சனி, 14 டிசம்பர், 2013

கறுப்பு சூரியனின் அஸ்தமனத்தால்...

''இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்'' விடுதலையின் பின்னர் மண்டேலா கூறியது

உலகம் முழு­வ­தையும் மண்­டேலா என்ற வார்த்­தையை உச்­ச­ரிக்க வைத்­து­விட்டு உலக ஜன­நா­ய­கத்தின் தந்­தை­யான நெல்சன் மண்­டேலா தனது இறுதிப் பய­ணத்தை ஆரம்­பித்­து­விட்டார். உல­கையே சோகத்தில் ஆழ்த்­திய மனி­த­நே­ய­மிக்க இந்த மாபெரும் மனி­தனின் இறுதிக் கிரி­யைகள் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை தென்­னா­பி­ரிக்­காவில் அன்னார் பிறந்த இட­மான குலு என்ற இடத்தில் அரச மரி­யா­தை­யுடன் பாரம்­ப­ரிய முறைப்­படி நடை­பெ­ற­வுள்­ளது.
அரச தலை­வர்கள் முதல் சாதா­ரண மக்கள் முதற்­கொண்டு சிறு­வர்கள் வரை ஜன­நா­ய­கத்தின் தந்தை நெல்சன் மண்­டே­லாவின் மறைவு கார­ண­மாக ஆழ்ந்த துய­ரத்தில் உள்­ளனர். இந்­நி­லையில் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை மற்றும் புதன்­கி­ழ­மை­களில் மண்­டே­லா­வுக்கு அஞ்­சலி செலுத்தும் தேவ ஆரா­தனை ஜொஹன்­னஸ்­பேர்க்கில் உள்ள எப்.என்.பி. . மைதா­னத்தில் நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் 70 க்கும் மேற்­பட்ட உலக தலை­வர்­களும் பல்­லா­யி­ரக்­கான மக்­களும் திரண்டு மண்­டே­லா­வுக்கு அஞ்­சலி செலுத்­தினர்.

விசே­ட­மாக ஐ.நா. செயலர் பான் கீ. மூன், அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா முன்னாள் ஜனா­தி­ப­திகள் பிரிட்டன் பிர­தமர் டேவிட் கமரூன் உள்­ளிட்ட உலக நாடு­களின் தலை­வர்­களும் பிர­ப­ல­மா­ன­வர்­களும் இந்த தேவ ஆரா­த­னையில் கலந்­து­கொண்­டனர். இலங்கை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவும் இந்த அஞ்­சலி செலுத்தும் நிகழ்வில் கலந்­து­கொண்டார்.

அத­னை­ய­டுத்து தற்­போது அவரின் பூத­வு­ட­லுக்கு இறுதி அஞ்­ச­லியை உலகத் தலை­வர்கள் முதல் சாதா­ரண மக்கள் வரை செலுத்­தி­வ­ரு­கின்­றனர். முழு உல­கத்­தி­னதும் அவ­தானம் தென்­னா­பி­ரி்க்கா மீது திரும்­பி­யுள்­ளது. அந்­த­ள­வுக்கு இந்த மாபெரும் உலகம் போற்றும் தன்­ன­ல­மற்ற மனிதன் சேவை­யாற்­றி­யுள்ளார்.

தென்­னா­பி­ரிக்­காவில் நிற­வெறி அடக்கு முறைக்கு எதி­ராக அமைதி வழியில் போராடி அதில் வெற்­றியும் கண்ட ஒரு உன்­னத மனி­தரின் இழப்­பா­னது பாரி­ய­தொரு உணர்­வ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

தனது வாழ்க்­கையில் பொன்­னான 27 வரு­டங்­களை சிறை­யி­லேயே கழித்­து­விட்ட நெல்சன் மண்­டேலா சிறையில் இருந்து விடு­தலை பெற்று மீண்டும் தனது அர­சியல் வாழ்க்­கையில் மிகப்­பெ­ரிய சேவையை உல­கத்­துக்கு வழங்­கினார். அர­சியல் தலைவர் ஒருவர் மிக நீண்­ட­காலம் சிறையில் காலத்தை கழித்தார் என்றால் அவர் மண்­டே­லாதான் என்ற மேல­திக தக­வ­லையும் நாம் கவ­னத்­திற்­கொள்­ள­வேண்டும்.

தன்­ன­ல­மற்ற வகையில் மக்­களின் விடு­த­லைக்­கா­கவே தன்னை அர்ப்­ப­ணித்த அந்த உன்­னத மனிதன் உண்­மையில் போற்­றத்­தக்­க­வ­ரா­கவே வாழ்ந்து சென்­றுள்ளார். முழு உல­கை­யுமே ஒரு கணம் சோகத்தில் ஆழ்த்­திய நெல்சன் மண்­டே­லாவின் மறை­வுக்கு உலகத் தலை­வர்கள் தமது அனு­தா­பங்­களை வெளி­யிட்­டு­வ­ரு­கின்­றனர்.

கடந்த ஆறாம் திகதி முதல் தென்­னா­பி­ரிக்­காவின் .ஜொஹன்­னஸ்பேர்க் நகரில் கூடி­வரும் பெரியோர் முதல் சிறியோர் வரை அன்­னா­ருக்கு அஞ்­சலி செலுத்­தி­வ­ரு­கின்­றனர். அத்­துடன் தென்­னா­பி­ரிக்­காவில் துக்க அனுஷ்­டிப்பு காலம் இடம்­பெற்­று­வ­ரு­வ­துடன் கொடிகள் அரைக் கம்­பத்தில் பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளன. இலங்­கை­யிலும் கடந்த 10 மற்றும் 11 ஆம் திக­தி­களில் துக்க தினங்கள் அனுஷ்­டிக்­கப்­பட்­டமை இங்கு குறிப்­பி­டப்­ப­ட­வேண்டும்.

நிற­வெ­றிக்கு எதி­ராக அமைதி வழியில் போராடி பல்­வேறு கொடு­மை­க­ளையும் வேத­னை­க­ளையும் அனு­ப­வித்து வந்த மண்­டேலா பாதிக்­கப்­பட்ட மக்­களின் மீட்­ப­ரா­கவே காணப்­பட்டார்.

நெல்சன் மண்­டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி தென்­னா­பி­ரிக்­காவில் உள்ள குலு என்ற கிரா­மத்தில் பிறந்தார். இவ­ரது தந்தை சோசா பழங்­குடி இன மக்கள் தலை­வ­ராக இருந்­தவர். இவரின் தந்­தைக்கு நான்கு மனை­விகள் என்று கூறப்­ப­டு­கின்­றது. 4 ஆண்­களும் 9 பெண்­க­ளு­மாக 13 பிள்­ளைகள். மூன்­றா­வது மனை­விக்கு மக­னாகப் பிறந்­தவர் தான் மண்­டேலா என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவரின் முழுப்­பெயர் 'நெல்சன் ரோபி­சலா மண்­டேலா'. நெல்சன் மண்­டேலா என்றே பொது­வாக அழைக்­கப்­பட்டார். நெல்சன் மண்­டேலா சிறு­வ­யதில் குத்துச் சண்டை வீர­ரா­கவே அறியப் பெற்று வந்தார்.

கல்­வி­ய­றிவைப் பெறு­வதில் மண்­டேலா கடும் நாட்டம் கொண்­டி­ருந்தார். லண்டன் மற்றும் தென்­னா­பி­ரிக்கா பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளிலும் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்டார். 1941-ஆம் ஆண்டு ஜோகன்­னஸ்பேர்க் சென்று பகுதி நேரத்தில் சட்­டக்­கல்வி கற்­றுள்ளார். மேலும் தங்கச் சுரங்க பாது­காப்பு அதி­கா­ரி­யா­கவும், தோட்ட முக­வ­ரா­கவும் நெல்சன் மண்­டேலா பணி­யாற்­றி­வந்­துள்ளார்.

தென்­னா­பி­ரிக்க நாட்டில் கறுப்­பர்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கி­றார்கள். அந்­நாட்டில் வெள்­ளை­யர்கள் சிறு­பான்­மை­யி­ன­ரா­கவே உள்­ளனர். எனினும் அக்­கா­லத்தில் ஆட்சி அதி­காரம் வெள்­ளை­யர்­க­ளி­டமே இருந்­தது.

இந்­நி­லையில் மண்­டேலா 1939 ஆம் ஆண்டு தனது 21 ஆவது வயதில் கறுப்­பின இளை­ஞர்­களை ஒன்­றி­ணைத்து,கறுப்­பின மக்­களை விழிப்­ப­டையச் செய்­வதில் வெற்றி கண்டார்.

அதா­வது ‘கறுப்­பின மக்கள் அடக்­கப்­ப­டு­கின்­றனர். அவர்­க­ளுக்கு வாக்­க­ளிக்கும் உரிமை மறுக்­கப்­ப­டு­கின்­றது. அவர்கள் பிர­யாணம் செய்­வ­தற்கு அவர்­க­ளு­டைய நாட்­டி­னுள்­ளேயே அனு­மதி பெற வேண்­டி­யுள்­ளது உள்­ளிட்ட விட­யங்­களை முன்­வைத்து அவர் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்ளார்.

1943 ஆம் ஆண்டு ஆபி­ரிக்க தேசிய காங்­கி­ரஸில் சேர்ந்தார் மண்­டேலா. 1948 ஆம் ஆண்டு தென்னா பிரிக்­காவின் ஆட்சிப் பொறுப்­பேற்ற அரசு, கறுப்­பின மக்­க­ளுக்­கெ­தி­ராக முறை­யற்ற நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருந்­தது.

இந்­நி­லையில் இன­வா­தமும் ஒடுக்­கு­மு­றையும் அரசின் ஆத­ர­வுடன் அரங்­கே­று­வதை அறிந்து கொண்ட மண்­டேலா அர­சி­ய­லுக்குள் குதித்தார். கறுப்­பர்­களின் நலனை பாது­காப்­ப­தற்­காக உரு­வான "ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ்" என்ற கட்­சியின் முதன்மை பொறுப்­புக்கு .மண்­டேலா நிய­மிக்­கப்­பட்டார். அதன் தலை­வ­ரான நெல்சன் மண்­டேலா, இன­வெறி பிடித்த வெள்­ளையர் ஆட்­சியை எதிர்த்துப் போரா­டினார்.

இவ­ரது வன்­மு­றை­யற்ற போராட்டம் வளர்ச்­சி­ய­டை­வதைக் கண்ட வெள்­ளையர் அரசு 1956 ஆம் ஆண்டு அர­சுக்கு எதி­ராக புரட்சி செய்தார் என கைது செய்­தது. எனினும் நான்­காண்­டுகள் விசா­ர­ணைக்குப் பின்னர் குற்­றச்­சாட்­டுகள் கைவி­டப்­பட்டு சிறையில் இருந்து வெளி­வந்த மண்­டேலா தீவி­ர­மாகச் செயற்­பட்டார்.

அதன் பின்னர் மீண்டும் போராட்­டங்கள் தொடர்ந்­தன. அவரை கைது செய்­வ­தற்கும் பல தட­வைகள் மீண்டும் முயற்­சிக்­கப்­பட்­டது. சில காலம் மறைந்து வாழ்ந்த நிலையில் தென்­னா­பி­ரிக்க அரசைக் கவிழ்க்க முயன்­ற­தாக அவர் மீது குற்றம் சாட்­டப்­பட்­டது. மீண்டும் கைது செய்­யப்­பட்டு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டது. அந்­த­வ­கையில் மண்­டே­லா­வுக்கு 1964-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் திகதி ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அப்­போது அவ­ருக்கு 46 வய­தாக இருந்­தது. அன்று ஆரம்­பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்­டு­க­ளாகத் தொடர்ந்­த­துடன் 1990 ஆம் ஆண்டு விடு­தலை செய்­யப்­பட்டார்.

சிறையில் இருந்த காலத்தில் மண்­டேலா பல கொடு­மை­களை அனு­ப­வித்­துள்ளார். தனது மனை­வி­யைக்­கூட சந்­திப்­ப­தற்கு அவ­ருக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. இந்­நி­லையில் 1988 ஆம் ஆண்டு கடு­மை­யான நோய் அவ­ருக்கு ஏற்­பட்­டது. நோய் கார­ண­மாக, மர­ணத்தின் எல்­லைக்கே சென்ற மண்­டேலா வீட்­டுச்­சி­றைக்கு மாற்­றப்­பட்டார்.

இந்­நி­லையில் 1990 ஆண்டு மண்­டே­லாவின் விடு­த­லையை முழு உல­கமும் கொண்­டா­டி­யது. விடு­த­லை­யாகி கேப்­டவுன் நக­ருக்கு வந்த மண்­டேலா அங்கு ஆபி­ரிக்க தேசிய காங்­கிரஸ் கட்­சி­யினர் மத்­தியில் பேசினார். அவர் அங்கு கூறி­ய­தா­வது

''இன­வெறி ஆட்­சியை தனி­மைப்­ப­டுத்த சர்­வ­தேச சமு­தாயம் தொடர்ந்து பிர­சாரம் செய்ய வேண்டும். என்­னு­டைய விடு­தலை மட்டும் பேச்­சு­வார்த்­தைக்குத் தேவை­யான அடித்­தளம் ஆகாது. நிற வேறு­பாடு இல்­லாமல் ஜன­நா­ய­க­ரீ­தியில் தேர்ந்­தெ­டுக்­கப்­படும் அமைப்­புதான் நம் நாட்டின் எதிர்­கா­லத்தைத் தீர்­மா­னிக்க வேண்டும். அர­சியல் அதி­கா­ரத்தின் மீது வெள்­ளை­யர்­களின் ஏகா­தி­பத்­தி­யத்­துக்கு முடிவு காண வேண்டும். கறுப்­பர்­க­ளுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அது­வரை போரா­டுவோம்'' என்று அவர் அன்று கூறி­யி­ருந்தார்.

1990 ஆம் ஆண்டு விடு­தலை பெற்ற மண்­டேலா அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்­காவின் முதல் கறுப்­பின ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்றார். ஜனா­தி­ப­தி­யா­னதன் பின்னர் 1998 ஆம் ஆண்டு முதல் தென்­னா­பி­ரிக்கப் பாட­சா­லை­களில் தமிழ், தெலுங்கு, இந்தி, குஜ­ராத்தி, உருது ஆகிய மொழி­களை கற்றுக் கொடுக்க ஏற்­பாடு செய்­தமை முக்­கிய விட­ய­மாக பார்க்­கப்­ப­டு­கின்­றது. தென்­னா­பி­ரிக்­காவின் முத­லா­வது கறுப்­பின ஜனா­தி­ப­தி­யாக 1994 ஆம் ஆண்டு தெரிவு செய்­யப்­பட்ட மண்­டேலா 1999 ஆண்டு பத­வியை விட்டு வில­கி­ய­துடன் இரண்­டா­வது முறை ஜனா­தி­பதி பத­விக்கு போட்­டி­யிட மறுத்­து­விட்டார்.

ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வில­கிய பின்­னரும் உலக மக்­களின் மாபெரும் தலை­வ­ரா­கவும் மனித நேயத்தின் உற்ற நண்­ப­னா­கவும் மண்­டேலா விளங்­கினார்.

தென்­னா­பி­ரிக்­காவில் நிற­வெறி வன்­முறை இடம்­பெற்ற கால­கட்­டத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மற்றும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­ய­வர்கள் ஆகி­யோ­ருக்கு இடையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நோக்கில் தனது விடு­த­லையின் பின்னர் நெல்சன் மண்­டேலா பல முயற்­சி­களை முன்­னெ­டுத்தார். அந்­த­வ­கையில் தென்­னா­பி­ரிக்­காவில் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழுவை நிய­மித்து நல்­லி­ணக்­கத்­துக்கு வழி­கோ­லினார்.

தென்­னா­பி­ரிக்­காவில் செயற்­ப­டுத்­தப்­பட்ட உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வா­னது நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வதில் உல­கத்­தி­லேயே மிகவும் வலு­வான சிறந்த ஆணைக்­கு­ழு­வாக கரு­தப்­ப­டு­கின்­றது. உலக வர­லாற்­றி­லேயே உண்­மை­களை அறிந்து மன்­னித்து இணக்­க­மாக வாழ்­வ­தற்­கான ஒரு சிறந்த முன்­மா­தி­ரி­யாக இந்த முறைமை கரு­தப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் நெல்சன் மண்­டேலா உடல் நலம் பாதிக்­கப்­பட்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி பிரிட்­டோ­ரி­யாவில் உள்ள மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்டார். இந்­நி­லையில் உலகில் மண்­டேலா நல­ம­டைந்து வீடு திரும்ப பிரார்த்­தனை நடத்­தி­வ­ரப்­பட்­டது. எனினும் கடந்த ஐந்தாம் திகதி தனது 95ஆவது வயதில் மண்­டேலா இவ்­வு­ல­கை­விட்டு மறைந்தார். முழு உல­கிலும் ஒரு புது­மையை படைத்­து­விட்டு வெற்­றி­வீ­ர­னா­கவே அவர் உலகை விட்டு மறைந்­துள்ளார்.

மண்­டே­லாவின் சேவையை பாராட்டி அங்­கீ­கா­ரத்தை வழங்­கு­வ­வ­தற்கு உலகம் தவ­ற­வில்லை. உலக சமா­தா­னத்­துக்­காக மண்­டேலா ஆற்­றிய சேவை­களைப் பாராட்டி அவர் சிறையில் இருக்­கும்­போதே இந்­திய அரசு "நேரு சமா­தான விருது" வழங்­கி­யி­ருந்­தமை விசேட அம்­ச­மாகும்.

அத்­துடன் உலகின் மிக உய­ரிய விரு­தாக கரு­தப்­படும் உலக அமை­திக்­கான நோபல் பரிசு 1993 ஆண்டில் இவ­ருக்கு வழங்­கப்­பட்­டது. அத்­துடன் அமைதி மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான மகாத்மா காந்தி சர்­வ­தேச விருது மண்­டே­லா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் 1990ஆம் ஆண்டில் இந்­தி­யாவின் 'பாரத ரத்னா' விருதும் இந்த மனி­த­நே­ய­மிக்க மனி­த­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. .

இந்­நி­லையில் நெல்சன் மண்­டே­லாவின் மறை­வுக்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா, ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின், பிரித்­தா­னிய பிர­தமர் டேவிட் கமரூன், சீன ஜனா­தி­பதி ஸி ஜின்டிங், பிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணியார் உள்­ளிட்ட உலக தலை­வர்கள் அனு­தா­பங்­களை தெரி­வித்­துள்­ள­துடன் அவ­ருக்கு இறுதி அஞ்­ச­லியும் செலுத்­தினர்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி பராக் ஒபாமா நெல்சன் மண்­டே­லாவின் வாழ்வால் ஈர்க்­கப்­பட்ட உல­கி­லுள்ள எண்­ணற்­றவர்களில் தானும் ஒருவர் என குறிப்­பிட்­டுள்ளார்.

அத்­துடன் மண்­டே­லாவின் மறை­வுக்கு அனு­தாப செய்­தியை வெளி­யிட்­டுள்ள ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தென்­னா­பி­ரிக்க சுதந்­தி­ரப்­போ­ராட்­டத்­திற்­கான அவ­ரது துணிச்­சல்­மி­குந்த தலை­மைத்­துவம் முன்­னு­தா­ர­ண­மிக்­கதும் உல­­கெங்­கி­லு­முள்ள சமா­தா­னத்தை விரும்பும் மக்­களை பெரிதும் ஈர்த்­த­து­மாகும் என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் மண்­டே­லாவின் மறை­வினால் துய­ருற்­றுள்ள உலக அர­சியல் தலை­வர்கள் செய்­ய­வேண்­டி­ய­தெல்லாம் இன­வெறி, நிற­வெறி, வன்­முறை, அடக்­கு­முறை அற்ற உல­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தே­யாகும்.

நிற­வெறி அடக்கு முறைக்கு எதி­ராக போரா­டிய மண்­டேலா மறைந்­து­விட்ட நிலை­யிலும் அவரின் எண்­ணங்கள் மற்றும் ஆதங்கம் முழு­மை­யாக நிறை­வே­ற­வில்லை. தென்­னா­பி­ரிக்­காவில் அவரின் கனவு நன­வா­கி­யி­ருந்­தாலும் அவ்­வா­றான சமூக மற்றும் அடிப்­படை மாற்­றங்கள் இடம்­பெ­ற­வேண்­டிய இடங்கள் உலகில் இன்னும் உள்­ளன. நல்­லி­ணக்கம் என்­பது செயற்­பாட்டு ரீதியில் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டிய தேவை இன்னும் உலகில் உள்ளது.

எனவே மண்டேலா கற்றுத்தந்த பாடங்களை கொண்டு உலகில் இன நல்லிணக்கத்தையும் சகோதரத்துவ தேசிய ஒற்றுமையையும் உருவாக்கவேண்டியதே இன்றைய தலைவர்கள் மண்டேலாவுக்கு செய்கின்ற மிகப்பெரிய மரியாதையாக இருக்கும்.

மண்டேலா எதனை எதிர்த்துப் போராடினாரோ எதற்காக தனது வாழ்க்கையில் 27 வருடங்களை சிறையில் கழித்தாரோ அந்தக் காரணங்கள் இன்னும் உலகில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே மண்டேலா எவ்வாறான அமைதியான மற்றும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையுடனான உலகை காண விரும்பினாரோ அதனை நாம் நோக்கி பயணிப்பதே நாம் செய்யவேண்டியதாகும். கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடிய கறுப்பு சூரியன் அஸ்தமித்துவிட்டது. எனவே இதன் பின்னர் உலகம் இருளில் மூழ்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது உலகத் தலைவர்களின் பொறுப்பாகும்

ரொபட் அன்டனி
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல