வியாழன், 24 ஜூன், 2010

இணையதளத்தில் பாஸ்போர்ட்... ஐஸ்வர்யா அதிர்ச்சி!

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயின் பாஸ்போர்ட்டை சிலர் ஸ்கேன் செய்து இணையதளத்தில் பரவவிட்டுள்ளனர். இதில் அவரது பிறந்த நாள், எந்தெந்த நாடுகளுக்குப் போனார் உள்ளிட்ட சில விவரங்கள் வெளியாகியுள்ளனர்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

தனது பாஸ்போர்ட்டை வெளியாட்களிடம் எப்போதும் கொடுக்கமாட்டாராம் ஐஸ்வர்யா. ஆனால் இப்போது எப்படி வெளியானது என்று புரியாமல் குழம்பியுள்ளார். பாஸ்போர்ட்டில் தனது பெயரை ஐஸ்வர்யா என்று குறிப்பிட்டுள்ளார். பிறந்த தேதி 1.11.1973 என்று உள்ளது. இதன் மூலம் ஐஸ்வர்யா ராய்க்கு 37 வயது என்பது உறுதியாகியுள்ளது.

திருமணத்துக்கு முன்பே இந்த பாஸ்போர்ட்டை எடுத்துள்ளார். இதை இண்டர்நெட்டில் வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது. போலீசுக்கும் இந்த பிரச்சினை ஒரு புகாராகத் தந்துள்ளனர்.

இந்த விஷயத்தில் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மீதுதான் ஐஸ்வர்யா ராய்க்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாம். வெளிநாட்டு படப்பிடிப்பு களுக்கு செல்லும்போது விசா பெறும் நடைமுறக்காக பாஸ்போர்ட்டை படப்பிடிப்பு குழுவினர் வாங்கிச் செல்வது உண்டு. அப்போது யாரோ இதனை ஸ்கேன் செய்து இண்டர்நெட்டில் வெளியிட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு இது போன்று முக்கிய பிரமுகரின் பாஸ்போர்ட் இண்டர்நெட்டில் வெளியான சம்பவங்கள் நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

News story:Thatstamil

Image: from the net
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல