“இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு இழந்த உயிர்களைத் தவிர ஏனைய அனைத்தையும் வழங்க அரசு தயார்” என அந்நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். “உங்களுக்கு இந்த நாட்டில் அனைத்து உரிமைகளும் உள்ளன” என்றும் தெரிவித்துள்ளார் அவர்.
இலங்கை, கிழக்கு மாகாணம் அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராஜபக்ஷே, “இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த பிறந்த மண்ணின் உரிமை இருக்கின்றது.
உங்களுக்கு வேறு நாடு இல்லை, உங்களது தாய்நாடு இதுதான். இந்த நாட்டை கட்டியெழுப்பி உங்களது உரிமைகளை வழங்குவதே எமது நோக்கம். உங்களில் எவரையும் இந்த தாய்நாட்டில் தங்கியிருப்பவர்களாக்க (Boarders) நாம் நினைக்கவில்லை. நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள்.
யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர்ந்த ஏனையவற்றை உங்களுக்கு மீள வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பு

இலங்கை, கிழக்கு மாகாணம் அம்பாறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட ஜனாதிபதி ராஜபக்ஷே, “இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த பிறந்த மண்ணின் உரிமை இருக்கின்றது.
உங்களுக்கு வேறு நாடு இல்லை, உங்களது தாய்நாடு இதுதான். இந்த நாட்டை கட்டியெழுப்பி உங்களது உரிமைகளை வழங்குவதே எமது நோக்கம். உங்களில் எவரையும் இந்த தாய்நாட்டில் தங்கியிருப்பவர்களாக்க (Boarders) நாம் நினைக்கவில்லை. நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள்.
யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களைத் தவிர்ந்த ஏனையவற்றை உங்களுக்கு மீள வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
விறுவிறுப்பு


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக