வெள்ளி, 28 மே, 2010

புத்திசாலி டால்பின்கள்

மீனினங்களில் டால்பின்கள் மிகவும் புத்திசாலியானவை. இவை மனிதர் களின் உயிர்களைக் கூட காப்பாற்றி யுள்ளன. டால்பின்கள் தூங்கும் போது ஒரு கண்ணை திறந்து வைத்துத்தான் தூங்கும். அப்பொழுது வலது கண் திறந்து இருந்தால் இடதுபக்க மூளை வேலை செய்யும்.

இடதுகண் திறந்து இருந்தால் வலது பக்க மூளை வேலை செய்யும். தூங்கும் போது மிக மெது வாகவே நீந்தும் டால்பின் களில் சுமார் 40 வகை யான இனங்கள் உள்ளன. இதில் பெரும்பான்மை யான டால்பின்கள் சுமார் 30 நிமிட ங்கள் வரை தண்ணீருக்கடியில் மூச்சை அடக்கிக்கொள்ளும் திறனுடையவை.

சுமார் 12 – 18 மாதங்கள் வரை குட்டிகளுக்கு பால் ஊட்டும். உங்களு க்கு தெரியுமா, தண்ணீரின் அடியில் டால்பின் குட்டிகள் நீர்க்குமிழி உண் டாக்கி விளையாடும் என்பது.

தண்ணீரின் மேலே சுமார் 20 அடிகள் வரை துள்ளி குதிக்கும் திறனுடையது.

பிரேசில் நாட்டில் உள்ள சின்ன மீன்பிடி நகரமான லகுனாவில் உள்ள மீனவர்கள் டால் பின்களை பிடிப் பதற்கு சிறிய மீன்களை வலை யில் கட்டி விடு வார்கள். இதனை உண்ண வரும் டால்பின்கள் வலையில் மாட்டிவிடும்.

சில வருடங் கள் கழித்து டால்பின்கள் இந்த தந்திரத்தை கண்டு பிடித்தபின் இவை வலை இருக்கும் பக்கமே தலைவைத்து படுப்பதில்லை. சில நேரங்களில் ஏதாவது ஒரு டால்பின் இது போன்று பொய் மீன்களை கண் டால் உடனடியாக எல்லா டால்பின் களுக்கும் தகவல் சொல்லிவிடும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல