உயர் ரத்த அழுத்தத்தினால் தலைவலி, தலை சுற்றல், நெஞ்சு வலி ஆகிய அறிகுறிகள் தென்படும். பெரும்பாலானோருக்கு இந்த அறிகுறிகள் இல்லாததால் உயர் ரத்த அழுத்தம் இருப்பதை உணராமல் உள்ளனர்.
புகை பிடிப்பவர்கள், உடல் பருமன், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள், உணவில் அதிகளவு உப்பை பயன்படுத்துபவர்கள், வயோதிகர்கள் ஆகியோருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. எனவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கட்டுப்பாடு இல்லாத ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறக்கவும் நேரிடும். மாரடைப்பு இதய பாதிப்பு ஏற்படும். இதனால் சிறுநீரகமும் பாதிக்கிறது. ரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கு மருத்துவப் பரிசோதனை செய்து, மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக