வியாழன், 21 பிப்ரவரி, 2013

மே 19 மதியம் 12மணிக்கு முன்னர் பாலச்சந்திரன் கொல்லப்பட்டார்!!!!!

பிரபாகரனின் மகன், பாலச்சந்திரன் 2009 மே 19ஆம் திகதி நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த தகவலை சிறிலங்காவின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (SDS) தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தின் காவல் அரண் ஒன்றில் பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது மற்றும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய நான்கு ஒளிப்படங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இது தெரியவந்துள்ளது

இந்த ஒளிப்படங்களின் சுயதரவுகளின் படி 2009 மே 19ஆம் திகதி காலை 10.14 மணிக்கு முதல் படம் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பாலச்சந்திரன் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். பின்னர் மதியம் 12.01 மணிக்கு அடுத்த படம் எடுக்கப்பட்டுள்ளது (இறந்து கிடக்கும் படம்).

இவை ஒரே ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது . எனவே, பாலச்சந்திரன் மே 19ஆம் திகதி நண்பகலுக்கு சற்று முன்னதாகவே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. இது கேள்விக் கிடமின்றி நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை என்று, தாம் உறுதிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல