சனி, 30 ஜூலை, 2016

எருமை மாட்டை பேட்டி எடுத்த நிருபர் (வீடியோ)

பாகிஸ்தானில் பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் எருமை மாட்டிடம் பேட்டி எடுத்த வினோத சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானின் பிரபல ஜியோ தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகப் பணியாற்றி வருபவர் அமின் ஹபீஸ்.

வெள்ளி, 29 ஜூலை, 2016

சிம்பிளான... நாட்டுக் கோழி குழம்பு

தேவையான பொருட்கள்:
நாட்டுக் கோழி - 1 கிலோ
வெங்காயம் - 3 (நறுக்கியது)
தக்காளி - 3 (நறுக்கியது)
சிக்கன் மசாலா பவுடர் - 50 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

வியாழன், 28 ஜூலை, 2016

சிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!

உண்மை #1


ஒருநாளுக்கு ஒருவர் 7 முறை வரை சிறுநீர் கழிப்பது சாதாரணமாகும். இதை காட்டிலும், மிக குறைவாக அல்லது அதிகமாக சிறுநீர் கழிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் ஏதோ மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதன் அறிகுறி.

அக்காவை போல் நடித்த மனைவி… தம்பியாக நடித்த கணவன்! – ஃபேஸ்புக் மூலம் ஏமாந்த பெண்கள்

திருச்சி நாவல்பட்டு போலீஸார் ஆண்-பெண் இருவரை கைது செய்தனர். ரியல் கணவன் மனைவியான இவர்கள், அக்கா தம்பி என அறிமுகம் ஆகி, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் பல பெண்களை ஏமாற்றி இருப்பது அம்பலம் ஆகியுள்ளது.

திங்கள், 25 ஜூலை, 2016

மாட்டிறைச்சி என்ற பெயரில் மனித இறைச்சியை ஏற்றுமதி செய்கிறதா சீனா?

சீனா என்றாலே பலருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும். தொழில்நுட்ப சாதனங்களில் இருந்து உணவு உற்பத்தி வரை உலகெங்கிலும் போலிகளின் அரசனாய் திகழ்கிறது சீனா.

சமீப காலமாக உணவுகளில் போலி தயாரிப்பை சீன உணவு மற்றும் சுகாதார அமைச்சகம் மிகக் கறாராக கண்காணித்து வருகிறது.

வியாழன், 21 ஜூலை, 2016

150 இலட்சம் சுவிஸ் பிறாங் பண வசூல்!!: விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாக 13 பேருக்கு எதிராக சுவிசில் வழக்கு

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்காக எனச்சொல்லி தமிழர்களிடமிருந்து அதிநவீன முறையில் வங்கிகளிலிருந்து “150 இலட்சம் சுவிஸ் பிறாங்”களை கடனாக (15 மில்லியன்) திரட்டினார்கள் என்று, விடுதலைப் புலிகளின் 13 செயற்பாட்டாளர்களுக்கு எதிராக சுவிஸ் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண், காரணம் என்ன?

இருபது வயதே நிரம்பிய அழகிய பெண். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது.

தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போராடி வாழ்ந்து வருகிறார் நிக்கோல். ஒருமுறை உறங்கினால் இவர் எழுந்திருக்க மாதங்கள் ஆகின்றன.

உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக்ஆஸ் டாரண்ட்ஸ் முடக்கம்

உலகின் மிகப் பெரிய தகவல் திருட்டு இணையதளமான கிக் ஆஸ் டாரண்ட்ஸ் (Kickass Torrents) முடக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் உரிமையாளர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஆர்டம் வாலின் என்பவரை போலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கள், 18 ஜூலை, 2016

"போக்கிமான் கோ (pokemon-go) வெற்றி : பின்னணியில் உளவியல் காரணங்கள்.!!"

ஜூலை 06, 2016 ஆம் தேதி அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் போக்கிமான் கோ ஆக்மென்ட்டட் ரியால்டி கேம் வெளியிடப்பட்டது. அதன்பின் இரண்டாம் கட்டமாக மேலும் சில நாடுகளிலும் போக்கிமான் கோ வெளியிடப்பட்டது. அதன் பின் உலகெங்கும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போக்கிமான் கோ தொடர்ந்து ட்ரென்ட் ஆனது. இதன் விளைவாகக் கூகுள் தேடலில் புதிய சாதனைப் படைத்தது.

இறுதிப்போர்: புலிகளின் முடிவுபோல் …ஐ.எஸ். அமைப்பின் முடிவும் நெருங்குகிறது..!!: அழிப்புப் போருக்கு தயாராகும் உலக நாடுகள்!

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசமான “நடைமுறை இஸ்லாமிய தேசம்” சுருங்கிக் கொண்டிருக்கிறது. அது தற்போது இறுதிப்போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

ஞாயிறு, 17 ஜூலை, 2016

துருக்கியில் ராணுவப் புரட்சிக்குக் காரணம் என்ன?

துருக்கிய ராணுவ வீரரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கச் செல்கின்றனர். | படம்: ஏ.பி.

துருக்கி ராணுவம் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக நடத்த முயற்சி செய்த ராணுவப் புரட்சிக்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன.

வரலாற்று ரீதியாக அரசியலில் துருக்கிய ராணுவம் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மதச்சார்பின்மை அரசியல் கொண்டது. ஜனநாயகம், அனைவருக்கும் இலவசக் கல்வி, பெண்களுக்கான சம உரிமை, மேற்கத்திய பாணி வாழ்க்கை முறை ஆகியவற்றை தங்களது கொள்கையாக வைத்துக் கொண்டுள்ள கீமலிசம் என்ற கொள்கையை ராணுவம் தூக்கிப் பிடிக்கிறது. மேலும் இவைதான் அரசின் கொள்கையாகவும் இருக்க வேண்டும் எனக் கருதுவது துருக்கிய ராணுவம்.

புதன், 13 ஜூலை, 2016

சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)

• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். இப்போதுதான் நான் என்னைப் பற்றிய முடிவை எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்ந்தேன். சயனைட் குப்பியைக் கடிப்பதா? என்னை நானே சுட்டுக் கொல்வதா?

• உயிருடன் இருக்கும் ஒரு போராளி மக்களோடு சேர்ந்து வெளியேற வேண்டும் அல்லது தன்னைத்தானே அழித்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தவிர வேறு வழியேதும் இருக்கவில்லை.

• வார்த்தைகளால் விபரிக்க முடியாதபடி இரத்தமும் தசையுமாக இதயத்தை அறுத்துக் கொல்லும் வலிகளோடு முள்ளிவாய்க்காலிலிருந்து வெளியேறிய அந்தச் சூழ்நிலையை இலகுவில் புரிய வைக்க முடியாது.

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி ஒரு கேவலமான வேலையை செய்ய உத்தரவிட்ட இயக்கம்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

• இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது.

• “சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியைப் பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாகச் சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா

• தமிழ் மக்களுக்கான ஆயுதப் போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இனஅழிவை ஏற்படுத்தியிருந்தது?

செவ்வாய், 12 ஜூலை, 2016

இலங்கை நடிகர் மரிக்கார் ராம்தாஸ் இன்று காலமானார்

இலங்கையின் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மரிக்கார் எஸ்.ராம்தாஸ் தனது 69வது வயதில் சென்னையில் காலமானார்.

திங்கள், 11 ஜூலை, 2016

சுவாதி கொலையில் ராம்குமார் குற்றவாளியா? ஒரு வழக்கறிஞர் எழுப்பும் 50 கேள்விகள்

 image source: google                                       சுவாதி

சென்னை: மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வள்ளிநாயகம் சுட்கி என்பவர் 50 கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் எழுதிய பதிவை அப்படியே தருகிறோம் படியுங்கள்.

உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க இந்த ஜூஸ் குடிங்க!

தேவையான பொருட்கள்:

1) வாழைப்பழம் - 1

2) முந்திரி - 60 கிராம்

3) ப்ளூபெர்ரி - 120 கிராம்

4) பால் - 180 மில்லி லிட்டர்

ஒரே மாதத்தில் மெலிந்த முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ்களை ட்ரை பண்ணுங்க...

தற்போது தலைமுடி பிரச்சனை என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒன்றாக உள்ளது. தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணிகள் உள்ளன. அதில் அளவுக்கு அதிகமாக உடல் மற்றும் மனம் அழுத்தத்திற்குள்ளாவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், அலர்ஜி, மோசமான தலைமுடிப் பராமரிப்பு மற்றும் தவறான தலைமுடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஞாயிறு, 10 ஜூலை, 2016

ஓய்­வுக்குப்பின் ஓரங்­கட்­டப்­படும் முதி­யோர்கள்

சுருங்­கிய தோள், மங்­கிய கண், நரைத்த முடி என முதுமை பருவம் எய்தி, 60 வய­துக்கு பின்­னரும் ஓய்­வெ­டுக்க முடி­யாமல் பசிக்­காக உழைத்­துக்­கொண்­டி­ருக்கும் சிரேஷ்ட பிர­ஜைகள் எனப்­படும் முதி­யோர்கள் எம்மத்தியில் இன்னும் வாழ்ந்­து­கொண்­டுதான் இருக்­கின்­றனர்.
20 வயதில் உழைக்க ஆரம்­பிக்கும் ஒருவர் சுமார் 40 ஆண்­டுகள் குடும்­பத்­துக்­கா­கவும் குழந்­தை­க­ளுக்­கா­கவும் நிர்­வா­கத்­துக்­கா­கவும் உழைத்து களைத்து போகின்­றனர். உழைப்பின் பின் இளைப்­பாற இவர்­க­ளுக்கு நிம்­ம­தி­யான ஒரு இருப்­பிடம் கூட இல்­லா­துள்­ள­மையே கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

தாம்பத்ய வாழ்வில் பிளவு ஏற்படுவதேன்? ஓர் இல­கு­வான கைரேகை விளக்கம்

கையில் இதர ரேகைகள் பிழை­பட்­டி­ருந்­தாலும் ஐக்­கிய ரேகை சிறப்­பாக அமைந்­தி­ருக்கக் காணப்­பட்டால் மாத்­தி­ரமே பரி­கா­ரங்கள் செய்­வதால் பலன் கிடைக்கும்.
புத்தி ஜீவிகள் என்­றொரு சாரார் அல்­லது சாதியார் இன்று நம்­மி­டையே தோன்­றி­யுள்­ளனர். இவர்கள் புத்­திக்கு மட்­டுமே வேலை கொடுத்து வாழ்க்­கையை நடத்­து­ப­வர்கள். அன்பு, பாசம், புரிந்­து­ணர்வு, தியாகம் என்­ப­தெல்லாம் இவர்­க­ளது அக­ரா­தியில் கிடை­யாது போல் தோன்­று­கி­றது. ஏனென்றால் ஒன்­று­மில்­லா­த­வாறு அதி­க­ரித்­துள்ள இந்தச் சாதி­யாரின் நட­வ­டிக்­கை­களால் தான் இன்று நம் சமூ­கத்தில் பிரிவு, பிளவு, சண்டை, யுத்தம் போன்­ற­வை­யெல்லாம் அதி­க­ம­தி­கமாய்த் தோன்­றி­யுள்­ளன.

"ஒரு கூர்வாளின் நிழலில்" சிங்­கள சமூ­கத்தை சுய பரி­சோ­தனை செய்ய வைத்­துள்­ளது தமி­ழி­னியின் கணவர் ம. ஜெயக்­கு­மரன் தெரி­விக்­கின்றார்

மறைந்த முன்னாள் தமிழ்ப்­போ­ரா­ளி­யான தமி­ழி­னியின் புத்­த­க­மா­னது சிங்­கள சமூ­கங்­க­ளி­டையே, சுய­ப­ரி­சோ­தனை செய்­வ­தற்­கான ஒரு எழுச்­சியை அவர்கள் மனங்­களில் உரு­வாக்­கி­ய­மையே இப்­புத்­த­கத்­திற்கு கிடைத்த வெற்றி என நான் நினைக்­கின்றேன். சிங்­க­ளத்தில் கிட்­டத்­தட்ட 6,000 பிர­தி­க­ளுக்கு மேல் விற்­ப­னை­யா­கி­யுள்­ளது. இப்­புத்­த­கத்தின் சிங்­கள வெளி­யீட்­டாளர் உண்­மை­யி­லேயே இப்­புத்­த­கத்­தினால் கிடைக்கும் நிதியை மஹ­ர­கமை புற்­றுநோய் வைத்­தி­ய­சா­லையில் சிறுவர் பிரி­விற்கு வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­கின்றார். தமி­ழி­னியின் இறுதி விருப்­பமும் இது­வா­கவே இருந்­தது என தமி­ழி­னியின் கணவர் ம.ஜெயக்­கு­மரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யின்­போது தெரி­வித்தார்.
அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாகக் கீழே தரப்­ப­டு­கின்­றது.

கைகள் சொல்லும் ஜோதிடம்

பெண்­களின் கைக­ளது அமைப்பை வைத்து அவர்­க­ளது குணா­தி­ச­யங்கள் தொகுக்­கப்­பட்­டுள்­ளன. அந்­த­வ­கையில் உங்­க­ளு­டைய கைகள் இதில் எந்த வகை?

* கைகள் மிரு­து­வாக இருந்தால், அத்­த­கைய பெண்கள் முயலும் எல்லா வேலை­களும் தடை­யின்றி நிறை­வேறும். இலா­பமும் கிடைக்கும். தர்ம காரி­யங்­களில் அதிக ஈடு­பாடு கொண்­ட­வர்­க­ளாக இருப்பர்.

கரு தங்­கும்­போது பெண்­களின் உடலில் ஏற்­படும் மாற்­றங்கள்

ஒரு பெண் இப்­பூ­மியில் பிறந்து வளர்ந்து கல்வி, தொழில்­நி­லை­களில் உயர்­நி­லை­களை அடைந்து எவ்­வ­ளவு முன்­னே­றி­னாலும் ஒரு திரு­ம­ணமும் அதனைத் தொடர்ந்து ஏற்­படும் தாய்மைப் பேறுமே அவ­ளது வாழ்வை முழு­மை­யாக்­கு­கின்­றன. இதுவே இயற்­கையும் இறை­வனின் படைப்பும்.

மக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)

• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான நடவடிக்கைகளால் எவ்விதப் பயனுமில்லை எனத் தெரிந்தும் ஒரு விடாப்பிடியான மனநிலையுடன் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

• இயக்கம் எவ்வளவுதான் தடைகளைப் போட்டாலும் துப்பாக்கிப் பிரயோகங்களைச் செய்தாலும், மக்கள் இயக்கத்திலிருந்த தமது பிள்ளைகளையும் தேடிப்பிடித்துக் கூட்டிக்கொண்டு வெளியேறத் தொடங்கியிருந்தார்கள்.

சனி, 9 ஜூலை, 2016

வாஸ்து தோஷத்தை நீக்கும் விஞ்ஞான பூர்வமான பரிகாரம்!

வீட்­டைக்­கட்டி பார், கல்­யாணம் பண்­ணிப்பார் என்­பது முது­மொழி. ஆனால் வாஸ்து படி வீட்­டைக்­கட்டி பார் என்­பது இன்­றைய புது­மொழி. வீடு கட்­டு­வ­தற்­கான மனை வாங்­கு­வ­தற்கே மலை­ய­ளவு உழைக்­க­வேண்­டி­ய­ி­ருக்கும். இந்த காலத்தில் வாங்­கிய மனையில் வாஸ்து படி வீட்டை அமைக்க அனை­வரும் விரும்­பு­வார்கள். ஆனால் அனை­வ­ருக்கும் அது சாத்­தி­ய­மா­குமா? என்றால் நடை­மு­றையில் சாத்­தி­ய­மா­காது என்று உறு­தி­யாக சொல்­லலாம். ஏனெனில் வாஸ்து முறைப்­படி வீட்டை கட்­ட­வேண்டும் என்றால் வாஸ்து கூறும் விதி­மு­றை­களைப் பாருங்கள்.

மூக்கு – சென்­டி­மெண்ட்டும் ட்ரீட்­மெண்ட்டும்

ஒவ்­வொரு பெண்ணின் அழ­கையும் அவ­ரு­டைய கண் அல்­லது மூக்­கோடு ஒப்­பிட்டு தான் பேசு­வார்கள். உதா­ர­ண­மாக மூக்கு முழி­யு­மாக இருக்­கிறாள் என்றோ, கண்ணு நல்­லா­யி­ருக்கு ஆனா, இந்த மூக்கு தான் கொஞ்சம் எடுப்பா இருக்கு என்றோ சொல்­லக்­கேட்­டி­ருப்போம். அத்­துடன், ஒரு பெண்ணின் தோற்றப் பொலிவை அதி­கப்­ப­டுத்­து­வதும் மூக்கே. மேலும் பெண்ணின் முகத்தில் அமைந்­துள்ள மூக்கு, அழ­கைத்­த­ரு­வ­துடன் அவ­ரது குண இயல்பின் வெளிப்­பா­டா­கவும் கரு­த­கி­றார்கள். அதனால் ஒவ்­வொரு பெண்ணும் ஒப்­பனை செய்து கொள்­வதில் மூக்­குக்கு முக்­கி­யத்­துவம் தரு­கிறாள். கிளி மூக்கு, குடை மிளகாய் மூக்கு, சப்பை மூக்கு, கோண­லான மூக்கு, கூரான மூக்கு என மூக்கின் தோற்­றத்தை வைத்து பெண்­களை குறிப்­பி­டு­வ­தையும் காண்­கிறோம்.

வியாழன், 7 ஜூலை, 2016

ஐ.எஸ். தீவி­ர­வாத குழு­வி­லி­ருந்து தப்­பிச்­செல்ல முயற்­சித்த 7 பேருக்கு உயி­ருடன் கொதி நீரில் வேக­வைத்து மர­ண­தண்­டனை

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், தமது சொந்த தீவி­ர­வாத குழு­வி­லி­ருந்து தப்­பிச்­செல்ல முயற்­சித்த 7 பேருக்கு, உயி­ருடன் கொதித்துக் கொண்­டி­ருந்த நீரில் வேக­வைத்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றி­யுள்­ளனர்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது ஏன்?

உலகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் வார்த்தை `பிரெக்ஸிட்'. ஐரோப்பிய யூனியனின் மிக வலுவான பிரிட்டன் அதில் இருந்து விலக வேண்டும் என்னும் முடிவை மக்களே எடுத்திருப்பது பொருளாதார முன்னேற்றத்தைப் பாதிக்கும் என்கிற அச்சத்தை விதைத்திருக்கிறது.

ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் ஏன் விலகுகிறது என்பதை எளிமையாகப் புரிந்துகொள்ள, இந்த ஐந்து கேள்விகள் உதவும்.

செவ்வாய், 5 ஜூலை, 2016

எளிய ஆங்கிலத்தில் மாற்றி எழுத ஒரு இணைய தளம்

ஒரு மொழியில் எழுதுகையில், எழுதப்படுவது அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் வகையில் எளிமையாகஎழுதலாம். அடிக்கடி பயன்படுத்தாத, அல்லது சற்று நேரம் எடுத்துப் புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களைக்
கொண்டும் எழுதலாம். எடுத்துக் காட்டாக, தமிழில் 'ஜன்னல்' என்பதை ஜன்னல் என்று எழுதினால், வழக்குமொழிச் சொல் எனப் பலரும் புரிந்து கொள்வார்கள். 'சாளரம்' என்று எழுதினால், “இதென்ன புலவர் தமிழாக
உள்ளதே” எனச் சிலர் புரிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எழுத்துருக்கள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்க முறைமைகள், சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்களை ஏற்றுச் செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. சில பதிப்பாளர்கள், இந்த இயக்க முறைமையில் இயங்கும் வகையில், எழுத்துருக்களை உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். நம் டாகுமெண்ட்கள் சிறப்பாக அமைய வேண்டுமென்றால், நம் கலைப் படைப்புகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்றால், பிற நிறுவனங்கள் தரும் இந்த எழுத்துருக்களையும் பயன்படுத்த வேண்டியதுள்ளது. இவற்றை எப்படி, விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பதிந்து பயன்படுத்தலாம் மற்றும் தேவைப்படாத போது நீக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.

அடுத்த ஆண்ட்ராய்ட் மொபைல் சிஸ்டம் 'நகெட்'

மொபைல் போனில் இயங்கும் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்புகளை வெளியிடுகையில், கூகுள் அதற்கு ஏதேனும் ஓர் இனிப்பு பண்டத்தின் பெயரை வைப்பது வழக்கம். வர இருக்கும் புதிய சிஸ்டத்தின் பெயரை, சென்ற ஜுன் 30ல் கூகுள் அறிவித்தது. அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, இதன் பெயர் Android Nougat என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில், உணவிற்குப் பின் சுவைக்க எடுத்துக் கொள்ளப்படும் ஓர் இனிப்பாகும். இதனைச் சிலர் “நூகா” என்றும், சிலர் “நகட்” என்றும் ஆங்கிலத்தில் அழைக்கின்றனர். இங்கு பெரும்பாலும் 'நகெட்' என்றே அழைக்கப்படுகிறது.

திங்கள், 4 ஜூலை, 2016

அடுத்த கொலை.....

பலாத்காரம் செய்யப்பட்டு சிறுமி கொலை

மேட்டூர் அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்து, உடலை பாத்திரத்தில் மூடி வைத்த காட்டுமிராண்டி கைது செய்யப்பட்டான்.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல