செவ்வாய், 26 மார்ச், 2013

பழம்பெரும் நடிகை சுகுமாரி காலமானார்..திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

பழம்பெரும் திரைப்பட நடிகையான சுகுமாரி உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 74.

சென்னை தியாகராயநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த சுகுமாரி, சில நாட்களுக்கு முன்னர் விளக்கு ஏற்றும்போது, அவரது புடவையில் தீ பிடித்து, உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர், பெரும்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனை ஒன்றில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சுகுமாரியின் நெருங்கிய நட்பு கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 3 தினங்களுக்கு முன்னர் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை பார்த்துப் பேசினார். அவரது உறவினர்களிடம் நலம் விசாரித்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சுகுமாரி இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ், மலையாளத் திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாசமலர், பட்டிகாடா பட்டணமா, வசந்த மாளிகை உள்ளிட்ட திரப்படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், ,இந்தி மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 74 வயதான சுகுமாரி 1938ம் வருடம் நாகர்கோவிலில் பிறந்தவர் ஆவார். நம்மகிராமம் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருது பெற்றார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல