செவ்வாய், 8 ஏப்ரல், 2014

குழந்தையின் அழுகையை நிறுத்த பாலுடன் மதுபானத்தை கலந்து கொடுத்த தந்தை - குழந்தை மரணம்; தந்தை கைது

3 மாத பால­க­னான மகனின் அழு­கையை நிறுத்த அவ­னுக்கு புட்­டிப்­பாலில் மது­பா­னத்தை கலந்து அருந்தக் கொடுத்து அவனைக் கொன்ற குற்­றச்­சாட்டில் தந்­தை­யொ­ருவர் கைதுசெய்­யப்­பட்ட சம்­பவம் பொலி­வி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.



லா பாஸ் நகரில் எல் அல்டோ பிர­தே­சத்தைச் சேர்ந்த அகா­சியோ எஸ்ராடா (37 வயது) என்ற தந்­தையே, தனது 3 மாத மக­னான கார்­லோ­வுக்கு பாலுடன் மது­பா­னத்தை கலந்து வழங்கி அவ­னது மர­ணத்­துக்கு கார­ண­மாக இருந்­த­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.

சம்­பவ தினம் அகா­சியோ மது­பானம் அருந்திக் கொண்­டி­ருந்­த­ வேளை குழந்தை தொடர்ந்து அழுது கொண்­டி­ருந்­ததால் அவர் கடும் மன அழுத்­தத்­துக்­குள்­ளாகியுள்ளார்.

இந்­நி­லையில் குழந்­தையின் அழு­கையை நிறுத்தும் முக­மாக அவர் பால்போத்தலில் மது­பா­னத்தை கலந்து குழந்தைக்கு வழங்­கி­யுள்ளார்.

சம்­பவம் இடம்­பெற்­ற­போது குழந்­தையின் தாயா­ரான சில்­வியா வேலைக்குச் சென்­றி­ருந்தார்.

வீடு திரும்­பிய சில்­வியா தனது குழந்தை மர­ண­ம­டைந்­தி­ருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

இந்­நி­லையில் அவர் குழந்­தையின் பால் போத்தலை சந்­தே­கத்தில் முகர்ந்து பார்த்­த­போது அதில் வித்­தி­யா­ச­மான மணம் வெளிப்­ப­டு­வதை உணர்ந்து அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்தே அகா­சியோ குழந்­தைக்கு பாலில் மது­பா­னத்தை கலந்து வழங்­கி­யுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டது.

தற்­போது கைதுசெய்­யப்­பட்­டுள்ள அகா­சியோ சிறைத்­தண்­ட­னையை எதிர்­நோக்­கி­யுள்ளார்.

மிகக் குறைந்த அள­வி­லான அற்ககோலே குழந்தையொன்றின் சுவாசம் மற்றும் குருதிக் குளுக்கோசு மட்டம் என்பவற்றை பாதித்து உயிராபத்தை விளைவிக்கக்கூடியது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல