந்த உத்­த­ர­வாதம், கேள்­விக்­கு­றி­யா­கி­யி­ருக்­கின்­றது.



முறை­யான விசா­ர­ணை­யில்லை. வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை. தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கு­களும் இழுத்­த­டிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இதனால், தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு எதி­ரான குற்­றங்கள் நிரூ­பிக்­கப்­ப­ட­வில்லை. முறை­யான நீதி விசா­ர­ணையின் மூலம் அவர்கள் தண்­டனை அனு­ப­விக்க வேண்டும் என தீர்ப்­ப­ளிக்­கப்­ப­ட­வு­மில்லை. இந்த நிலை­யி­லேயே, நீதி­மன்­றங்­களின் ஊடாகத் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்கள் தவிர்ந்த ஏனைய தமிழ் அர­சியல் கைதிகள் பல ஆண்­டு­க­ளாக சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்­றார்கள்.

இதன் கார­ண­மா­கவே, 'நீதி­யற்ற முறையில் எங்­களை ஏன் சிறைச்­சா­லை­களில் அடைத்து வைத்து தண்­டிக்க வேண்டும்?' என்று தமிழ் அர­சியல் கைதிகள் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்­றார்கள். இது அவர்­களின் நீண்ட நாளைய கேள்­வி­யாகும். இந்தக் கேள்­வி­யுடன் அவர்கள் நிற்­க­வில்லை. தங்­களை விடு­தலை செய்ய வேண்டும் அல்­லது பிணையில் செல்ல அனு­ம­திக்க வேண்டும் என்று கோரி, பல போராட்­டங்கள் நடத்­தி­யி­ருந்­தார்கள். அவர்­க­ளு­டைய கேள்­விக்கு யாரும் சரி­யான பதி­ல­ளிக்­க­வில்லை. மாறி மாறி ஆட்­சிக்கு வந்­த­வர்­களும், அவர்­களின் விடு­த­லைக்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வில்லை.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் மற்றும் அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களே இவ்­வாறு நாட்டின் பல்­வேறு சிறைச்­சா­லை­க­ளிலும், பூஸா முகா­மிலும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டமும், அவ­ச­ர­காலச் சட்­டமும், தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­காக ஆரம்­பிக்­கப்­பட்ட ஆயுதப் போராட்­டத்தை முறி­ய­டிப்­ப­தற்­கா­கவே கொண்டு வரப்­பட்­டன. சாதா­ரண குற்றச் செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்தும் நோக்­கத்தில் அந்தச் சட்­டங்கள் கொண்டு வரப்­ப­ட­வில்லை.

கடந்த 1979 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி ஜே ஆர் ஜய­வர்­த­னவின் ஆட்­சியின் போது, தற்­கா­லிக சட்­ட­மா­கவே பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் முதலில் கொண்டு வரப்­பட்­டது. மூன்று ஆண்­டு­களின் பின்னர் 1982 ஆம் ஆண்டு அது நிரந்­தர சட்­ட­மாக்­கப்­பட்­டது. விடு­த­லைப்­பு­லி­க­ளு­ட­னான இறுதி யுத்­தத்தின் மூலம் ஆயுதப் போராட்­டத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­பட்ட பின்பும், இன்னும் அந்தச் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. சிவில் நிர்­வா­கத்தின் கீழ் சட்டம் ஒழுங்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற கட­மை­க­ளுக்குப் பொறுப்­பான பொலி­ஸாருக்கு, சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­வர்­களைத் தேடவும், அவர்­களைக் கண்ட இடத்தில் கைது செய்­யவும், அவ்­வாறு கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களைத் தடுத்து வைப்­ப­தற்கும் பரந்த அள­வி­லான அதி­கா­ரத்தை இந்தச் சட்டம் வழங்­கி­யி­ருக்­கின்­றது.

களவு, கொலை, கொள்ளை, சமூக விரோதச் செயல்கள், ஏமாற்­றுதல் போன்ற குற்­றச்­செ­யல்­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக, ஏற்­க­னவே குற்ற நட­வடிக்கை கோவையின் கீழ் பல்­வேறு சட்­டங்கள் நாட்டில் நடை­மு­றையில் இருக்­கின்­றன. இந்தச் சட்­டங்­களின் மூலம் ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருப்­ப­வர்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவோ அல்­லது தண்­டிக்­கவோ முடி­யாது என்ற கார­ணத்­திற்­கா­கவே, வரை­ய­றை­யற்ற அதி­கா­ரங்­களைக் கொண்ட வகையில், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் கொண்டு வரப்­பட்­டி­ருந்­தது.

தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்­கான ஆயுதப் போராட்­டத்தை பயங்­க­ர­வாதச் செயற்­பா­டாக உரு­வ­கப்­ப­டுத்­திய அர­சாங்கம், அந்தப் பயங்­க­ர­வா­தத்தைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தைக் கொண்டு வந்த போதிலும், பயங்­க­ர­வாதி என்றால் யார், என்­ப­தற்­கு­ரிய வரை­யறை என்ன என்ற விளக்கம் அதில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை என்று சட்ட வல்­லு­னர்­களும் சட்­டத்­துறை விமர்­ச­கர்­களும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள்.

தேசிய பாது­காப்­புக்குப் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் மற்றும் அர­சுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள், பொது­மக்கள் மீதான தாக்­கு­தல்கள் போன்­ற­வையே பயங்­க­ர­வாதம் என கரு­தப்­பட்­டா­லும்­கூட, விரி­வான பொருள்­கோடல் செய்­யப்­ப­டாத பயங்­க­ர­வா­திகள் என சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­வர்­களின் செயற்­பா­டு­க­ளையும், அவர்­க­ளுக்கு உத­வி­யாக இருந்து செயற்­ப­டு­ப­வர்­களின் செயற்­பா­டு­க­ளையும் தடுப்­ப­தற்­காக, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் பொலி­சா­ருக்கும் ஆயுதப் படை­க­ளுக்கும் இலங்கை அர­சாங்கம் பரந்த அள­வி­லான அதி­கா­ரங்­களை வழங்­கி­யி­ருக்­கின்­றது. இந்த அதி­கா­ரங்கள் கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­பட முடி­யா­தவை என்­ப­தையும் சட்­டத்­துறை விமர்­ச­கர்கள் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கின்­றார்கள்.

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் கொண்டு வரப்­ப­டு­வ­தற்கு முன்னர், நாட்டில் ஏற்­ப­டு­கின்ற அவ­ச­ர­மான நெருக்­கடி நிலை­மை­களை எதிர்­கொள்­வ­தற்­காக அவ­சர காலச் சட்­டமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. நாட்டின் தென்­ப­கு­தியில் அர­சுக்கு எதி­ராக ஆயுதக் கிளர்ச்­சியில் இறங்­கி­யி­ருந்த ஜேவி­பி­யி­னரை அடக்­கு­வ­தற்­காக அவ­ச­ர­காலச் சட்­டமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இலங்­கையின் முத­லா­வது பெண் பிர­தமர் என்ற பெரு­மைக்­கு­ரிய திரு­மதி சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்கா பிர­த­ம­ராக இருந்­த­போது, 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி ஜேவி­பி­யி­ன­ரு­டைய செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அவ­ச­ர­காலச் சட்டம் நடை­மு­றைக்குக் கொண்டு வரப்பட்டது.

இந்த அவ­ச­ர­கா­லச்­சட்­டத்தின் அதி­கார பலத்தைக் கொண்­டுதான், திரு­மதி சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்கா ஜே.வி­.பி­.யி­ன­ரு­டைய ஆயுதக் கிளர்ச்­சியை நசுக்­கி­யி­ருந்தார். சந்­தேக நபர்­களைக் கைது செய்து நீண்ட காலத்­திற்குத் தடுத்து வைக்­கவும், அவர்­களைச் சித்­தி­ர­வதை செய்­யவும், கைது செய்­யப்­பட்­ட­வர்­களை வலிந்து காணாமல் போகச் செய்­யவும் இந்த அவ­ச­ர­காலச் சட்டம் பொலிஸார் உள்­ளிட்ட பாது­காப்புப் படை­யி­ன­ருக்கு வரை­யறையற்ற வகையில் அதி­கா­ரங்­களை வழங்­கி­யி­ருந்­தது. இந்தச் சட்­டத்தின் மூலம் வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களைக் கொண்டே, ஜே.வி.­பி.யின் ஆயுதப் போராட்­டத்தை அந்த அரசு அடித்து நொறுக்­கிப்­போட்­டது,

அவ­ச­ர­காலச் சட்டம் மாதம் ஒரு தடவை நாடா­ளு­மன்­றத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெற வேண்டும் என்ற நிய­தியின் கீழ் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது. சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­காவின் ஆட்சிக் காலம் முடி­வ­டைந்து நாட்டில் ஜனா­தி­பதி ஆட்சி முறை உரு­வாக்­கப்­பட்டு, சிறி­மாவே பண்­டா­ர­நா­யக்­காவின் புதல்வி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா ஜனா­தி­ப­தி­யாகப் பொறுப்­பேற்­றி­ருந்­த­போது, 2001 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி அவ­ச­ர­காலச் சட்டம் வலு­வற்றுப் போனது. இந்தக் காலப்­ப­கு­தியில் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்­காவின் தலை­மை­யி­லான அர­சாங்­கத்தில் -பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சிக்கு போதிய பெரும்­பான்மை பலம் இல்­லாத கார­ணத்­தினால் அவ­ச­ர­கா­லச்­சட்­டத்தை நாடா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்து அதனை நீடிக்க முடி­யா­மற்­போ­னது. இதனால் அந்தச் சட்டம் வலு­வற்­ற­தா­கி­யது.

ஆயினும் அப்­போது ஆட்­சியில் இருந்­த­வர்கள் தளர்ந்­து­வி­ட­வில்லை. அவ­ச­ர­காலச் சட்­டத்தின் கீழ் படை­யி­னரால் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த மேல­திக அதி­கா­ரங்­களைத் தக்­க­வைப்­ப­தற்­காக பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் புதிய சட்­ட­வி­தி­களை அர­சாங்கம் உள்­ள­டக்கிப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. அவ்­வாறு பிர­க­ட­னப்­படுத்தப்பட்ட சட்­ட­வி­தி­களில் ஒன்று விடு­த­லைப்­பு­லி­களைத் தடை­செய்­வ­தாக அமைந்­தி­ருந்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அது மட்­டு­மல்­லாமல் நிறை­வேற்று அதி­கா­ரத்தைக் கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்ட புதிய சட்­ட­வி­தி­களின் கீழ், பொது­மக்கள் பாது­காப்புச் சட்­டத்தின் அனு­ச­ர­ணை­யுடன், விசே­ட­மாகக் குறிப்­பி­டப்­பட்ட பிர­தே­சங்­களில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்டி, பாது­காப்பைப் பேணு­வ­தற்­காக ஆயு­தப்­ப­டை­களை அழைத்து, அவற்­றுக்கு உரிய அதி­கா­ரங்­களை வழங்­கி­யி­ருந்தார். அத்­துடன், குறிப்­பிட்ட சில நட­வ­டிக்­கை­களை அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளாகப் பிர­க­ட­னப்­ப­டுத்தி அவற்றைச் செயற்­ப­டுத்­து­வ­தற்­கான விசேட அதி­கா­ரங்­க­ளையும் வழங்­கி­யி­ருந்தார்.

இதன் கார­ண­மா­கவே வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களில் ஆயு­தப்­ப­டைகள் பாது­காப்புக் கட­மை­களில் மட்­டு­மல்­லாமல், சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­திலும், ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தன இன்னும் அவர்கள் அங்கு கட­மையில் வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள்.

இவ்­வாறு செய­லு­ருவம் பெற்ற பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­படும் ஒரு­வரை 18 மாதங்­க­ளுக்கு நீதி­மன்­றத்தில் முன்­னி­லைப்­ப­டுத்­தா­மலும், எவ­ரையும் பார்ப்­ப­தற்கு அனு­ம­திக்­கா­மலும் தடுத்து வைத்­தி­ருக்க முடியும். அதன் பின்னர் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­மைக்­காக, அந்த சந்­தேக நபர்­களைத் தொடர்ந்து தடுத்து வைக்க வேண்டும் என்­ப­தற்­கு­ரிய கார­ணங்கள் இருக்­கு­மானால், பாது­காப்பு அமைச்­சரின் உத்­த­ர­வுக்­க­மைய மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு தடவை தடுப்புக் காவல் உத்­த­ரவை நீடித்துக் கொள்ள முடியும்.

அர­சுக்கு எதி­ரான சுவ­ரொட்­டி­களை ஒட்­டு­வ­தைக்­கூட, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம், சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­யாகக் கரு­து­கின்­றது. சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு மரண தண்­ட­னையும் தண்­ட­னை­யாக விதிப்­ப­தற்கு இந்தச் சட்டம் வழி­வ­குத்­துள்­ளது, பயங்­க­ர­வாதி ஒருவர் பற்­றிய தக­வலைத் தெரிந்­தி­ருக்கும் ஒருவர் அதனை ஆயு­தப்­ப­டை­யி­ன­ருக்கோ, பொலி­ஸாருக்கோ தெரி­விக்­க­வில்லை என கண்டால் அவர் குற்றம் செய்­த­வ­ராகக் கருதி, அவ­ருக்கு ஐந்து வரு­டங்கள் சிறைத்­தண்­டனை விதிக்க முடியும், பயங்க­ர­வாதி ஒருவர் ஒரு­வ­ரு­டைய வீட்டில் ஓரி­ரவு தங்­கி­யி­ருந்தார் என தெரிந்தால், பயங்­க­ர­வா­திக்கு அடைக்­கலம் கொடுத்த குற்­றத்­திற்­காக அந்த வீட்­டுக்­கா­ர­ருக்கு 20 வரு­டங்கள் சிறைத்­தண்­டனை அளிப்­ப­தற்கு பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம் பரிந்­து­ரைக்­கின்­றது.

இந்தச் சட்டம் நாட­ளா­விய ரீதியில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காகக் கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும், வடக்­கு­, கி­ழக்குப் பிர­தே­சங்­களில் குறிப்­பாக தமிழ் மக்கள் மீது அதிலும் விசே­ட­மாக தமிழ் இளைஞர், யுவ­திகள் மீதே அரச படை­க­ளினால் பிர­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது. இதனால் பாட­சாலை மற்றும் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள், சமூகத் தலை­வர்கள், சமயத் தலை­வர்கள் பொது­மக்கள் என தமிழ் சமூ­கத்தைச் சேர்ந்த பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அவர்கள் திட்­ட­மி­டப்­பட்ட வகையில் ஒடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். பலர் இனம் தெரி­யாத வகையில் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என மனித உரிமை அமைப்­புக்­களும், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கொடூரம் குறித்து விப­ரித்­தி­ருக்­கின்­றார்கள்.

இதில் வேடிக்கை என்­ன­வென்றால், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு நீதி­மன்­றங்­க­ளினால் முறை­யான ஆவணப் பதி­வு­களின் ஊடாக, விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­ப­டு­கின்ற சந்­தேக நபர்கள், சிறைச்­சா­லைக்குக் கொண்டு செல்­லப்­பட்ட பின்னர், விசா­ரணை என்ற பெயரில் அவர்­களில் குறிப்­பிட்ட நபர்­களை இரா­ணுவ முகா­முக்கு விசா­ரணை என்ற போர்­வையில் கொண்டு சென்று சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். இவ்­வாறு கொண்டு செல்­லப்­ப­டு­ப­வர்கள் தொடர்பில் விளக்­க­ம­றியல் சிறைச்­சா­லையும் பொறுப்­பேற்­ப­தில்லை. நீதி­மன்­றமும் பொறுப்பு கூறு­வ­தில்லை என்­ப­தையும் மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும் மனித உரிமை அமைப்­புக்­களைச் சேர்ந்­த­வர்­களும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

இவ்­வாறு பல வகை­க­ளிலும் தமிழ் மக்­களை ஒடுக்­கு­வ­தற்­கா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த – பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்ற பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டி­ருப்­ப­வர்­களே இப்­போது சிறைச்­சா­லை­களில் நீண்­ட­கா­ல­மாக வாடு­கின்­றார்கள்.

யுத்­த­மோ­தல்­க­ளுக்குக் கார­ண­மாக இருந்த விடு­த­லைப்­பு­லிகள் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்­தத்­தின்­போது, அழிக்­கப்­பட்­டு­விட்­டார்கள். அவர்­க­ளு­டைய ஆயுதச் செயற்­பா­டுகள் முற்­றாக முடக்­கப்­பட்­டு­விட்­டன. நாட்டில் பயங்­க­ர­வாதச் செயற்­பா­டுகள் இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. யுத்தம் முடி­வுக்கு வந்­த­தை­ய­டுத்து, அவ­ச­ர­காலச் சட்­டமும் நீக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. (அவ­ச­ர­காலச் சட்­டத்தின் சில சட்ட விதிகள் பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தில் இப்­போது உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பது வேறு விடயம்) இந்த நிலை­யி­லேயே, பயங்­க­ர­வாதத் தடைச்­சட்டம், அவ­ச­ர­காலச் சட்டம் என்­ப­வற்றின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்ள தங்­களை, பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­தலை செய்ய வேண்டும் என்று தமிழ் அர­சியல் கைதிகள் கோரி­யி­ருக்­கின்­றார்கள்.

பொது­மன்­னிப்பு அளித்து விடு­தலை செய்ய வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்து அவர்கள் சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருந்­தார்கள்.

ஆறு நாட்­க­ளாகத் தொடர்ந்த இந்தப் போராட்­டத்தை முடி­வுக்குக் கொண்டும் வகையில் நவம்பர் மாதம் 7 ஆம் திக­திக்­கி­டையில் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காணப்­படும் என ஜனா­தி­பதி அவர்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து, தமிழ் அர­சியல் கைதிகள், சாகும் வரை­யி­லான தமது உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தைத் தற்­கா­லி­க­மாகக் கைவிட்­டி­ருந்­தார்கள்.

இந்த நிலை­யி­லேயே தமிழ் அர­சியல் கைதிகள் பற்­றியும், அவர்­களை விடு­தலை செய்­வது பற்­றியும் பல்­வேறு கருத்­துக்­களை அரச தரப்­பி­னரும் மற்­ற­வர்­களும் வெளி­யிட்டு வரு­கின்­றார்கள்.

சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்­களில் பல­ருக்கு எதி­ராக, ஆதா­ர­பூர்­ம­வ­மான குற்­றச்­சாட்­டுக்­களைச் சுமத்த முடி­யாத நிலை­யி­லேயே பயங்­க­ர­வாதத் தடுப்புப் பிரி­வினர் இருக்­கின்­றார்கள். அவ்­வா­றான ஆதா­ரங்கள் இருக்­கு­மே­யானால், அவர்­க­ளுக்கு எதி­ரான ,குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து வழக்கு தாக்கல் செய்­தி­ருப்­பார்கள். ஏனென்றால், பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­ப­டு­கின்ற ஒரு­வ­ருக்கு எதி­ராக ஆதா­ரங்­க­ளுடன் குற்­றத்தை நிரூ­பித்தால் அவ­ருக்கு அதி­யுச்ச தண்­ட­னை­யாக மரண தண்­டனை விதிப்­ப­தற்கு அந்தச் சட்­டத்தில் இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அவ்­வா­றி­ருக்­கும்­போது, அந்தச் சட்­டத்­தின்கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராகக் குற்­றஞ்­சாட்டி, வழக்கு தாக்கல் செய்­வத்­றகுப் படை­யி­ன­ருக்கு ஏன் முடி­யாமல் இருக்­கின்­றது? சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்கு எதிராக் குற்­றங்­களைச் சாட்டி, அவர்­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்கல் செய்­வதை விடுத்து, அவர்­களை சிறைச்­சா­லை­களில் அடைத்து வைத்து அர­சாங்கம் இம்­சித்துக் கொண்­டி­ருப்­ப­தற்­கான கார­ணம்தான் என்ன?

அர­சியல் ரீதி­யான குற்­றங்­களைப் புரிந்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களே சிறைச்­சா­லை­களில் நீண்­ட­கா­ல­மாகத் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­ட­மும்­சரி, அவ­ச­ர­காலச் சட்­ட­மும்­சரி, அர­சியல் ரீதி­யான குற்றம் புரிந்­த­வர்­களைக் கைது செய்து சட்­டத்தின் முன் நிறுத்தி தண்­டிப்­ப­தற்­கா­கவே கொண்டு வரப்­பட்­டுள்­ளன. எனவே அத்­த­கைய சட்­டங்­களின் கீழ் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை அர­சியல் கைதிகள் அல்ல என்று கூறு­ப­வர்­களை எவ்­வாறு வகைப்­ப­டுத்­து­வது என்று தெரி­ய­வில்லை.

குற்றம் புரிந்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரி­லேயே தமிழ் அர­சியல் கைதிகள் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள். சந்தேகத்தில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் குற்றம் செய்­தி­ருக்­கின்­றார்­களா என்­பதை நிரூ­பிக்க வேண்­டி­யதும், அதற்­கான ஆதா­ரங்­களை முன்­வைக்க வேண்­டி­யதும் அவர்­களைக் கைது செய்­த­வர்­களின் பொறுப்­பாகும். அவ்­வாறு நிரூ­பிக்­கா­விட்டால் - குற்றம் செய்­தார்கள் என்­ப­தற்­கான ஆதா­ரங்­களை முன்­வைக்க முடி­யா­விட்டால், அவர்­களை விடு­தலை செய்­வதே பொறுப்­புள்­ளதோர் அர­சாங்­கத்தின் கட­மை­யாகும். அந்தக் கட­மையைச் செய்யத் தவ­று­கின்ற அரசு நீதி வழங்­கு­வ­தற்குப் பதி­லாகக் கொடுமை செய்­கின்­றது என்றே கருத வேண்டும்.

அர­சியல் ரீதி­யான குற்றச் செயல்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை, அர­சியல் கைதிகள் என ஏற்­றுக்­கொள்­வ­தற்கு பிடி­வா­த­மாக மறுக்­கின்ற அர­சாங்கத் தரப்­பினர் அவர்­களை சாதா­ரண சட்­டங்­களின் கீழ் விசா­ரணை செய்து குற்­ற­மற்­ற­வர்கள் அல்­லது குற்றம் செய்­தி­ருக்­கின்­றார்கள் என்று வகைப்­ப­டுத்தி நட­வ­டிக்கை எடுப்­ப­தற்குத் தயங்­கு­வது ஏன் என்­பது தெரி­ய­வில்லை.

சூழ்­நி­லைக்கு ஏற்ற வகையில் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்குப் பொது­மன்­னிப்பு வழங்க முடி­யாது என்று அர­சாங்கம் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருக்­கின்­றது. நாட்டில் நீதித்­துறை நடை­மு­றை­க­ளுக்கு அமை­வா­கவே அவர்­க­ளு­டைய விவ­காரம் கையா­ளப்­படும் என்று அரசு கூறு­கின்­றது. இந்த வகையில் தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்குப் பிணை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று நாட்டின் பிர­தமர் தலை­மையில் கூடி ஆராய்ந்­ததன் பின்னர் அர­சாங்கம் தெரி­வித்­தி­ருக்­கின்­றது.

ஆனால் சட்­டமா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள் அவ்­வாறு பிணையில் செல்­வ­தற்கு தமிழ் அர­சியல் கைதி­களை அனு­ம­திப்­ப­தற்கு சட்­டத்தில் இட­மில்லை என்ற தோர­ணையில், தமிழ் அர­சியல் கைதிகள் சார்பில் நீதி­மன்­றங்­களில் முன்­னி­லை­யாகி வரும் சட்­டத்­த­ர­ணி­க­ளிடம், அவர்­க­ளு­ட­னான ஒரு சந்­திப்பில் கூறி­யி­ருப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றன. அந்த அதி­கா­ரி­களின் கருத்­தின்­படி, தமிழ் அர­சியல் கைதி­களில் 70 பேருக்கு மாத்­தி­ரமே பிணை வழங்க முடியும் என்று தகவல் வெளி­யா­கி­யி­ருக்­கின்­றது.

அதே­நேரம் கொழும்பு நீதி­மன்றம் ஒன்று தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு சட்­டமா அதி­ப­ரு­டைய உத்­த­ரவு அல்­லது ஆலோ­ச­னைக்கு அமை­வா­கவே பிணை வழங்க முடியும் என்று பகி­ரங்­க­மாகக் கூறி­யி­ருக்­கின்­றது. நிலு­வையில் உள்ள வழக்குத் தவ­ணைக்­காக, நீதி­மன்­றத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட சில தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­கு­களில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ர­ணிகள் அவர்­களை பிணையில் செல்ல அனு­ம­திக்க வேண்டும் என்று விண்­ணப்பம் செய்­த­போதே அந்த நீதி­மன்றம் இதனைத் தெரி­வித்­துள்­ளது.

இதே­வேளை, சிறைச்­சாலை ஆணை­யாளர் ரேகாண புஸ்­ப­கு­மார, குற்­றச்­சாட்­டுக்கள் இல்­லாமல் ஒரு­வர்­கூட சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார். குற்றம் சுமத்­தப்­பட்­ட­வர்கள் மட்­டும்தான் சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்றால் அவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள் அனை­வ­ருக்கும் எதி­ராக ஏன் நீதி­மன்­றங்­களில் வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­ட­வில்லை என்­ப­தற்கு அவ­ரி­ட­மி­ருந்து விளக்­க­மில்லை. அவர் தெரி­வித்­துள்­ள­தாக வெளி­யா­கி­யுள்ள தக­வல்­க­ளின்­படி, தண்­டனை விதிக்­கப்­பட்ட 48 கைதி­களும், வழக்­குகள் நிலு­வையில் உள்ள – வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள 116 கைதி­க­ளுமே சிறைச்­சா­லை­களில் இருப்­ப­தாகத் தெரி­வித்­துள்ளார். இரு­நூ­றுக்கும் மேற்­பட்ட தமிழ் அர­சியல் கைதிகள் சிறைச்­சா­லை­களில் இருப்­ப­தாக அர­சாங்கம் கூறி­யி­ருக்­கின்­றது. ஆனால் சிறைச்­சாலை ஆணை­யா­ளரின் கூற்­றுப்­படி 164 கைதி­களே இருப்­ப­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அப்­ப­டி­யென்றால் மிகுதி கைதிகள் எங்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்கள் என்ற கேள்வி எழு­கின்­றது.

தமிழ் அர­சியல் கைதி­களின் எண்­ணிக்­கை­யிலும் குள­று­ப­டி­யான நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. நாடெங்­கிலும் உள்ள சிறைச்­சா­லை­களில் 273 தமிழ் அர­சியல் கைதிகள் இருப்­ப­தாக, அர­சாங்கம் தமக்குத் தகவல் தெரி­வித்­தி­ருப்­ப­தாக தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது. ஆனால் 217 தமிழ் அர­சியல் கைதி­களே சிறைச்­சா­லை­களில் இருப்­ப­தாக ஊட­கங்­களில் தக­வல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில் சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உண்மையான எண்ணிக்கை என்ன என்பது தெளிவற்றதாகவே இருக்கின்றது. இதனைத் தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

நாட்டில் உருவாகிய பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையான நடைமுறைகளையும் அதிகாரங்களையும் கொண்ட பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டு வந்து அதனைச் செயற்படுத்திய ஆட்சியாளர்கள், பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னரும், அந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அளிக்க முடியாது என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறைக்கைதிகளாக இருப்பவர்கள் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் பொதுமன்னிப்பின் கீழ் வெளியில் வந்தாலும், சாதாரண குடும்ப வாழ்க்கைக்கு இசைவாக்கமடைவதற்கே பல மாதங்கள் எடுக்கும். சிலருக்கு வருடக்கணக்காகவும் ஆகலாம். அது மட்டுமல்லாமல், விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள எவரும் அரசியல் கைதிகளாக அரசாங்கத்தின் சிறைச்சாலைகளில் இல்லை. விடுதலைப்புலிகளுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் காரணமாகவும், நிர்ப்பந்தம் காரணமாகவும் உதவி புரிந்தவர்களே சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

சிறைச்சாலைகளில் இருக்கின்ற 217 அல்லது 273 தமிழ் அரசியல் கைதிளும் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டால், மீண்டும் நாட்டில் அரசாங்கமும் அரச படைகளும் அஞ்சுகின்ற வகையில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது. அதற்கான மன வலிமையும், உடல் வலிமையும் அவர்களிடம் கிடையாது. சிறைச்சாலை வாழ்க்கை அத்தகைய சக்தி எல்லாவற்றையும் உறிஞ்சி எடுத்துவிட்டு, அவர்களை வெறும் கோதாகவே வைத்திருக்கின்றது.

அதுமட்டுமல்லாமல், பல வருட சிறைவாழ்க்கை வாழ்ந்துள்ள அவர்கள் தங்களுடைய குடும்பங்களுடன் இணைந்து சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கே ஏங்கிக்கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களை மனிதாபிமான அடிப்படையில், தமிழ் மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் சம்பாதிக்கின்ற வகையில் அரசாங்கம் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும்.

இதற்கான உறுதியான நடவடிக்கையை நாட்டில் நல்லாட்சியை உருவாக்கியதாகக் கருதப்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்க வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது இன்றைய அரசியல் சூழலில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சுமுகமானதோர் அரசியல் உறவின் ஆரம்பமாக, ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கின்றது என்பதையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனங்கொள்வது நல்லது.

வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல