ஞாயிறு, 26 டிசம்பர், 2010

12 வருட காலமாகத் தேடப்பட்டு வந்த சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளி கைது

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரித்தானியர் ஒருவர் 12 வருடங்களின் பின் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டு பிரித்தானியாவை விட்டு வெளியேறிய டேவிட் சார்ள்ஸ் ரெய்லர் (66 வயது) என்ற மேற்படி நபர் மீது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் பாலியல் துஷ்பிரயோக படங்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

சிறுவர்களை பாலியல் ரீதியில் சித்திரவதை செய்து கொடூரமான முறையில் அவர் நடந்துகொள்வது உள்ளடங்கலான சிறுவர் துஷ்பிரயோகங்களை வெளிப்படுத்தும் 10,000 க்கும் மேற் பட்ட புகைப்படங்களும் வீடியோ படங்களும் அவரது கணனியில் இருப்பது பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் நக்ஹொன் ரட்ஸஸிமா மாகாணத்திலுள்ள தபால்

நிலையமொன்றில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
டேவிட் சார்ள்ஸ் ரெய்லர் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்து அதனை புகைப்படமாகவும் வீடியோப் படமாகவும் எடுத்து உலகமெங்கும் விற்று வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல