வியாழன், 12 டிசம்பர், 2013

பற்றரியை விழுங்கிய 13 மாத பாலகன் மரணம்

பாலர் பாட­சா­லையில் தன்னால் கண்­டெ­டுக்­கப்­பட்ட பற்­ற­ரியை விழுங்­கி­யதால் 13 மாத பாலகன் ஒருவன் உட­லினுள் குரு­தி ­பெ­ருக்­கெ­டுத்து பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்த சம்­பவம் தொடர்­பான வழக்கு பிரித்­தா­னிய நீதி­மன்­றத்தில் செவ்­வாய்க்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.



லெயி­செஸ்­ட­ரி­லுள்ள ஹமில்டன் நகரைச் சேர்ந்த வஸம் நூர்­வெலி என்ற பால­கனே சம்­ப­வ­தினம் வாயி­லி­ருந்து குரு­தியை கக்­கிய நிலையில் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து மர­ண­மா­கி­யுள்ளான்.

இந்­நி­லையில் பிரே­த­ ப­ரி­சோ­தனை அறிக்­கையில் 3 வோல்ட் பற்­ற­ரி­யொன்று பால­க­னது வயிற்றில் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது

இது தொடர்பில் வஸமின் தந்தை அம்மர் (32 வயது) விப­ரிக்­கையில், தமது வீட்டில் அத்­த­கைய பற்­றரி எதுவும் இருக்­க­வில்லை எனவும் அந்தப் பாலகன் கல்வி கற்க அனு­ம­திக்­கப்­பட்ட பாட­சா­லை­யி­லேயே அந்த பற்­றரி இருந்­தி­ருக்­கலாம் என நம்­பு­வ­தாகவும் கூறினார்.

பாலகன் பற்றரியை இறப்பதற்கு பல நாட்களுக்கு முன்பு விழுங்கியுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல