ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

கடவுளே என்னைக் காப்பற்று.....

செங்குத்தான மலைச்சரிவில் தவறி விழுந்தவன் ஒரு மரத்தின் வேரைப்பிடித்துக்கொண்டு தொங்கினான்.

“கடவுளே என்னைக் காப்பாத்தக்கூடாதா,” என்று ஓலமிட்டான்.



உடனே அசரீரியாய் கடவுளின் குரல் கேட்டது. “பக்தா என்மீது உனக்கு உண்மையிலேயே விசுவாசம் இருக்கிறதா?”

“என்ன ஆண்டவா இப்படிக் கேட்கிற? விசுவாசம் இல்லாமலா என் குடும்பத்தோட வருசா வருசம் உன் கோவிலுக்கு வந்து பூசை செய்றேன்? விசுவாசம் இல்லாமலா என் கம்பெனிக்கு உன் பெயரை வைச்சிருக்கேன்...”

“சரி உண்மையிலேயே என் மேல் நம்பிக்கை இருந்தால் நீ பிடித்துக்கொண்டிருக்கிற அந்த வேரை விட்டுவிடு.

சில நொடிகள் மவுனம். கடவுளுக்கே அவன் என்ன செய்யப்போகிறான் என்று புதிராகிவிட்டது.

அவன் இப்போது மறுபடியும் உ ரக்க ஓலமிட்டான்:
.
.
.

“என்னை வேற யாராவது காப்பாத்தக்கூடாதா...”
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல