சனி, 28 செப்டம்பர், 2013

லண்டனிலிருந்து சென்ற சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழு சிறிரெலோ உறுப்பினர் மர்ம மரணம்

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பிரசாரம் செய்வதற்காக லண்டனிலிருந்து முல்லைத்தீவுக்கு சென்றிருந்த சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவான சிறிரெலோ உறுப்பினரான மு.நிர்மலன் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

சிறிரெலோ இயக்கம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி வருகிறது. வடமாகாணசபை தேர்தலில் சிறிரெலோ ஒட்டுக்குழு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிரெலோ ஒட்டுக்குழுவின் தலைவர் உதயராசா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டார்.

அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக முல்லைத்தீவு வற்றாப்பளையைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவருமான மு.நிர்மலன் (வயது-50) என்பவர் முல்லைத்தீவுக்கு சென்றிருந்தார். பிரான்ஸில் குடியுரிமை பெற்ற இந்நபர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.

முல்லைத்தீவிற்கு வந்த நிர்மலன் என்பவர் இராணுவ ஒட்டுக்குழுவான உதயராசாவுக்காக தீவிர பிரசாரம் செய்தார். ஆனால் உதயராசா நூறு வாக்கு கூட பெறவில்லை.

தேர்தல் முடிந்த பின் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வேளை நிர்மலன் என்பவர் நெடுங்கேணியில் வீதியில் காயங்களுடன் கிடந்தார். காயங்களுடன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் இராணுவத்தினர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

இராணுவ ஒட்டுக்குழுவுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக முல்லைத்தீவு மக்கள் இவருக்கு வெகுமதி வழங்கியிருக்கலாம் என்றும் பேச்சடிபடுகிறது. வெளிநாடுகளிலிருந்து சென்று வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்திற்காக பிரசாரம் செய்பவர்களுக்கு இது நல்ல படிப்பினை என்றும் கூறப்படுகிறது.

தினக்கதிர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல