இடி, மின்னல் போன்ற நேரங்களில் டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், செல்போனில் பேசுவது போன்றவற்றை உடனடியாக நிறுத்தி விட வேண்டும் என்று தமிழக தலைமை மின் ஆய்வாளர் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அவ்வப்போது இடியும், மின்னலும், பலத்த காற்றுமாக உள்ளது.
இந்த நிலையில் இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை மின் ஆய்வாளர் மக்களுக்கு அறவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள அறிவுறுத்தல்கள்...
சர்க்யூட்டுகளில் அதிக பளு கூடாது
மின் சர்க்யூட்டுகளில் அளவுக்கு மீறி பளு ஏற்றக் கூடாது. சுவிட்ச் மற்றும் பியூஸ் போன்றவற்றை மாற்றும்போது சரியானஅளவு திறன் கொண்டவற்றை பொறுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
டிவியை ஆப் பண்ணுங்க..
டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசி போன்றவற்றை மழை மற்றும் மின்னல் நேரங்களில் பயன்படுத்தாதீர்கள்.
வெட்ட வெளியில் நிற்காதீர்கள்
இடி மற்றும் மின்னலின்போது, வெட்டவெளியில் இருக்காதீர்கள், தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் நிற்காதீர்கள். மேலும் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத இடங்களில் தஞ்சம் அடையுங்கள்.
சிறுநீர் கழிக்காதீர்கள்
மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்காதீர்கள்.
கட்டடம் கட்டும்போது இடைவெளி அவசியம்
மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் கட்டும்போது, போதுமான இடைவெளி விட்டு கட்டவும்.
கம்பி அறுந்து விழுந்தால் அருகே போக வேண்டாம்
மழை மற்றும் பெரும் காற்றினால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல வேண்டாம். அது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள்.
டிரான்ஸ்பார்மர் பக்கம் போகவே கூடாது
மழைக்காலங்களில் மின் மாற்றிகள் அதாவது டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம்.
மின்கம்பங்களில் பந்தல் போடாதீர்கள்
மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.
மின்கம்பிகளுக்கு மேல் கேபிள் வயர் போகக் கூடாது
டி.வி. ஆண்டெனா, கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.
சுவிட்ச் உடைந்திருந்தால் மாற்றி விடுங்கள்
உடைந்த சுவிட்ச் மற்றும் பிளக்குகளை உடனடியாக மாற்றி விடுங்கள்.
மின்கசிவைத் தடுக்க வேண்டும்
வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டுகளில், ஈ.எல்.சி.பி. என்னும் மின் கசிவு தடுக்கும் கருவியை பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்த்திடுங்கள்.
Thatstamil

வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. மழை பெய்யத் தொடங்கியுள்ளது. அவ்வப்போது இடியும், மின்னலும், பலத்த காற்றுமாக உள்ளது.
இந்த நிலையில் இடி, மின்னல் போன்றவற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தலைமை மின் ஆய்வாளர் மக்களுக்கு அறவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ள அறிவுறுத்தல்கள்...
சர்க்யூட்டுகளில் அதிக பளு கூடாது
மின் சர்க்யூட்டுகளில் அளவுக்கு மீறி பளு ஏற்றக் கூடாது. சுவிட்ச் மற்றும் பியூஸ் போன்றவற்றை மாற்றும்போது சரியானஅளவு திறன் கொண்டவற்றை பொறுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
டிவியை ஆப் பண்ணுங்க..
டி.வி., மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர் மற்றும் தொலைபேசி போன்றவற்றை மழை மற்றும் மின்னல் நேரங்களில் பயன்படுத்தாதீர்கள்.
வெட்ட வெளியில் நிற்காதீர்கள்
இடி மற்றும் மின்னலின்போது, வெட்டவெளியில் இருக்காதீர்கள், தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் நிற்காதீர்கள். மேலும் மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத இடங்களில் தஞ்சம் அடையுங்கள்.
சிறுநீர் கழிக்காதீர்கள்
மின் மாற்றிகள் மற்றும் துணை மின் நிலையத்திற்காக போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்காதீர்கள்.
கட்டடம் கட்டும்போது இடைவெளி அவசியம்
மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டிடங்கள் கட்டும்போது, போதுமான இடைவெளி விட்டு கட்டவும்.
கம்பி அறுந்து விழுந்தால் அருகே போக வேண்டாம்
மழை மற்றும் பெரும் காற்றினால் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகே செல்ல வேண்டாம். அது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவியுங்கள்.
டிரான்ஸ்பார்மர் பக்கம் போகவே கூடாது
மழைக்காலங்களில் மின் மாற்றிகள் அதாவது டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்ல வேண்டாம்.
மின்கம்பங்களில் பந்தல் போடாதீர்கள்
மின் கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக்கூடாது. அதன்மீது விளம்பர பலகைகளை கட்டக்கூடாது.
மின்கம்பிகளுக்கு மேல் கேபிள் வயர் போகக் கூடாது
டி.வி. ஆண்டெனா, கேபிள் டி.வி. வயர்களை மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லாதீர்கள்.
சுவிட்ச் உடைந்திருந்தால் மாற்றி விடுங்கள்
உடைந்த சுவிட்ச் மற்றும் பிளக்குகளை உடனடியாக மாற்றி விடுங்கள்.
மின்கசிவைத் தடுக்க வேண்டும்
வீடுகளில் உள்ள மெயின் சுவிட்ச் போர்டுகளில், ஈ.எல்.சி.பி. என்னும் மின் கசிவு தடுக்கும் கருவியை பொருத்தி மின்கசிவினால் ஏற்படும் விபத்தை தவிர்த்திடுங்கள்.
Thatstamil



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக