புதன், 29 டிசம்பர், 2010

அமெரிக்கா கலிபோர்னியாவில் இலங்கைத் தமிழ் பொறியியலாளர் சுட்டுக்கொலை!

இலங்கை வவுனியாவைச் சோ்ந்த தமிழ் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்கா கலிபோர்னியா மாநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளதாக வவுனியாவில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கொலையுண்டவர் 25 வயதையுடைய அமரசிங்கம் சுஜன் என தெரியவந்துள்ளது. இவர் கடந்த வருடம் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா சென்றிருந்தூர்.

இவர் பணியாற்றும் வேலைத்தளத்தில் இரவுக் கடமையாற்றிய வேளையில் அங்கு வந்துள்ள கொள்ளையர்களினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக இவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த பொறியியலாளரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தூதரகங்களினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல