திங்கள், 21 பிப்ரவரி, 2011
உங்களால் தான் நாங்கள் தெருவில் அலைகின்றோம்"- களவுக்காகச் சென்ற கள்வனுக்கு நேர்ந்த கதி
உரும்பிராய் கோகுல வீதியில் உள்ள பூட்டிய வீடு ஒன்றில் திருடுவதற்காக மதில் ஏறிப் பாய்ந்த வேளை அவ் வழியால் ரோந்து சென்ற படையினரில் ஒருவர் இதனை அவதானித்துள்ளார். உடனடியாக வீடு சுற்றிவளைக்கப்பட்டது. ஓடுவதற்கு இடமில்லாத திருடன் படையினரிடம் சரணடைந்தார்.பின்னர் படையினர் தங்களது அனைத்து கோபதாபங்களையும் சேர்த்து நையப்புடைத்துள்ளனர். "உங்களைப் போன்றவங்களின் வேலையினால் தான் நாங்கள் இப்போதும் வீதியில் அலைய வேண்டி இருக்கின்றது" என்று சிங்களத்தில் சொல்லிச் சொல்லி படையினர் திருடனைத் தாக்கியதாக அங்கு நின்ற மக்கள் தெரிவித்தனர். பின்னர் கடுங்காயங்களுக்கு உள்ளான திருடனை படையினர் அவனது முழுவிபரங்களையும் பதிவு செய்துவிட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர். தான் கொண்டுவந்த சைக்கிளையும் காயங்களுடன் ஓட முடியாது உருட்டிச் சென்றுள்ளான் திருடன்,
Labels:
யாழ் செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக