புதன், 7 ஏப்ரல், 2010

ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு

கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம்,​​ மூளையில் ரத்தக் கசிவு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

உயர் ரத்த அழுத்தத்தினால் தலைவலி,​​ தலை சுற்றல்,​​ நெஞ்சு வலி ஆகிய அறிகுறிகள் தென்படும்.​ பெரும்பாலானோருக்கு இந்த அறிகுறிகள் இல்லாததால் உயர் ரத்த அழுத்தம் இருப்பதை உணராமல் உள்ளனர்.

புகை பிடிப்பவர்கள்,​​ உடல் பருமன்,​​ சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள்,​​ உணவில் அதிகளவு உப்பை பயன்படுத்துபவர்கள்,​​ வயோதிகர்கள் ஆகியோருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.​ எனவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கட்டுப்பாடு இல்லாத ரத்த அழுத்தத்தால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.​ மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறக்கவும் நேரிடும்.​ மாரடைப்பு இதய பாதிப்பு ஏற்படும்.​ இதனால் சிறுநீரகமும் பாதிக்கிறது.​ ரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கு மருத்துவப் பரிசோதனை செய்து,​​ மாத்திரைகளைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல