வெள்ளி, 4 ஜூன், 2010

சம்பள உயர்வு கேட்கிறார்

இங்கிலாந்து ராணி எலிசபெத் துக்கு அரசாங்கம் அலவன்சாக ஒரு தொகையை வழங்கி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த தொகை உயர்த்தப்படவில்லை. ஜோன் மேஜர் பிரதமராக இருந்த போது அவரது அலவன்சாக ரூ. 147 கோடி என்று உறுதி செய்யப் பட்டது.

டோனி பிளேயர் பிரதமராக இருந்தபோது 2000ம் ஆண்டு இந்த தொகை நியாயமானது என்று கூறி அந்த தொகையே தொடரும் என்று தீர்மானிக்கப்பட்டது.

ராணி எலிசபெத் ஆண்டு தோறும் 50 ஆயிரம் விருந்தினர்களை வர வேற்று உபசரிக்கிறார்.

இதனால் அவரது செலவினங்கள் அதிகரித்து உள்ளது. எனவே அவர் தனக்கு ஆண்டு தோறும் தரும் அலவன்ஸ் தொகையில் 55 கோடி ரூபாய் உயர்த்தி தரவேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

பிரதமர் டேவிட் கமரூன் சிக்கன நடவடிக்கையாக மந்திரிகளின் செல வினங்களை குறைத்து வரும் நிலையில் ராணி சம்பள உயர்வு கேட்டு இருப்பதை அவர் விரும்ப வில்லை. இதனால் அவர் ராணி யுடன் மோத வேண்டிய நிலை ஏற் பட்டு உள்ளது.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல