புதன், 4 ஆகஸ்ட், 2010

கழிவறையை விட அழுக்கானது கையடக்கத் தொலைபேசி

இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. ஆனால் செல்போனை ‘நடமாடும் நோய்க்கூடம்’ என்று விஞ்ஞானிகள் வர்ணித்து உள்ளனர்.

செல்போனில் உள்ள அசுத்தங்கள் தொடர்பாக இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் குழு ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் கழிவறை கோப்பையில் உள்ள கிருமிகளை விட செல்போனில் அதிக அளவு கிருமிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

கழிவறை கோப்பையை விட 18 மடங்கு அதிகமாக செல்போனில் கிருமிகள் இருந்தன. ஒரு பொருளில் குறிப்பிட்ட அளவு வரை பேக்டீரியாக்கள் இருந்தால் அது ஆபத்து இல்லாததாக கருதப்படுகிறது.

ஆனால் செல்போனில் குறிப்பிட்ட அளவை விட 10 மடங்கு அதிகமாக பேக்டீரியா காணப்படுகிறதாம். மிகவும் அசுத்தமாக உள்ள செல்போனில் 39 மடங்கு அதிக பேக்டீரியாக்கள் உள்ளன. அசுத்தமான செல்போன்களை பயன்படுத்தும்போது அதன் மூலம் கிருமிகள் நமது உடலில் புகுந்து வயிற்று உபாதை, மூச்சு கோளாறு போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல