வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

பயறு இட்லி உப்புமா

தேவையானவை:
பச்சபயறு 1 கப்
புழுங்கலரிசி 1/4 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
பச்சைமிளகாய் 3


பச்சபட்டாணி 1/4 கப் (உரித்தது)
உருளைக்கிழங்கு 1
வெங்காயம் 1
காரட் 2
இஞ்சி 1 துண்டு
பூண்டு 4 பல்


தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு


செய்முறை:
முதலில் செய்து கொள்ளவேண்டியது:

1.பச்சப்பயறு,புழுங்கலரிசி,உளுத்தம்பருப்பு மூன்றையும் மூன்றுமணினேரம் ஊறவைத்து ஒரு பச்சமிளகாய் சிறிது உப்பு
சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவை இட்லிதட்டில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
ஆறினவுடன் சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணவும்.
2.உருளைக்கிழங்கை தோலை நீக்கிவிட்டு grater ல் துருவிக்கொள்ளவும்.
3.வெங்காயம், காரட் இரண்டையும் துருவிக்கொள்ளவும்,
4.மீதமுள்ள இரண்டு பச்சமிளகாய்,இஞ்சி,பூண்டு மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து பயறு இட்லி துண்டுகளை வதக்கவும்.
பொன்னிறமாக வந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணைய் விட்டு துருவிய வெங்காயம்,பச்சைமிளகாய்,இஞ்சி,பூண்டு எல்லாவற்றையும்
நன்கு வதக்கவேண்டும்.வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் பச்சபட்டாணி,துருவிய உருளைக்கிழங்கு,காரட்
மூன்றுடன் சிறிது உப்பும் சேர்த்து வதக்கவும்.
எல்லாம் நன்றாக வதங்கியவுடன் ரெடியாக வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல