திங்கள், 17 டிசம்பர், 2012

மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்தார்

சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவைப் பற்றி ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டு கைதான ஷாஹீன் தற்போது மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்துள்ளார்.

சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவைப் பற்றி ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்டு கைதானவர் பால்கரைச் சேர்ந்த ஷாஹீன்(21). இந்த சம்பவத்திற்கு பிறகு ஃபேஸ்புக்கில் இருந்து வெளியேறிய அவர் தனது செல்போன் நம்பரைக் கூட டிஆக்டிவேட் செய்துவிட்டார். ஒரு மாத காலமாக வீட்டுக்குள்ளேயே அடைபட்டுள்ளார்.

இந்நிலையில் ஷாஹீன் கடந்த சனிக்கிழமை மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்துள்ளார். அன்று காலை 8 மணிக்கு தனது முகம் தெளிவாகத் தெரியும் புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார். மேலும் தனது செல்போன் நம்பரையும் ஆக்டிவேட் செய்துள்ளார். இது தவிர பால்கரைச் சுற்ற தனது 2 சக்கர வாகனத்தையும் தூசி தட்டி வைத்துள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஐ ஆம் பேக். பால்கரின் தெருக்களில் சுற்ற ஆசையாக உள்ளது. பயமின்றி வெளியே செல்ல விரும்புகிறேன் என்றார்.

அவர் மீண்டும் ஃபேஸ்புக்கிற்கு வந்ததை பலரும் வரவேற்றுள்ளனர். மேலும் ஷாஹீனும், அவர் போட்ட கமெண்ட்டிற்கு லைக் கொடுத்து கைதான ரேணுவும் வரும் 21, 22 ஆகிய தேதிகள் அகமதாபாத்தில் உள்ள ஐஐடி மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல