ஞாயிறு, 26 மே, 2013

பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை போட்டிக்கு பதிவு செய்த வினோத தாய்.

லண்டனில் லங்காஷயர் பகுதியைச் சேர்ந்தவர் ஜென்னி ஆலிவர். 26 வயதான இவர் 2 குழந்தைகளின் தாய். தற்போது 7 மாத கர்ப்பிணி. அழகிப்போட்டி, குழந்தைகளுக்கான போட்டி என பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர்.

இலங்கை தமிழ் பணிப்பெண் ஜோர்தானில் மரணம்? கொலையா - தற்கொலையா?

ஜோர்தானில் பணிப்பெண் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் கறுவாக்கேணியை சேர்ந்த 21 வயதான நாகேந்திரன் காந்திமதி என்ற பெண் ஜோர்தானில் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இம்மாதம் 19-ம் திகதி அவரது குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, 25 மே, 2013

கட்டாயம் பர்தாவை அகற்ற வேண்டும்!

நீதிமன்ற விசாரணையின் போது முகத்தை மூடி யிருக்கும் பர்தாவை கட்டாயம் அகற்ற வேண்டும் என முஸ்லீம் பெண் ஒருவருக்கு ஒண்டோரியோ நீதிபதி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ஒண்டோரியோவில் உள்ள முஸ்லீம் பெண் ஒருவர், தன்னை இரண்டு ஆண்கள் ஐந்து வருடங் களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடுத்திருந்தார்.

தண்ணீரென எண்ணி மண்ணெண்ணை அருந்திய குழந்தை உயிரிழப்பு

தண்ணீரென நினைத்து மண்ணெண்ணையை அருந்திய ஒரு வயதுப் பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில்  உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி கல்மடு நகரைச் சேர்ந்த வரதராஜா சங்கவி (1வயது) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிரை காக்க நடந்த முகம் மாற்று ஆபரேஷன் (வீடியோ)

இதுவரை அழகான முகம் வேண்டும் என்பதற்காகவே பலரும் முக மாற்று ஆப்ரேஷன் செய்துள்ளார்கள். ஆனால் முதல் முறையாக இதை உயிர் காக்கும் சிகிச்சையாக மாற்றும் பொருட்டு கல் உடைக்கும் மெஷினில் சிக்கி முகம் சிதைந்து உயிருக்கு போராடிய தொழிலாளிக்கு இந்தஆபரேஷனை செய்து போலந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வெள்ளி, 24 மே, 2013

விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்!!!

முறிவு என்பது கடினமான ஒன்று. விவாகரத்து அடைந்த பெற்றோர்களின் பிள்ளைகள், பெற்றோர்களை விட அதிக அளவில் பாதிப்பு அடைகின்றனர். சில குழந்தைகள் தங்கள் பெற்றோரின் உறவு முறிவால் பாதிப்பு அடைந்தாலும், அதை பொருட்படுத்தாமல் தங்கள் வேலையை பார்த்து வருகின்றன்ர். மற்ற குழந்தைகள் திடீரென நிகழும் மாற்றத்தால், தங்கள் அன்றாட வேளைகளான இரவு உணவிற்கும், வீட்டு பாடங்களை முடிப்பதற்கும் பெற்றோரை நாடி வருகின்றனர்.

வியாழன், 23 மே, 2013

போதையில் குறைப் பிரசவம் : தாய்க்கு ஒரு வருட சிறை

போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் குடி போதையில் குறைப் பிரசவத்தில் குழந்தை ஒன்றை பெற்றமைக்காக அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

உலகின் முலதாவது 'துணிகள்-தெளிப்பான் கண்டுபிடிக்கப்பட்டது

ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் உலகின் முதலாவது 'துணிகள்-தெளிப்பான்' (clothes-spray) ஒன்றை உருவாக்கியுள்ளார்.

மணக்கோலத்தில் தேர்வு எழுதிய மாணவி!

திருமணமும் தேர்வும் ஒரே நாளில் வந்துவிட்டதால் திருமணக்கோலத்தில் வந்து பல்கலை தேர்வை எழுதி முடித்த மாணவியை பலர் பாராட்டியுள்ளனர்.

லண்டனில் முஸ்லீம் பயங்கரவாதிகளின் தாக்குதல் (படங்கள் இணைப்பு)

லண்டனில் நேற்று முஸ்லீம் பயங்கரவாதிகளால் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் அரசின் நெருக்கடி குழுவின் ஒரு அவசரக் கூட்டத்தை கூட்டியுள்ளார்.  பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மிகக் கொடூரமான முறையில் நேற்று மாலை கொல்லப்பட்டார். ஆடு மாடுகளை வெட்டுவது போல அல்லாகு அக்பர் என்று கூறிக்கொண்டு கொலையாளிகள் கண்டதுண்டமாக வெட்டியுள்ளனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல