மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவினர்கள், “விமானம் கடலில் மூழ்கியது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது; விமானத்தில் பயணிகளாக இருந்த எமது உறவினர்கள் கடத்தப்பட்டு, எங்கோ வைக்கப்பட்டு இருக்கலாம்” என்று கூறிக்கொண்டு உள்ள நிலையில், சீனாவில் அதிர வைக்கும் காரியம் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது.
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் சிலருக்கு, ஆயுள் இழப்பீட்டுக்கான தொகையை கொடுக்க தொடங்கியுள்ளன சில சீன ஆயுள் இழப்பீட்டு நிறுவனங்கள்.
சீன அரசு நியூஸ் ஏஜென்சியான ஸின்ஹூவா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது என்பதால், நம்பவேண்டிய செய்திதான்.
ஆனால், விமானத்தின் பகுதிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. பயணிகள் இறந்திருந்தால், அவர்களது உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை இரண்டும் இல்லாமல் அந்த பயணிகளுக்கு டெத் சர்ட்டிபிகேட்கூட கொடுக்கப்பட முடியாது. அப்படியிருந்து ஏன் இப்படி அவசரகதியில் ஆயுள் இழப்பீட்டு தொகையை கொடுக்கிறார்கள்?
அது ஒரு சந்தேகம்.
மற்றைய சந்தேகம், ஆயுள் இழப்பீட்டு நிறுவனங்கள் அப்படி கொடுத்திருந்தால் (இழப்பீட்டு தொகை மில்லியன் கணக்கில்கூட இருக்கலாம்), அதை சீன அரசு அல்லவா தட்டிக் கேட்க வேண்டும்? “முறையான இறப்பு சான்றிதழ்கூட இல்லாமல் எப்படி இழப்பீடு கொடுக்கிறார்கள்?” என அரசு அல்லவா கேட்க வேண்டும்?
ஆனால், இந்த விஷயம் அரசு நியூஸ் ஏஜென்சி ஸின்ஹூவாவில் செய்தியாக வெளியாகிறது என்றால்-
அதன் அர்த்தம் என்ன?
இந்த செய்தி வெளியே வரவேண்டும் என்று சீன அரசு விரும்புகிறது என்பது புரிகிறது. ‘யாரோ ஒரு பார்ட்டி’க்கு அழுத்தம் கொடுக்கவே இப்படி செய்கிறார்கள் என்பதும் புரிகிறது.
யார் அந்த பார்ட்டி என்பதை சீனா வெளிப்படையாக சொல்ல இன்னமும் வேளை வரவில்லை! (மலேசியா அல்ல)
உலக வரலாற்றில், சமீபகாலத்தில் நடக்கும் மிகப்பெரிய மர்மம் இதுதான்!
விறுவிறுப்பு இணையம்
இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் சிலருக்கு, ஆயுள் இழப்பீட்டுக்கான தொகையை கொடுக்க தொடங்கியுள்ளன சில சீன ஆயுள் இழப்பீட்டு நிறுவனங்கள்.
சீன அரசு நியூஸ் ஏஜென்சியான ஸின்ஹூவா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது என்பதால், நம்பவேண்டிய செய்திதான்.
ஆனால், விமானத்தின் பகுதிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. பயணிகள் இறந்திருந்தால், அவர்களது உடல்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவை இரண்டும் இல்லாமல் அந்த பயணிகளுக்கு டெத் சர்ட்டிபிகேட்கூட கொடுக்கப்பட முடியாது. அப்படியிருந்து ஏன் இப்படி அவசரகதியில் ஆயுள் இழப்பீட்டு தொகையை கொடுக்கிறார்கள்?
அது ஒரு சந்தேகம்.
மற்றைய சந்தேகம், ஆயுள் இழப்பீட்டு நிறுவனங்கள் அப்படி கொடுத்திருந்தால் (இழப்பீட்டு தொகை மில்லியன் கணக்கில்கூட இருக்கலாம்), அதை சீன அரசு அல்லவா தட்டிக் கேட்க வேண்டும்? “முறையான இறப்பு சான்றிதழ்கூட இல்லாமல் எப்படி இழப்பீடு கொடுக்கிறார்கள்?” என அரசு அல்லவா கேட்க வேண்டும்?
ஆனால், இந்த விஷயம் அரசு நியூஸ் ஏஜென்சி ஸின்ஹூவாவில் செய்தியாக வெளியாகிறது என்றால்-
அதன் அர்த்தம் என்ன?
இந்த செய்தி வெளியே வரவேண்டும் என்று சீன அரசு விரும்புகிறது என்பது புரிகிறது. ‘யாரோ ஒரு பார்ட்டி’க்கு அழுத்தம் கொடுக்கவே இப்படி செய்கிறார்கள் என்பதும் புரிகிறது.
யார் அந்த பார்ட்டி என்பதை சீனா வெளிப்படையாக சொல்ல இன்னமும் வேளை வரவில்லை! (மலேசியா அல்ல)
உலக வரலாற்றில், சமீபகாலத்தில் நடக்கும் மிகப்பெரிய மர்மம் இதுதான்!
விறுவிறுப்பு இணையம்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக