சனி, 22 மே, 2010

இத்தாலியில் மடோனா சிலையை உடைத்ததாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு

இத்தாலியில் மதுபோதையில் இருந்த இலங்கையர் ஒருவர், மடோனோ மற்றும் குழந்தையின் சிலையை உடைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக 20 ஆயிரம் யூரோ (25,140 டொலர்) நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

51 வயதான இந்த இலங்கையர், முதலில் மெழுகுவர்த்தி தாங்கியை உடைத்ததாகவும் பின்னர் சிலையை உடைத்தததாகவும் மிலானில் உள்ள சான்திஸ்மா ரினிட்டா (Santisssima Trinita) தேவாலய குரு ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்படி குற்றச்சாட்டினைப் புரிந்த குறித்த இலங்கையர் இத்தாலியில் தங்கியிருப்பதற்கான ஆவணங்களை கொண்டிருக்கவி;ல்லை என இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல