வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

சசிகலா சபதம்: கமல்ஹாசன் கிண்டல்?

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை முன் னிட்டு சசிகலா பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந் தார். பெங்களூரு செல்வதற்கு முன்பாக ஜெயலலிதா சமாதிக்கு சென்ற அவர், சமாதியின் மீது கையை ஓங்கி அடித்து சபதம் செய்தார்.



இந்நிலையில் கமல்ஹாசன் தனது ட்விட்டர் தளத்தில் இப்படி பதிவிட்டிருந்தார் :

“திருடனு கூவிகினு ஜனம் தெர்திச்சுன்னா அவன் எஸ்கேப் ஆயிடணுமா வேணாவா? நின்னு நிதானமா
........ கூப்டமார்ரிஞ்சு? அன்னான்னு வச்சிகோ
ஜனமா, நாயகமா?”

என்று குறிப்பிட்டிருந்தார்.

பெங்களூரு சிறைக்கு செல்லும் முன் சசிகலா சபதம் செய்ததை கிண்டல் செய்தே அவர் இந்த கருத்தை பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் - சசிகலா ஆகியோரிடையே நடந்துவரும் மோதலில் ஏற்கெனவே ஓபிஎஸ்-க்கு கமல் ஆதரவு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல