1952ல் அரங்கேற்றம் செய்யப்பட்ட யார் மகன்? என்ற நாடகம்தான் முதல் நாடகம். கவிஞர் கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை என்ற படத்தில்தான் நகைச்சுவை நாயகியாக மனோரமா அறிமுகமானார்.
இந்தப் படம் வெளியான ஆண்டு 1958 (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி , சிங்களம் என இவர் நடித்த மொழிகளின் பட்டியல் இன்னும் நீளம். முதல்வர் கருணாநிதி எழுதிய உதயசூரியன் நாடகத்தில் கருணாநிதி நாயகனாக நடிக்க, நாயகியாக நடித்தவர் மனோரமா.
5,000க்கும் மேற்பட்ட நாடகங்கள் 1300 க்கும் மேற்பட்ட படங்கள் என நடித்த ஒரே ஆசிய கண்டத்து நடிகை மனோரமாதான். இந்த சாதனைக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளார்.
நடிகர் எஸ். எஸ். ஆர். நாடக மன்றத்தைச் சேர்ந்தவர்கள்தான் மனோரமாவை மணிமகுடம் நாடகத்துக்காக சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இந்த நாடகத்தை எழுதியவர் முதல்வர் கருணாநிதி. வேலைக்காரி, சிவாஜிகண்ட இந்து சாம்ராஜ்யம், ஓர் இரவு என அண்ணாவின் முக்கிய நாடகங்களில் நடித்தவரும் இவரே.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக