வெள்ளி, 22 நவம்பர், 2013

தாமஸ் அல்வா எடிசன்

காது கேட்காதவன், மனநலம் பாதிக்கப்பட்டவன் என்று பள்ளியில் இருந்தே துரத்தப்பட்ட தாமஸ் அல்வா எடிசன் தான் இன்றளவும் விஞ்ஞானத்தை கற்பவர்களுக்கு முன்னோடி. அப்படி எடிசன் என்ன தான் செய்து விட்டார் என்று பார்க்கறீர்களா? ஆம் மக்களே ஒலிபெருக்கி, தந்திக்கருவி, மின்சார விளக்கு, மின்சார இயந்திரம், மின்சார இருப்புப் பாதை, தொலைபேசி, கிராம‌போன், திரைப்பட ஒளிப்பதிவுக் கருவி(காமிரா) என மலைக்க வைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை படைத்தவர் கடவுளல்ல; சிறுவயதில் 'மக்கு' என்று பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட எடிசன் தான் இவற்றின் படைப்பாளி.

மலாலாவும், அமெரிக்க இயங்கியலும்

யூசுப் மலாலா...

அவள் நினைவுதவறி மருத்துவமனையில் இருந்தபோது நண்பர்களுக்கு அவளைப் பற்றி நான் அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி என் நினைவுக்கு வருகிறது. அவை முஹம்மது இக்பாலின் வரிகள்:

"பெண்ணை அடிமையாய் எண்ணும் முஸல்மான்

திருக்குர் ஆனால் பயனடையாதவனாவான்".

இன்று மலாலா உலகம் புகழும், போற்றும், துதிக்கும், ஆராதிக்கும் ஒரு பெண். சிகிச்சைக்குப் பின்னரான அவளது தோற்றத்தில் அளவிட முடியாத கருணையும், வீரமும், அழுகும் கூடியிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் தலைவரிடமிருந்தும் அவள் விருதுகள் பெறும்போது சிரமப்பட்டு வெளிப்படுத்தும் புன்னகை ஆயிரம் அர்த்தங்கள் நிரம்பியது. உலகெங்கும் பெண்குழந்தைகளின் கல்விக்காக அவள் தனது விருதை சமர்ப்பிக்கிறாள். பாகிஸ்தானில் பெண்குழந்தைகளுக்கென்று பள்ளிக்கூடம் நிறுவி சேவை செய்ய அவள் விருப்பம் தெரிவிக்கிறாள். படுகொலை செய்யப்பட்ட பெனாசீர் புட்டோவைப் போல‌ பாகிஸ்தான் பிரதமராக வேண்டும் என்ற கனவும் அவளுக்குண்டு. அவளை ஒரு மந்திரப்பெண்ணாகவே பார்க்க ஆரம்பித்திருக்கிறோம்.

உறவு கொள்ள சிறந்த இடம்?

செக்ஸ் உறவு கொள்ள எது சிறந்த இடம்..? இப்படி ஒரு சர்வே எடுக்கப்பட்டுள்ளது ‘காமசூத்ரா காண்டம் நிறுவனம் சார்பில். முதலிடத்தை பெற்றது கார், அடுத்து பாத்ரூம், பப்ளிக் பார்க்.

காண்டம்ன்னா காமசூத்ராதான் என்று பலரும் தெரிந்திருக்கும். அது அவ்வப்போது காண்டம் விழிப்புணர்வுகாக பிரசாரம் செய்வதும், இது போன்று சர்வே எடுப்பதும் உண்டு. அப்படி சமீபத்தில் ஒரு வித்தியாசமான சர்வே எடுத்தது. பல மாநிலங்களிலும் நடந்த இந்த சர்வேயில் பங்கேற்றது 17 ஆயிரத்து 45 பேர். இதில் பாதிப்பேர், சென்னை, மும்பை, டில்லி, கொல்கட்டாவை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக உறவில் ஈடுபடும்போது, வலி ஏற்படுமா?

பெரும்பாலான பெண்கள் முதன்முறை உறவில் ஈடுபடும்போது வலியை உணர்கிறார்கள். வலி உண்டாவதற்கு முதன்மை காரணமாக இருப்பது, பெண் உறுப்பை மூடி இருக்கும், சருமத்தின் உட்புற அடுக்கான 'கன்னி சவ்வு' முதன் முறை உறவு கொள்ளும் போது கிழிய நேரிடுவதே ஆகும். ஆனால் இது எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதில்லை. உங்களுக்கு 'கன்னி சவ்வு ' இருக்குமானால், முதல் உறவின் போது, வலியோ, அல்லது சிறிய அளவிலான இரத்தப்போக்கோ ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. சில பெண்கள் வலியை உணர்வதே இல்லை, அது போல் எல்லா பெண்களுக்கும் 'கன்னி சவ்வு' கிழியும் போது இரத்தப் போக்கு நிகழ்வதில்லை. சில பெண்களுக்கு 'கன்னி சவ்வு' இல்லாமலே இருக்கும்.

அந்த விஷயத்தில் ஆண்கள் வீக்

‘அது’ல ஆண்மகன்கள் பெரும்பாலோர் சரியில்லையாம். சீனப் பெண்களிடம் எடுத்த சர்வேயில் இந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. திருப்தி இல்லாமல் தான் காலத்தை கழிக்க வேண்டியிருக்கிறது என்று புலம்புகின்றனர்.

ஆண் குறியைப் பெரிதாக்க ஏதேனும் வழியுள்ளதா?

உள்ளது. ஆனால் அறுவை சிகிச்சையால் மட்டுமே அது முடியும். நிரந்தரமாக உங்கள் குறியை பெரிதாக்குவதாக சொல்லும் மாத்திரைகள், களிம்புகள், ஆயுர்வேதம், சிறப்பு உடற்பயிற்சி, பெரிதாக்கும் கருவிகள் மற்றுமுள்ள தொழில் நுட்பங்கள் எதுவும் பயன் அளிக்கக் கூடியவை அல்ல. உங்கள் குறியை பெரிதாக்குவதில் உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகலாம். மற்ற அறுவை சிகிச்சைகளைப் போலவே, இதற்கான அறுவை சிகிச்சையும் அபாயகரமானது மற்றும் சிக்கலானது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். உங்கள் குறி மிக மிகச் சிறியதாக இருந்தால் மட்டுமே அநேக மருத்துவர்கள் உங்களை சிகிச்சைக்கு அனுமதிப்பார்கள்.

எய்ட்ஸ் நோயாளிகளின் ஏக்கங்களைத் தீர்ப்பது எப்படி?

எய்ட்ஸ் நோய் உடல் வியாதிக் கிருமிகளிடமிருந்து தன் காப்புத் திறனை இழந்த ஒரு நிலை. இதற்குக் காரணமான வைரஸை எச்.ஐ.வி. என்று அழைக்கிறோம். மனித உடலில் லிம்போசைட் என்ற செல் மிக முக்கியமான பணியை ஆற்றுகிறது. அது உடலில் காப்புத் திறனை ஏற்படுத்துகிறது. இதில் டிலிம்போசைட் என்னும் வகை தன்னை எதிர்க்க வரும் கிருமியைக் கொல்லும் கிருமிகொல்லியை உண்டாக்கி கிருமியை அழிக்கிறது. டி4 லிம்போசைட் என்பது. நோய்க்கிருமி உடலில் நுழைந்தவுடன் இதன் வருகையை டிலிம்போசைட்டுக்கும் பிலிம்போசைட்க்கும் தெரிவிக்கிறது. இவை லிம்போகைனின் என்ற கிருமிகொல்லியின் மூலம் நோய்க் கிருமியை அழிக்கிறது. ஆனால் எய்ட்ஸ் நோயோ டிலிம்போ சைட்டை வேரோடு அழித்து விடுகிறது. இதனால் டி4 லிம்போசைட்டும் அழிக்கிறது

ஷாருக்கானிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்!!!

ஷாருக்கான் - இந்த பெயரை தெரியாதவர் யாராவது இருக்க முடியுமா? இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அறியப்படும் புகழ் பெற்ற நடிகர் தான் ஷாருக்கான். பாலிவுட் திரை உலகத்தை ஆட்சி செய்யும் முடிசூடா மன்னனாக அவர் திகழ்வது அனைவரும் அறிந்ததே. 1965 ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி பிறந்த அவர் இன்று ஒரு புகழ் பெற்ற நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

"எப்போதும் அலட்சியப்படுத்தக் கூடாத உடல் வலிகள்!!!"

நாம் அன்றாடம் வாழும் வாழ்வில் நமக்கு ஏற்படும் உடல் நலக்குறைவில் சிறிது கவனம் செலுத்தவேண்டும். குறிப்பாக, நமது உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அல்லது வலிகள் போன்றவற்றை கண்காணித்துவரவேண்டும். இவற்றை அலட்சியம் செய்துவந்தால் அது நம்மை தீராத நோய்க்கு வழிவகுத்து விடும்.

30 ஆண்டுகள் அடிமைகளாக வாழ்ந்த 3 பெண்கள் மீட்பு-2 பேர் கைது

லண்டன்: லண்டனில் வீட்டு வேலைக்காகச் சென்ற இடத்தில் அடிமைகளாக நடத்தப் பட்ட 3 பெண்களை போலீஸ் உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் மீட்டுள்ளனர். அப்பெண்களை அடிமைகளாக நடத்திய குற்றத்திற்காக சுமார் 67 வயது மதிக்கத்தக்க ஆண் மற்றும் பெண் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல