எலுமிச்சை இலையை நரம்பு நீக்கி உளுத்தம் பருப்புடன் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட பித்தம், தாகம், வாய்கசப்பு நீங்கும். பரு வருவது குறையும். மலச்சிக்கல் நீங்கி பசியெடுக்கும்.
பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தை கஞ்சி அல்லது களி செய்து சாப்பிட தருவது நல்லது. அப்படிக் கொடுத்தால் அவர்களது இடுப்பு எலும்பு வலிமை பெறும். உடல் பலம் உண்டாகும். இதனை இரவிலும், வயதானவர்களும் தவிர்ப்பது நல்லது. அதிக அளவில் உட்கொண்டால் வயிற்றுக் கடுப்பை உண்டாக்கி பசியைக் கெடுக்கும். மேலும், மலச்சிக்கல் அல்லது கழிச்சல் உண்டாகும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக