வெள்ளி, 31 டிசம்பர், 2010

வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் தபாலக ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
இன்றிரவு 9 மணியளவில் குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர்.

அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இவரது மனைவி ஆயுததாரிகளை கட்டிப்பிடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆயுததாரிகள் அவரை இழுத்து வெளியில் எறிந்து விட்டு மீளவும் உள்ளே போய் சரமாரியாக சுட்டிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர் பருத்தித்துறை தபாலக ஊழியரான தவராசா கேதீஸ்வரன் (வயது 27) என்பவரேயாவார்.

தற்போது இவரது நிலமை கவலைக்கிடமாகவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல