சாதரணமாக ஜலதோஷமும் அதனால் உண்டான தலைவலியும் என நினைத்த சிறுமி அதுபற்றி பெரிதுபடுத்தாமல் இருந்துள்ளார். சில மணி நேரங்களுக்குப் பின்னர் மாணவியின் கை கால்களை அசைக்க முடியாமல் போனதுடன் அவருக்கு காக்கைவலிப்பு போன்ற வலிப்பும் ஏற்பட்ட சில நிமிடங்களில் நினைவிழந்து மயங்கி விட்ட அவரை உடனடியாக அவசர ஊர்தி மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முதலில் மெய்ட்ஸ்டோன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பின்னர் லண்டனில் இருக்கும் கிங்க்ஸ் கல்லூரி மருத்துவமனையின் நரம்பியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எந்த முயற்சியும் பலனளிக்காமல் மாணவி இரண்டு நாட்களின் பின்னர் இறந்து விட்டார்.
இவரின் இறப்பு ஜலதோஷம் பரவக் காரணமாக இருந்த வைரஸ் மூளை வரை பரவியதால் தான் நிகழந்துள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக