ஞாயிறு, 3 ஜனவரி, 2016

தமிழ் மக்களின் தூரதிர்ஷ்டம்...

தமிழ் மக்கள் பேர­வையின் உரு­வாக்கம் தமிழர் அர­சியல் பரப்பில், நன்மை தீமை­க­ளையும் தாண்டி, ஒரு பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருக்­கி­றது.
இதற்கு சாத­க­மா­கவும், பாத­க­மா­கவும், பல்­வேறு தரப்­பி­னரும், விமர்­ச­னங்­களை முன்­வைத்து வரு­கின்­றனர்.


தமிழ் மக்கள் பேர­வைக்கு அர­சியல் நோக்கம் கிடை­யாது அதில் ஈடு­படப் போவ­தில்லை என்ற அதி­லுள்­ள­வர்­களின் வாதம் உண்­மை­யென்றே வைத்துக் கொண்­டாலும், இந்த அமைப்பு எதனைச் செய்யப் போகி­றது –- எங்­கி­ருந்து செய்யப் போகி­றது- – யாரை வைத்துச் செயற்­படப் போகி­றது என்ற கேள்­விகள் இருக்­கின்­றன.

இந்தப் பேரவை பல்­வேறு துறைசார் கட்­ட­மைப்­பு­களைக் கொண்டு செயற்­ப­ட­வுள்­ள­தாக கூறி­யி­ருக்­கின்ற போதிலும், இது­வரை அது உரு­வாக்­கி­யுள்ள கட்­ட­மைப்பு, தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வுக்­கான திட்­டத்தை தயா­ரிக்கும் நிபுணர் குழு மட்டும் தான். இந்த உபகுழு அடுத்த மூன்று மாதங்­க­ளுக்குள் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு ஒன்றை முன்­வைக்­க­வுள்­ள­தா­கவும், அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தை அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்றி, புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை வரையும், முயற்­சியில் அர­சாங்கம் இறங்­கி­யுள்ள நிலையில் தான், தமிழ் மக்கள் பேர­வையும் இந்த முயற்­சியில் இறங்­கி­யுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் போது, தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கான யோச­னை­களை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் முன்­வைக்கத் தயா­ராகி வரு­கின்ற நிலை­யி­லேயே, தமிழ் மக்கள் பேர­வையும் அதே முயற்­சியில் இறங்­கி­யி­ருக்­கி­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்­கான தீர்வை தனியே அர­சி­யல்­வா­தி­க­ளிடம் மட்டும் விட்டு விட முடி­யாது என்றும், தமி­ழர்­களின் தலை­வி­தியை ஒரு சில தனி­ந­பர்கள் மாத்­திரம் தீர்­மா­னித்துவிட முடி­யாது என்றும், தமிழ் மக்கள்
 பேரவை கூறு­கின்­றது.

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்கு சமஷ்டி முறை­யி­லான தீர்­வையே முன்­வைக்கப் போவ­தாக, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே கூறி­யி­ருந்­தது. தேர்தல் அறிக்­கை­யிலும் அது­பற்­றிய வாக்­கு­று­தியே கொடுக்­கப்­பட்­டது.
அது போன்று தமிழ் மக்கள் பேரவை முன்­வைக்கப் போகும் யோச­னையும் அத­னை­யொட்­டிய ஒன்­றா­கவே இருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை. உப­கு­ழுவில் உள்ள சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் அது­பற்றிக் கூறியும் இருக்­கிறார்.
ஆனாலும், இரண்டு தரப்­பி­ன­ராலும், வெவ்­வேறு பாத்­தி­ரங்­களில் தான் இந்த சமஷ்டித் தீர்வு முன்­வைக்­கப்­பட விருக்­கின்­றது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைக்கப் போகும் யோச­னைகள் குறித்து அனை­வ­ரு­டனும் கலந்­து­ரை­யா­டப்­படும் என்ற உறு­தி­மொ­ழியை இரா. சம்­பந்தன் தன்­னிடம் கொடுத்­தி­ருப்­ப­தாக, வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­தி­ருந்தார்.
அதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தீர்வு யோச­னைகள் இரண்­டொ­ரு­வ­ருக்குள் தயா­ரிக்­கப்­ப­டு­வ­தாக சொல்­லப்­படும் குறை­பா­டுகள், தமிழ் மக்கள் பேர­வைக்கும் பொருந்தும்.

ஏனென்றால், தமக்குள் தெரிவு செய்­யப்­பட்ட 15 பேர் தயா­ரிக்­க­வுள்ள அந்த யோச­னையை, தம்மைத் தாமே தெரிவு செய்து கொண்ட தமிழ் மக்கள் பேர­வையின் 30 உறுப்­பி­னர்கள்தான் அங்­கீ­க­ரிக்கப் போகின்­றனர். அதற்குப் பின்னர், மக்­களின் முன்­பாக அந்த தீர்வு யோச­னைகள் முன்­வைக்­கப்­படும் என்று தமிழ் மக்கள் பேரவை அறி­வித்­தி­ருக்­கி­றது.

ஆனால், அவர்கள் ஏற்­றுக்­கொண்ட அந்த யோச­னை­களில் பொது­மக்கள் எவ்­வாறு திருத்தம் செய்ய முடியும் என்றோ, அவ்­வாறு முன்­மொ­ழி­யப்­படும் திருத்­தங்கள் ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்றோ எந்த உத்­த­ர­வா­தமும் கொடுக்­கப்­ப­ட­வில்லை. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதனைச் செய்­கி­றதோ, அத­னையே இந்தப் பேர­வையும் செய்யப் போகி­றது.

இங்கு தமிழ் மக்­களின் கருத்­துக்கள் எந்­த­ள­வுக்கு ஜன­நா­யக பூர்­வ­மாக உள்­வாங்­கப்­படும் என்ற சந்­தே­கங்கள் இருக்­கின்­றன.

இந்­த­நி­லையில், தம்மை மக்­களின் பிர­தி­நி­திகள் என்ற அதி­கா­ரத்தில், அர­சி­ய­ல­மைப்பை வரையும் தகுதி இருப்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எண்ணிக் கொள்­வ­தற்கும், தேர்தல் ஒன்றின் மூலம், தமிழ் மக்­களின் அங்­கீ­கா­ரத்தைப் பெறாத ஒரு அமைப்பு அவ்­வாறு செயற்­பட எத்­த­னிப்­ப­தற்கும் இடையில் வேறு­பா­டுகள் இருக்­கின்­றன.

விடு­தலைப் புலிகள் அமைப்பு ஒரு போதும் தேர்­தல்­களில் மக்­களின் ஆத­ரவைக் கோரி­யது கிடை­யாது. ஆனாலும், தமிழ் மக்­களின் ஆத­ரவு அவர்­க­ளுக்கு இருக்­க­வில்­லையா என்ற முணு­மு­ணுப்­புகள் காதில் கேட்­கவே செய்­கி­றது.

அது உண்மை. புலி­களை மக்கள் ஆத­ரித்­தார்கள். அது­போ­லவே புலிகள் யாருக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்று விரும்­பி­னார்­களோ அவர்­க­ளுக்கும் மக்கள் வாக்­க­ளித்­தார்கள்.

ஆனால், தமிழ் மக்கள் பேரவை விடு­தலைப் புலி­களின் அள­வுக்கு தூய்­மை­யா­னது என்று எவ­ராலும் கூற­மு­டி­யாது. ஏனென்றால் அதி­லுள்­ள­வர்­களின் கடந்­த­காலம் பற்றி அறிந்­த­வர்கள் எவரும் அந்த உண்­மையை ஏற்றுக் கொள்வர்.
அது­போல, இந்த அமைப்­பி­லுள்­ள­வர்கள் இதற்கு முன்னர் தேர்­தல்­களில் யாருக்கு வாக்­க­ளிக்­கு­மாறு கைகாட்­டி­னரோ அவர்­க­ளுக்கு தமிழ் மக்கள் வாக்­க­ளித்­தி­ருக்­க­வு­மில்லை.

எனவே, இந்த விட­யத்தில், விடு­தலைப் புலி­களை இழுத்து நியா­யப்­ப­டுத்திக் கொள்ளக் கூடாது.

தமிழ் மக்­க­ளிடம் இருந்து அவர்­க­ளுக்­காக தீர்வு ஒன்றை பெறு­வ­தற்கு உறு­தி­யான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டால் அது வர­வேற்­றப்­பட வேண்­டிய முயற்சி.

ஆனாலும், அது எந்­த­ள­வுக்கு சாத்­தி­ய­மா­னது- பக்­க­சார்­பற்­ற­தாக இருக்கும், நிபுணர் குழு எனச் சொல்­லப்­ப­டுவோர் அதில் தமது கருத்­துக்­களை திணிக்க முனை­ய­மாட்­டார்கள் என்­ப­தற்கு என்ன உத்­த­ர­வாதம் என்ற
கேள்­வி­க­ளெல்லாம் உள்­ளன.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு என்­றாலும் சரி, தமிழ் மக்கள் பேரவை என்­றாலும் சரி, தமிழ் மக்கள் முன் தமது தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைப்­பது முக்­கி­ய­மான விட­ய­மல்ல.

அந்த திட்­டத்தில் தமிழ் மக்கள் தமக்குத் தேவை­யான திருத்­தங்­களை முன்­வைத்தால், அதனை ஏற்றுக் கொள்ளும் பக்­குவம் அவர்­க­ளுக்கு இருக்க வேண்டும் என்­பதே முக்­கி­ய­மா­னது.

அத்­த­கைய நோக்கம் அல்­லது நெகிழ்­வுத்­தன்மை இல்­லா­விட்டால், அடி­மட்டத் தமிழ் மக்­களின் தீர்வுத் திட்­ட­மாக அதனை பிரே­ரிக்கக் கூடாது.
அவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் அதனை கூட்­ட­மைப்பின் தீர்வுத் திட்­ட­மா­கவோ, பேர­வையின் தீர்வுத் திட்­ட­மா­கவோ தான் முன்­மொ­ழிய வேண்டும்.

அதே­வே­ளையில், தனது யோச­னையை தமிழ் மக்­களின் அர­சியல் பிர­தி­நி­திகள் என்ற கோதாவில் கூட்­ட­மைப்பு முன்­வைக்­கலாம். ஏனென்றால் அவர்­க­ளுக்கு அந்த ஆணை தேர்­தலில் கொடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
ஆனால் தமிழ் மக்கள் பேரவை ஒரு சிவில் அமைப்­பா­கவே அதனை முன்­வைக்க வேண்­டி­யி­ருக்கும்.

சிவில் அமைப்­பு­களின் கருத்­துகள், அர­சி­ய­ல­மைப்பு திருத்­தங்­களின் போது கவ­னத்தில் கொள்­ளப்­படும் என்­றாலும், அர­சியல் கட்­சி­களின் கருத்­துக்­க­ளுக்கே கூடுதல் முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­படும்.

இத்­த­கைய கட்­டத்தில், தமிழ் மக்கள் பேரவை முன்­வைக்கப் போகும் தீர்வு யோச­னைகள் கருத்தில் கொள்­ளப்­ப­டுமா என்­பது கேள்­விக்­கு­ரி­யது.
இதே யோச­னைகள் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடாக முன்­வைக்­கப்­பட்டால், அதற்கு கூடுதல் பெறு­மானம் இருக்கும் என்­பது உண்மை.

ஆனால், கூட்­ட­மைப்­புடன் இணைந்து, அத்­த­கை­ய­தொரு யோச­னையை முன்­வைக்கும் அள­வுக்கு தமிழ் மக்கள் பேரவை எந்த முயற்­சி­க­ளையும் முன்­னெ­டுத்­தி­ருக்­க­வில்லை. அத்­த­கைய நெகிழ்­வுப்­போக்கும் அத­னிடம் இல்லை.
கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­தல்ல என்றும், அதற்கு ஆத­ர­வான ஒரு அமைப்பே என்றும் நம்ப வைக்க முனையும் தமிழ் மக்கள் பேரவை, கூட்­ட­மைப்­புடன் இணைந்து செயற்­ப­டத்­தக்க ஒரு நிகழ்ச்சி நிரலை கொண்டு செயற்­பட்­டி­ருக்­க­வில்லை.

அதன் ஆரம்பம் தொடக்கம் தற்­போது வரை­யான நட­வ­டிக்­கைகள் அனைத்தும், கூட்­ட­மைப்பை விமர்­சிக்கும் வகை­யி­லா­ன­தாக, அதற்கு கடுப்­பேற்றும் வகை­யி­லா­ன­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றன.

இப்­ப­டி­யான நிலையில், கூட்­ட­மைப்பின் ஊடாக, தமிழ் மக்கள் பேர­வையின் யோச­னை­களை எவ்­வாறு முன்­வைக்க முடியும் என்ற கேள்வி எழு­கி­றது.
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும், தமிழ் மக்கள் பேர­வையும், இரண்­டு­பட்டு நின்று தமிழ் மக்­களின் தீர்வுத் திட்­டத்தை முன்­வைக்­கின்ற போது, சிங்­களப் பேரி­ன­வா­திகள் இரண்­டை­யுமே இல­கு­வாகத் தட்­டிக்­க­ழித்து விட முனை­வார்கள் என்­பதில் சந்­தே­க­மில்லை.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எந்­த­வொரு தீர்­வையும் முன்­வைக்­காத நிலையில், அதன் தீர்வுத் திட்­டத்தின் மீது கேள்வி எழுப்­பு­வதோ, சோரம் போய்­விட்­ட­தாக குற்­றம்­சாட்­டு­வதோ அபத்­த­மா­னது.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மூலம் காத்­தி­ர­மான ஒரு தீர்வுத் திட்­டத்தை முன்­வைப்­ப­தற்­கான வாய்ப்­பு­களைப் பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால், அது கூடுதல் பய­னு­டை­ய­தாக இருந்­தி­ருக்கும்.

அவ்­வா­றா­ன­தொரு வாய்ப்பை, தமிழ் மக்கள் பேர­வை­யி­லுள்­ள­வர்கள் பயன்­ப­டுத்த முனை­ய­வில்லை என்­பதை விட, பயன்­ப­டுத்திக் கொள்ள விரும்­ப­வில்லை என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தும் சிந்தனையிலுள்ளவர்களே பேரவையில் அதிகம் உள்ளதால், அவர்கள் அத்தகைய நிகழ்ச்சி நிரலுக்கே முன்னுரிமை கொடுத்திருந்தனதே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒன்றுபட்ட தீர்வு ஒன்றை முன்வைக்க வேண்டும் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை.
இவ்வாறாக தமிழர் தரப்பு இரண்டுபட்ட போதெல்லாம், சிங்களப் பேரினவாதமே வெற்றியைப் பெற்றிருக்கிறது. இது தமிழரின் துன்பம் தோய்ந்த வரலாறு. இதனை மீண்டும் எவருக்கும் நினைவுபடுத்த வேண்டியதில்லை.

அதேவேளை, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், தமது பிரச்சினைக்கு நியாயமான நீதியான தீர்வு ஒன்றே அவசியம் என்பதே அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு.

தமிழ் மக்களின் இந்த எதிர்பார்ப்பும், அபிலாசைகளும், உள்ளக, வெளியக அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்குப்பட நேர்ந்திருப்பது அவர்களின் துரதிஷ்டம் என்றே கூற வேண்டும்.

-என்.கண்ணன்

வீரகேசரி





Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல