செவ்வாய், 15 அக்டோபர், 2013

பாலம் திடீரென உயர்த்தப்பட்டதால் 22 அடி உயரத்தில் தொங்கிய பெண்

புற்றுநோய்க்­கான தொண்டு ஸ்தாப­ன­மொன்­றுக்கு நிதி சேக­ரிக்கும் முக­மாக புகை­யி­ரத பால­மொன்றில் நடந்த பெண்­ணொ­ருவர், அந்­தப் ­பாலம் எதிர்­பா­ராத வகையில் உயர்த்­தப்­பட்­டதால் தரை­யி­லி­ருந்து 22 அடி உய­ரத்தில் சிக்­கிக்­கொண்ட சம்­பவம் அமெ­ரிக்க புளோ­ரிடா மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

வன்டா மக்­கோவன் (55 வயது) என்ற மேற்­படி பெண், புகை­யி­ரதப் பாதை பாலத்­தைப் ­ப­யன்­ப­டுத்தி நியூ ஆற்றைக் கடக்க முயன்ற போதே இந்த அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ளது.

இந்­நி­லையில் வன்டா உயி­ரா­பத்து மிக்க சூழ்­நி­லையில் துரி­த­மாக செயற்­பட்டு பாலத்­தினை இறு­கப்­ பற்றி அந்­த­ரத்தில் தொங்­கிக் ­கொண்­டி­ருந்­துள்ளார்.

அவர் அபா­ய­க­ர­மான நிலையில் தொங்கிக் கொண்­டி­ருப்­பதைப் பார்த்த பிர­தே­ச­வா­சிகள் அவ­சர சேவைப் பிரி­வுக்கு அழைப்பு விடுத்­த­தை­ய­டுத்து வன்டா பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டுள்ளார்.

அவர் தற்­போது அபா­ய­க­ர­மான புகை­யி­ரதப் பாலத்தில் எதுவித முன்னறிவிப்புமின்றி கடந்தமைக்காக அத்துமீறல் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல