செவ்வாய், 20 நவம்பர், 2012

‘சுந்தர்.சி. என்னை மோசம் செய்துவிட்டார்’- சரத் மகள் வரலட்சுமி பகீர் புகார்!

தீபாவளிக்கு ரிலீஸான சிம்புவின் ‘போடா போடி’ யில் தனது சொந்தக்குரலில் டப்பிங் பேசி ரசிகர்களின் காதில் தேனை வார்த்தார் சரத்தின் வாரிசு வரலட்சுமி.

படத்தை விட, வரலட்சுமியின் கவர்ச்சியை விட பரபரப்பாக பேசப்பட்ட அவரது கரகர குரல் நம் படத்திலும் இடம் பெற்றால் நாடு தாங்காது என்று முடிவு செய்த சுந்தர்.சி, கரகர லட்சுமிக்கு புரோக்ராமே சொல்லாமல் அவரது குரலுக்கு வேறொரு டப்பிங் ஆர்டிஸ்டை அழைத்துப் பேச வைத்துவிட்டாராம்.

பட ரீலீஸ் தேதி நெருங்குகிறது, ஆனால் நம்மை டப்பிங் பேச அழைக்கவில்லையே என்ற சந்தேகத்தில் தனது தோழர் விஷாலைத் தொடர்புகொண்டபோது அவர், நடந்த உண்மையைப் போட்டு உடைத்துவிட சுந்தர்.சி மீது கொலைவெறிக்கு ஆளாகி அந்தல் சிந்தல் வார்த்தைகளால் அவரை அர்ச்சிக்க ஆரம்பித்துவிட்டாராம்.

அப்பிடியே ஒரு எட்டு நடிகர் சங்கம் பக்கமா போயி அப்பா கிட்ட புகார் குரல் குடுக்கலாமே வரு’த்தலட்சுமி?
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல