சனி, 2 அக்டோபர், 2010

தேநீரால் தரையிறங்கிய விமானம்

இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான விமானம் ‘ரையனெய்ர்’, இந்த விமானம் இங்கிலாந்தின் லிவர்பூல் - போஸ்னான் இடையே இயக்கப்பட்டு வருகிறது. அன்றும் வழக்கம்போல் விமானம் கிளம்பிச் சென்றது.

திடீரென்று போலந்து நாட்டில் விமானம் தரையிறக்கப்பட்டது. காரணம் தெரியாத பயணிகள், ‘என்னவோ ஏதோவென’ கதிகலங்கிப் போனார்கள். ஆனால் விமானச் சிப்பந்திகளோ, ஏதோ சிறப்பு பயணி போல 56 வயதான ஒரு பெண்ணை இறக்கிவிட்டு விட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

‘அந்தப் பெண்மணி சூடான தேநீரைத் தன்மேல் சிந்தி காயப்பட்டுக் கொண்டார். அதனால் அவசரம் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. அவர் சிகிச்சைக்குப் பிறகு புகைவண்டியில் பயணம் செய்தார்’ என்று பொலிசார் விளக்கம் அளித்தனர்.

இதற்கெல்லாமா விமானத்தை நிறுத்து வார்கள்? என்று விமானப் பயணிகள் புல ம்பிக் கொண்டனர்.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல