ஞாயிறு, 24 அக்டோபர், 2010

என் கற்பை பலமுறை சூறையாடிய பாதிரியார் முகமூடியை கிழிக்காமல் விட மாட்டேன்: கன்னியாஸ்திரி சபதம்

திருச்சி இந்தியன் பாங்க்காலனியில் உள்ள புனித அன்னாள் சபையில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பிளாரன்ஸ்மேரி. 31 வயது நிரம்பியவர். உயரம் குள்ளம், சாந்தமான முகம், நல்ல குரல்வளம் உடையவர்.

இவரது சொந்த ஊர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சவூரான்சாவடி. விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
கன்னியாஸ்திரி ஆகவேண்டும் என்றே அவருக்கு சிறுவயதிலேயே விருப்பம் ஏற்பட்டது. தனது ஆசையை பெற்றோருக்கும், தோழிகளிடத்திலும் அவர் அடிக்கடி சொல்வது உண்டு. பிளஸ் 2 முடித்ததும் அவரது விருப்பத்தை பெற்றோர் நிறைவேற்றினர்.

இதைத்தொடர்ந்து திருச்சியில் புனித அன்னாள் சபையில் சேர்ந்தார். அங்கு 2005-ம் ஆண்டு கன்னியாஸ்திரி சபையில் சேர்ந்தபோது ஆசிரியை பயிற்சி படிப்பிலும் சேர்ந்தார். படிப்பு முடிந்ததும் கடந்த 2002-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள முன்னீர்பள்ளத்தில் ஆசிரியையாக பணி புரிந்தார்.

அப்போது பாளையங்கோட்டை கல்லூரி ஒன்றில் பாதிரியார் ராஜரத்தினம் பணிபுரிந்தார். இசை ஆர்வம் உடையவர். இருவருக்கும் இசை மீது பற்று அதிகம் இருந்ததால் பழக்கம் உருவானது. 2005-ம் ஆண்டு பிளாரன்ஸ்மேரி கன்னியாஸ்திரி ஆனார்.

இதைத்தொடர்ந்து திருச்சிக்கு மாற்றப்பட்டார். இங்கு வந்தவுடன் “மியூசிக்” கல்லூரியில் சேர்ந்து படித்தார். இதற்காக தினமும் கான்வென்டில் இருந்து செல்வது வழக்கம்.

இந்தநிலையில் பாதிரியார் ராஜரத்தினம் பதவி உயர்வு பெற்று திருச்சி ஜோசப் கல்லூரிக்கு முதல்வர் ஆனார். நெல்லையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் திருச்சியில் நீடித்தது. இசை ஆர்வமாக இருவரும் அடிக்கடி சந்தித்து இசை ஆல்பம் தயாரிப்பது குறித்து விவாதித்தனர்.

பாதிரியார் ராஜரத்தினம் தனது செல்வாக்கை பயன்படுத்தி பிளாரன்சுமேரி பாட “ரதியின் கீதம்” என்ற ஆல்பம் தயாரித்தார். அந்த ஆல்பம் கிறிஸ்தவ மக்களிடையே பிரபலமாக தொடங்கியது. இதனால் இருவரது சந்திப்பும் தினமும் நடக்க தொடங்கியது. அவரை சந்திக்க ஜோசப்கல்லூரிக்கு பிளாரன்சுமேரி செல்வது உண்டு. அவரும் தினமும் விரும்பி அழைப்பது உண்டு.

இந்தநிலையில்தான் 2006-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந்தேதி பிளாரன்சுமேரி கற்பு பறிபோனதாக கூறப்படும் நாள். வழக்கமாக இருவரும் சந்திக்கும் அதே கல்லூரி அறையில் தான் கற்பு பறிபோனதாக பிளாரன்சு மேரி கூறியுள்ளார்.

பாதிரியார் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததும் அவருக்கு தலைகனக்க தொடங்கியது. மயங்கி விழுந்தார். சிலமணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்தது. நடக்க கூடாதது நடந்து விட்டதாக அறிந்தார். இதுபோன்ற சம்பவம் மீண்டும் மீண்டும் நடந்ததாக பிளாரன்சுமேரி கூறியுள்ளார். சிலநாள் கழித்து அவரது உடலில் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார். வயிறு சற்று பெரிதாக இருப்பதை அறிந்தார். உடனே நம்பதகுந்த பெண் டாக்டர் ஒருவர் உதவியை நாடினார். கர்ப்பம் அடைந்து இருப்பதாக டாக்டர் தெரிவித்தார்.

கன்னியாஸ்திரி கர்ப்பமா? பிளாரன்சுமேரிக்கு உலகமே இருண்டு போனது போல் இருந்தது. வேகமாக சென்று பாதிரியாரை சந்தித்தார். அவர் கூறிய யோசனைப்படி திருச்சியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் கற்பு இழந்த அதே ஆண்டில் ஏப்ரல் மாதம் கருக்கலைக்கப்பட்டது. இந்த விஷயத்தை வெளியே கசிய விடாமல் இருவரும் பார்த்துக்கொண்டனர். பின்னர் பாதிரியார் அடிக்கடி அழைத்ததாகவும் ஆனால் அவரது ஆசைக்கு இணங்க மறுத்து விட்டதாகவும் பிளாரன்சுமேரி கூறியுள்ளார்.

இதற்கிடையே 4 ஆண்டுகளாக மூடிமறைத்து வந்த கருக்கலைப்பு விவகாரம் கசிய தொடங்கியது. புனித அன்னாள் சபை நிர்வாகிகள் விசாரணையில் ஈடுபட்டனர். பிளாரன்சுமேரியிடம் விளக்க கடிதம் கேட்டனர். கடந்த ஆகஸ்டு 25-ந்தேதி கடிதம் கொடுத்தார். அன்றே சபையில் இருந்து நீக்கப்பட்டார்.

கன்னியாஸ்திரி ஆடை அணியாமல் சொந்த ஊர் செல்ல அவருக்கு தயக்கம். நியாயம் கிடைப்பதற்காக ஜோசப்கல்லூரி கல்லூரி அதிபர் சூசையிடம் ஓடிச்சென்றார். நடந்த சம்பவத்தை தெரிவித்தார். பாதிரியார் ராஜரத்தினம் ஏசு சபையை சேர்ந்தவர். இதன் தலைமையிடம் திண்டுக்கல்லில் உள்ளது. அங்குள்ள சபை நிர்வாகிகளுக்கு கல்லூரி அதிபர் சூசை தகவல் தெரிவித்தார். பிளாரன்சுமேரி உடனே புறப்பட்டு வரும்படி அழைப்பு விடப்பட்டது.

உறவினர்கள் 2 பேருடன் அவர் சென்றார். அங்கும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் பாதிரியார்கள் அனைவரும் சேர்ந்த மிரட்டியதாகவும் பிளாரன்சுமேரி கூறியுள்ளார்.

அதன்பிறகு தான் அவர் போலீஸ் உதவியை நாடினார். இதனால் பாதிரியார் ராஜரத்தினம் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அதன்மீது விசாரணை நடந்து வருகிறது. பிளாரன்சுமேரிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது

அவர் உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியுள்ளார். அவரிடம் கேட்டபோது கூறியதாவது:-

துறவறம் என்பது புனிதமான ஒன்று. சமூகத்துக்கு சேவை செய்யும் நோக்கில் என்னைப்போல் வரும் பெண்கள் ராஜரத்தினம் போன்ற சில பாதிரியார்கள் வலையில் எங்களை அறியாமலேயே சிக்கி விடுகிறோம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள், சத்தம் இல்லாமல் சபையை விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

நான் அப்படிபட்டவர் அல்ல. சட்டத்தின் மூலம் பாதிரியாருக்கு சரியான தண்டனை வாங்கித்தரும் வரை எனக்கு தூக்கம் கிடையாது. அவர் முகமூடியை கிழிக்காமல் விடமாட்டேன். என்னை நீக்கியது போல் அவரையும் சபையில் இருந்து நீக்கும் வரை ஓயமாட்டேன். அதுவரை எதிர்கால சிந்தனை பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
maalaimalarImage Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல